பிரபலமான இடுகைகள்

வியாழன், 13 செப்டம்பர், 2012

இளைஞரணி நேர்காணல்

11.09.2012 காலை, இளைஞரணி தலைமையகமான அன்பகத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. காலை முதல் தஞ்சை, நாகை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குவியத்தொடங்கினர்.

முதல் மூன்று
 மாவட்டங்கள் முடிந்து, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களை அழைக்கும் போது நண்பகல் ஆகிவிட்டது. மாநில துணை செயலாளர்கள் மா.சுப்ரமணியன், இராஜேந்திரன், சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகர், ஜின்னா ஆகியோர் உடன் இருந்தனர்.

மா.சு அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்குகிறார். வயது உறுத்திப்படுத்துவதற்கான சான்றிதழை இராஜேந்திரன் சரிபார்க்கிறார். வருகின்ற ஒவ்வொருவர் குறித்தும் சிறுகுறிப்பினை சுபா.சந்திரசேகர் சொல்கிறார். எடுத்து வருகிற புகைப்படங்கள், துண்டறிக்கைகளை சரிபார்த்து தளபதியிடம் காட்டுகிறார் ஜின்னா.

எப்போதிலிருந்து உறுப்பினர், பொறுப்பு ஏதும் வகிக்கிறீர்களா, கல்வித்தகுதி என்ன, தொழில் என்ன, போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறீர்களா, நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறீர்களா என சில கேள்விகள்.

வயது சான்றிதழ் குறித்து சந்தேகம் எழுந்தால் தளபதி அவர்களிடமே காட்டப்படுகிறது. நிகழ்ச்சிகள், போராட்டங்கள் குறித்த புகைப்படங்களையும் தளபதி அவர்கள் பார்த்து விளக்கம் கேட்டுக்கொள்கிறார்.

தொழில் குறித்த கேள்வியை தளபதியே கேட்கிறார்கள். ஒருவர் பள்ளிக்கூடம் நடத்துகிறேன் என்று சொன்னபோது, இந்தப் பொறுப்பிற்கு வந்தால் உங்களுக்கு அரசால் பாதிப்பு ஏற்படதா என்று கேட்கிறார்.

தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன் என்று சொன்னவரிடம், பொறுப்புக்கு வந்தால் எப்படி சமாளிப்பீர்கள் என்று கேட்டார். வேலையை விட்டுவிடுவேன் என்று சொல்ல, இல்லையில்லை வேலையை விட்டுவிடாதீர்கள், வருமானம் இல்லாமல் சிரமப்படுவீர்கள் என்று அறிவுரை கூறினார்.

ஒருவர் முன்னாள் ஒன்றிய செயலாளர் மகன் என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பதை பார்த்துவிட்டு, அவர் தந்தை நலன் குறித்து கனிவோடு விசாரிக்கிறார். இப்படி ஒரு அன்பான சூழ்நிலையில் நேர்காணல் 21பேருக்கு நடந்தேறியது.

காலை துவங்கி நண்பகல் வரை நேர்காணல் நடைபெற்றாலும் தளபதி அவர்கள் அயர்ச்சி இல்லாமல் காணப்படுகிறார். மதிய உணவுக்குப் பிறகு ,மீண்டும் மாலை நான்கு மாவட்டங்களுக்கு நேர்காணல் தொடரும்.

காரில் ஏறுமுன், "ஊருக்கு எப்போது கிளம்புகிறீர்கள் ", எனக் கேட்கிறார். " உடனே கிளம்புகிறேன், நாளை ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இராஜேந்திரன் மகள் திருமணத்தில் கலந்து கொள்ள" என்றேன். " எனது வாழ்த்துகளையும் தெரிவியுங்கள்" என்கிறார்.

# தளபதியின் பாச உணர்வு... கழகத்தின் பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக