பிரபலமான இடுகைகள்

சனி, 20 டிசம்பர், 2014

மலேசியத் தமிழர்களும், பத்துமலை முருகனும்


பத்துமலை முருகன். மலேசியாவின் அடையாளம் இவர் என சொல்லும் அளவுக்கு, வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் இவரை பார்க்க குவிகிறார்கள். நானும் போய் பார்த்தேன், இந்த ஃபோட்டோ போடுவதற்காகவே.

               

இன்னொன்னு நான் தங்கி இரூக்கும் அறை அவர் கோவிலுக்கு பின்னால் தான். பில்லா-2 படத்தில் அஜித் டான்ஸ் ஆடும் போது பின்னால் விஸ்வரூபம் போல் நிற்பாரே அவரே தான். இவரது உயரம் 140 அடி.

மலேசியத் தமிழர்களுக்கு இவர் மீது அவ்வளவு பிரியம். இங்கு கொண்டாடப் படும் தைப்பூசம் மிகப் பிரசித்தி பெற்றது. தமிழர்கள் மாத்திரம் இல்லாமல், மலாய் மக்களும் வருகிறார்கள்.


எல்லா மதத்தவரும் வருகிறார்கள். இவர் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். பெரும் சுற்றுலாத் தளமாகி விட்டது. அருகிலேயே மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் நெடுஞ்சாலை இருப்பதால் வசதி.

அருகிலே ஓடும் ஆற்றின் பெயரால் இந்த மலைக்கு பத்து மலை என்று பெயர் வந்திருக்கிறது. மலை மீது வழக்கம் போல் முருகன் குடி கொண்டுள்ளார். படி ஏறிப் போய் அவர் தரிசனம் பெறுகிறார்கள்.

மலை மீதுள்ள இந்தக் கோவிலை தம்புசாமிபிள்ளை என்ற மலேசியத் தமிழர் கட்டியுள்ளார். அதற்கு பிறகு 2006 ஆம் ஆண்டு, மலைக்கு முன்பாக இந்த உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சிலையை வடிவமைத்தவர் தியாகராஜன் என்ற திருவாரூரை சேர்ந்த சிற்பி. மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது. முருகன் தங்கப் பூச்சு பூசப்பட்டு தகதக என மின்னுகிறார்.

இவருக்கு அடுத்து பினாங்கில் உள்ள தண்ணீர்மலை முருகன் கோவில் பிரசித்தியானதாம். பெரும்பாலும் மலேசியத் தமிழர்கள் வழிபடுவது முருகக் கடவுளை தான். அதனால் பரவலாக முருகன் கோவில் மலேசியா முழுதும் உள்ளது.

தமிழ் கடவுள் முருகன் என்பதை மலேசியத் தமிழர்கள் மறக்கவில்லை. நம்ம ஆளுங்க தான் திருப்பதி, சபரிமலை போய் காசக் கொட்டிட்டு வர்றது. இவங்கள பார்த்தாவது திருந்தனும்.

சின்னப்பா தேவர் இருந்திருந்தா, இங்க ஒரு படம் எடுத்து, இப்படி ஒரு பாட்டு போட்டிருப்பாரு...

# பத்துமலை மாமணியே முருகய்யா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக