பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

சபாநாயகர் தேர்வு - பதவியேற்பு - நிகழ்வுகள்

சட்டப் பேரவையின் புதிய தலைவராக தனபால் பொறுப்பேற்றார்.

முன்னாடி தனபாலு மேசைய தட்டிகிட்டிருந்தத, ஜெயக்குமாரு வேடிக்க பார்த்தாரு. இன்றைக்கு Ex ஜெயக்குமாரு தட்டிக்கிட்டிருந்தத, தனபால் வேடிக்க பார்த்தாரு....

ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது

# மாற்றம் விரும்பிய மக்களே !

                ********    ******* ******

புதிய சபாநாயகராக திரு.தனபால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, மரபுப்படி ஆளுங்கட்சி அவை முன்னவர் ஓ.பி.எஸ் அவர்களாலும், எதிர்கட்சி துணை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களாலும் பேரவைத்தலைவர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். மரபுப்படி காலில் விழும் வைபவம். 

மு.சபா ஜெயக்குமாரை தேடினேன், ஜெ-க்கு பின்புறம் நான்காவது வரிசையில் கம்பீரமாக அமர்ந்து, ஓங
்கி மேசையை தட்டிக் கொண்டிருந்தது கொள்ளை அழகு. இடது ஓரம், மூன்றாவது வரிசையில், செங்க்ஸும், சி.வி.எஸ்ஸும் அமர வைக்கப்பட்டிருந்தனர், பாவமாக.

ஒவ்வொரு கட்சி சார்பிலும் புதிய சபா-வை வாழ்த்தி பேசும் மரபு. பண்ருட்டி வழக்கம் போல் மயிலிறகால் விசிறி விட்டார். கழகத்தின் சார்பில் தளபதி அவர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

" தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து, 1946ல் முதல் சபாநாயகராக தேர்வு பெற்ற சிவசண்முகம் பிள்ளை, தலைசிறந்த சபாநாயகராக போற்றப்பட்டார். பல நல்ல முன்னுதாரனங்களை ஏற்படுத்தியவர். அதே போன்று தாங்களும் பணியாற்றி பாராட்டு பெற வேண்டும்" என பாராட்டினார்.

" அண்ணா சொன்னது போல, பூனை தனது குட்டிகளை எவ்வாறு கவ்வி செல்லுமோ, அது போல சபாநாயகர் எதிர்கட்சி உறுப்பினர்களிடம் நடந்துக் கொள்ளவேண்டும். எலியை கவ்வுவது போல நடந்துக் கொள்ளக் கூடாது. சிறப்பாக சபையை நடத்த திமுக ஒத்துழைக்கும்" என்று சிறு மாச்சர்யம் தைஇல்லாமல் கண்ணியமாக பேசி அமர்ந்தார்.

அதற்கு பிறகு பேசிய மற்ற கட்சித் தலைவர்கள், புதிய சபா-வை வாழ்த்தும் சாக்கில் ஜெ-வை வாழ்த்தியதில்....





 
 சட்டமன்றத்தில் படமாக இருக்கின்ற அண்ணல் காந்தி, அம்பேத்கார், தந்தை பெரியார் ஆகியோரின் ஒட்டு மொத்த உருவமாக புரட்சித்தலைவி இருக்கிறார் " - குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன்.

" காந்தி, அம்பேத்கார், பெரியார், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், வ.உ.சி ஆகியோரின் சமூக சீர்திருத்த எண்ணங்களை நிறைவேற்றி வருபவர் புரட்சித்தலைவி " - கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு.

இன்று சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை புகழ்வதில் நடந்த போட்டியில் ஆறுமுகம் ( இ.கம்யூ ), ஜவாகிருல்லா ( ம.ம.க), டாக்டர்.கிருஷ்ணசாமி, சரத்குமார், கதிரவன்( பார்வர்ட் பிளாக்), தனியரசு, செ.கு.தமிழரசன் ஆகியோரில் தனியரசும் தமிழரசனும் இறுதி சுற்றுக்கு வந்தனர். 


இன்று தனியரசே வெற்றி பெற்றார். இதில் ஜெ-வின் புன்முறுவலை பெற்றது, சரத்தின் பேச்சு.

தேவையில்லாமல் தளபதி அவர்களின் பேச்சை மேற்கோள் காட்டிய சரத், " சமயத்தில் பூனை எலியையும் கவ்வ வேண்டும் " என நக்கல் செய்து சபாநாயகருக்கு கடுமையாக இருக்க அறிவுரை வழங்க, ஜெ-வுக்கு சிரிப்பு, மேசை தட்டல்.

அடுத்து சபா-வை ஜெ வாழ்த்தி பேசினார், தனது பெருமைகளை அடுக்கி.

நாற்காலி நுனியில் அமர்ந்து, ஜெ வாழ்த்தி பேசும்போதெல்லாம், வணங்கி, வணங்கி, நெளிந்து, நெளிந்து, மாண்புமிகு.தனபால், தனது சபாநாயகர் பணியை தெளிவாக துவங்கினார்.

" சட்டசபையில் திட்டமிட்டு கலவரம் செய்தால் ஏற்கமுடியாது. அதை கடுமையாக தடுப்பது சபாநாயகரின் கடமை " என்று தனது பேச்சை ஜெ முடித்தார். சபை நிகழ்வுகள் அமைதியாக நடந்துக் கொண்டிருக்கும் , இந்த நேரத்தில் , ஜெ-வின் பேச்சு எதற்கோ அச்சாரமாகத் தோன்றுகிறது.

கண்ணியமாகப் பேசிய தளபதி எங்கே ?, தேவையில்லா சரத்குமார் பேச்சுக்கு புன்முறுவல் காட்டி, கலவரம் பேசிய ஜெ எங்கே ?

# மாறாதய்யா.. மாறாது... மணமும், குணமும் மாறாது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக