பிரபலமான இடுகைகள்

பிரதமர் கனவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதமர் கனவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜனவரி, 2013

அம்மா, மோடி கனவு தொடரட்டும்....

மோடியின் பிரதமர் கனவை களவாட முயற்சிக்கும் ஜெயலலிதாவின் நாடகம் தான், தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தை புறக்கணிப்பு உதார்.

மோடியை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பிகார்  முதல்வர் நிதிஷ்குமார் ஏற்றுக் கொள்ளமாட்டார். தனக்கு இடையூறாக இருக்கும் நிதிஷை வெளியேற்ற மோடியும் திட்டமிடுகிறார்.

பா.ஜ.கவின் தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோருக்கும் ஆசை தான். ஆனால் மோடி போல, குஜராத்  குறிப்பிட்ட ஆதரவுத் தளம் இல்லை. இந்துத்துவா வெறி ஏற்ற மோடி வித்தை தான் உதவும் என்பதால் பேசவும் முடியாது. 

இப்படி பா.ஜ.க-விற்குள்ளும், கூட்டணிக்குள்ளும் மோடிக்கு இருக்கும் எதிர்ப்புகளால், எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக ,குஜ்ரால், தேவகௌடா போல ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்பது தான் ஜெ-வின் திட்டம். அதற்கு இணக்கம் காட்ட தான், மோடியின் பதவியேற்பில் பங்கேற்று காட்டிய பாசம்.

மத்தியஅரசு ஆட்சி அமைப்பில் முக்கிய பங்காற்ற வேண்டிய, உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிலை தான் பரிதாபம். ஒரு காலத்தில் இந்திய அரசியலை ஆட்டிப் படைத்த மாநிலம். இங்கு பெரும்பான்மை எம்.பி-களை கைப்பற்றி விட்டால், கூட்டணி பலமே தேவையிருக்காது.

543 எம்.பி-களில் 80 எம்.பிக்கள் உத்தரபிரதேசம் தான். அதனால் தான் இந்த மாநிலத்தை தன் கைக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென்று ராகுல்காந்தி தலைகீழாக நின்று முயற்சித்தார்.

ஆனால் சோகம், அவரால் அங்கு துரும்பையும் அசைக்க முடியவில்லை. ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க-வாலும் தலை தூக்க முடியவில்லை. 

முலாயம்சிங் யாதவும் (எஸ்.பி), மாயாவதியும்(பி.எஸ்.பி) மாறி மாறி, மியூசிக்கல் சேர் ஆட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங், எஸ்.பி, பி.எஸ்.பி கட்சிகள் தலா 21,23,21, பாஜ.க கூட்டணி 15 இடங்களும் பிடித்தார்கள். இப்போதும் இதையே பிடித்தால் போதும் என்ற மனநிலையில் தான் இருப்பார்கள்.

அடுத்து அதிக எம்.பி தொகுதிகளை வைத்திருக்கிற மாநிலங்கள் : மகராஷ்டிரம் 48, மேற்கு வங்கம் 42, ஆந்திரா 42, பிகார் 40, தமிழ்நாடு 39.

மகராஷ்டிரத்தில் காங்+பவார் காங், பா.ஜ.க+சிவசேனா இடையே இழுபறி கதைதான். இதில் சிவ்சேனாவிற்கு மோடி மீது விருப்பம் இல்லை.

மேற்கு வங்கத்தில் மம்தாபானர்ஜி சட்டமன்ற தேர்தலை போல் ஸ்வீப் அடிக்கலாம் என்ற ஆசை. கம்யூனிஸ்டுக்கு கைநழுவிய வங்கத்தை எம்.பி தேர்தலில் மீட்க ஆசை. மம்தாவிடம் ஏற்கனவே 19 எம்.பிக்கள், இப்போது கூட செய்யும்.

ஆந்திராவில் கடந்த தேர்தலில், ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் உழைப்பில் கிடைத்த 33 எம்.பி-க்கள் தான் மத்திய காங் அரசின் அடித்தளமே. ஆனால் இப்போது ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி என்ற புயல் வீச உள்ள நிலையில் காங் எங்கு தரைதட்டும் என்று தெரியாத நிலை.

பிகாரில் நிதிஷ் வசம் 20 எம்.பி-களும், அவரது துணையால் பா.ஜ.க வசம் 12 எம்.பி.களும் உள்ளனர். நிதிஷ் கை தான் மீண்டும் ஓங்கும் நிலை.

39 எம்.பி.கள் கொண்ட தமிழகத்தின் ஆதிக்கம் தான் 1999-லிருந்து மத்திய அரசியலில் தொடர்கிறது. 

இந்த முறை பெரும்பான்மையான எம்.பி.களை கைப்பற்றினால், பிரதமர் அல்லது துணைபிரதமர் என்ற கனவில் ஜெ உள்ளார். 

தமிழகம் இருளாக இருப்பதால், அம்மா தூக்கம் கலையாமல், கனவு சிதறாமல் மூழ்கியுள்ளார்.

இன்னும் பதினோரு பெரிய மாநிலங்கள் உள்ளன, தொடர்ந்து பார்ப்போம்...

அது வரை அம்மா, மோடி கனவு தொடரட்டும்....

மோடியின் வெற்றியும், பிரதமர் கனவும்...

மோடியின் வெற்றி செய்தி வர பா.ஜ.க-வினர் உற்சாக கனவில் திளைக்க ஆரம்பித்தனர். இருந்த ஆட்சியை தக்க வைத்தாக வே இருந்தாலும், மூன்றாவது முறை ஆட்சியை பிடித்ததால் இந்தக் கனவு.

வெற்றிக்கு பிறகான கொண்டாட்டங்களின் போது, மோடியின் ஆதரவாளர்கள் “ இது ட்ரெயிலர் தான், 2014-ல் தான் மெயின் பிச்சர்” என ரஜினியின் பிரபல பன்ச் டய்லாக்கை முழங்கினர்.

“ இது நல்ல ஆட்சிக்கும், வளர்ச்சி பணிகளுக்கும் கிடைத்த வெற்றி. 1980-களின் சாதிய மற்றும் குறுகிய கண்ணோட்டத்தை மக்கள் கைவிட்டுவிட்டனர் ”.
 
மோடியின் வெற்றி முழக்கத்தை கேட்ட அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாக வெள்ளம்.“ சி.எம் 2012-ல், பி.எம் 2014-ல்”, “ Hit & Fit for P.M “ என கோஷங்கள் விண்ணை தொட்டன.

ஆனால் மோடி மிக அடக்கமாக சொன்னார்,” நீங்கள மிகவும் விரும்பினால், டெல்லிக்கு செல்கிறேன், வருகிற 27ந் தேதி “. உளக்கிடக்கையை மறைக்க இயலாமல்.

ஹிந்தியில் உரையாற்றிய மோடியை, அவரது ஆதரவாளர்கள் தாய்மொழி குஜராத்தி மொழியில் பேச வற்புறுத்தினர். தேர்தல் பிரச்சாரம் முழுவதும் குஜராத்தியில் பேசியவர், எப்போதாவது தான் சிறிதளவு ஹிந்தியில் சிறிது பேசக் கூடியவர்.

அதற்கு மோடி அளித்த பதில், “ நான் ஹிந்தியில் பேசுவதை கேட்க, நீங்கள் இனி பழகிக் கொள்ள வேண்டும்.”  குஜராத்தில் ஹிந்தி தேவையில்லை, ஆனால் டெல்லி தேவைக்கு தயாராகிறார்.

இந்த தேர்தல் வெற்றி, தொடர் வெற்றியாக இருந்தாலும் மோடிக்கு குஜராத் போர் அடித்துவிட்டது. இந்த வெற்றிக்கு அவர் பட்ட பிரம்ம பிரயத்தனம் அவருக்கு தான் தெரியும்.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி கட்டத்தில் மோடியின் ஹைடெக் பிரச்சாரம் வெளிப்பட்டது, 3-D பிரச்சாரம். முதற் கட்டமாக அகமதாபாத், ராஜ்காட், வடோடரா, சூரத் ஆகிய நகரங்களில் துவங்கியது.

ஹோலோகிராபிக் தொழில் நுட்பத்தின் மூலம் திரையில் தோன்றுகிற மோடியின் உருவம் நேரடியாக தோன்றி பேசுவது போல இருக்கும். குஜராத்தின் நான்கில் ஒரு பங்கு வாக்காளர்கள் 19-29 வயதுக்கு உட்பட்டவர்கள்.

அந்த இளைய சமுதாயத்தை குறி வைத்தே இந்த ஹைடெக் பிரச்சாரம். முதல் நாள் பிரச்சாரத்திற்கே 65 கோடி செலவு செய்ததாக  குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் மோடி, “ தேர்தலில், உலகத்திலேயே முதல் முறையாக இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறவன் நான் தான். அதனால் பொறாமையில் பேசுகிறார்கள்”, என ஒதுக்கி தள்ளினார்.

ஆனால் மோடிக்கு தான் தெரியும் வெற்றியின் உண்மை முகம், அவருடைய கடந்த அமைச்சரவையில் இருந்த அய்ந்து அமைச்சர்கள் தோல்வியை தழுவியது.

குஜராத்தின் வளர்ச்சி கோஷம், இளைய தலைமுறையின் ஹைடெக் ஆதரவு, நகர்புற மத்திய வர்க்கத்தின் ஆதரவு, ஹிந்துத்துவா மோகம், வருங்கால பிரதமர் என்ற முழக்கம் என்ற சர்க்கஸ் விளையாட்டை திறமையாகக் கையாண்டார்.

முக்கியமாக காங்கிரஸின் தேறாத மாநிலத் தலைமை ( அதுக்கென்று, மத்திய தலைமை எப்புடின்னு கேட்டுடாதீங்க..) 

வெற்றி கண்டார். வெற்றி, வெற்றிதான். குறிப்பாக மோடியின் வெற்றிதான். 

ஆனால் பிரதமர் கனவு,,,,,,