பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சனிக்கிழமையில் திருமணமா ???

22.09.2012 செந்துறை ஒன்றிய திராவிடர் கழக தலைவர் ராமச்சந்திரன் அவர்களது மகள் இலக்கியா - அன்பரசன் திருமணத்தை, தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் நடத்திவைத்தார்கள்.

வழக்கமான பகுத்தறிவு திருமணம் என்பதை தாண்டி, புரட்
டாசி மாதத்தில் நடைபெற்ற திருமணம். புரட்டாசி மாதத்தில் திருமணம் செய்யமாட்டார்கள். அதிலும் சனிக்கிழமையில் செய்யவே மாட்டார்கள்.

சனிக்கிழமை இந்துக்களுக்கு ஆகாத நாள் ( நாம் இந்துக்கள் கிடையாது, திராவிடர்கள், தமிழர்கள்.). குறிப்பாக எங்கள் பகுதியில், சனிக்கிழமை புதுக்கோடியே ( புதுத்துணி ) கட்டக் கூடாது என்பது ஐதீகம் ( அவாள் பாஷையில் ). புதுத்துணியே கட்டக்கூடாது என்றால் திருமணம் செய்யவே கூடாது.

அதை முறியடித்து, மற்றவர்களுக்கு பகுத்தறிவை புகட்ட, தம் வாழ்வில் செயல்படுத்திக்காட்டிய மணமக்களுக்கும், மணமக்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

# பின்குறிப்பு : நானும் சனிக்கிழமையில் தான் திருமணம் செய்தவன், மற்றவர்களுக்கு மாத்திரம் பகுத்தறிவு பாடமல்ல ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக