பிரபலமான இடுகைகள்

சனி, 1 டிசம்பர், 2012

தளபதியின் தலைமைப் பண்பு


தனக்கு தளகர்த்தர்களாக இருக்கின்றவர்களின் உழைப்பை அங்கீகரிப்பது, பாராட்டுவது தலைமைப் பண்பு. அதனையும் மற்றோர் அறிய பாராட்டுவது உயரியப் பண்பு..

பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் வரிசையில் தளபதி அவர்கள் தனது தலைமைப் பண்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மறைமலை நகரில், சமீபத்தில் நடந்த மாநில இளைஞரணி கூட்டம் முடிந்து காரில் ஏறிய தளபதி அவர்கள், முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் அவர்களிடத்திலும், எம்.பி சுகவனம் அவர்களிட்த்திலும், “ மாநில துணை அமைப்பாளர்களான உங்களுக்கு நன்றி கூற தவறிவிட்டேன் ”  என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு அவர்கள் உங்களோடு இணைந்துப் பணியாற்றுகிற எங்களுக்கு நீங்கள் நன்றி சொல்வதா ? உங்களுக்கு கிடைக்கிற பாராட்டே எங்களுக்குமானது “, என பதிலளித்திருக்கின்றனர்.

ஆனால் மறுநாள் முரசொலியில் நன்றி! நன்றி!! நன்றி காட்டுவேன் !!! என்ற தலைப்பில் ஒரு நன்றி கடிதம் எழுதிவிட்டு தான், மன நிம்மதி அடைந்திருக்கிறார் தளபதி .  

இளைஞர் அணியின் மாநிலத் துணைச் செயலாளர்களான நண்பரகள் மா.சுப்ரமணியன், இ.ஜி.சுகவனம், சேலம் இராஜேந்திரன், சுப.த.சம்பத், அசன் முகமது ஜின்னா, இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் இந்தக் கருத்தரங்கம் வெற்றி பெற பலநாட்கள் மறைமலைநகரில் இருந்து இரவுப் பகலாக மேற்பார்வையிட்டனர்.

மாநிலத் துணைச் செயலாளர்களில் ஒருவரான சுபா.சந்திரசேகர் அவர்கள் அமைதியோடும், அடக்கத்தோடும், ஆரவாரமின்றி ஓடியாடிப் பணியாற்றக்கூடியவர்.

இந்தக் கருத்தரங்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அவரது தந்தையும், ஜெயங்கொண்டசோழபுரம் பேருராட்சி முன்னாள் தலைவராகவும், ஒன்றிய், பேரூர் அளவில் கழகப் பொறுப்புகள் வகித்தவருமான கவிஞர் அ.சுபா (எ) சுப்பையா அவர்கள் 15-11-2012 அன்று மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

இந்நிலையில் அவர் கருத்தரங்கப் பணிக்கு வர இயலவில்லை; கருத்தரங்கப் பணி காரணமாக நானும் நேரில் சென்று விசாரிக்க இயலவில்லை என்ற ஏக்கத்தோடு, தொலைபேசி மூலம் சுபா.சந்திரசேகர் அவர்களிடம், அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொன்னதோடு, விரைவில் நேரில் வந்து விசாரிப்பதாகத் தெரிவித்தேன்.

சுபா.சந்திரசேகர் இளைஞர் அணியின் எந்த நிகழ்ச்சியானாலும் என்னோடு நிழலாக வரக்கூடியவர் பணியாற்றக்கூடியவர். ஆனால் அவரது தந்தை கவிஞர் சுபா மறைவெய்தியதையொட்டி மறைமலை நகர் நிகழ்ச்சியில் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை என்று கடிதத்தில் தளபதி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

கடிதத்தில் கூறியிருந்தவாறு மறந்த கவிஞர் சுபா அவரகள் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற கடந்த 23.11.2012 அன்று காலை சென்னையிலிருந்து கிளம்பினார்கள் தளபதி.

இடையில் வீரபாண்டியர் மறைவுற்ற செய்தி கேட்டு நேராக சேலம் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதனால் அன்று, தளபதி அவர்களால் வர இயலவில்லை.

இன்று சென்னையிலிருந்து காரில் ஜெயங்கொண்டம் வருகை தந்து கவிஞர் சுபா குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பிறகு இங்கிருந்து தஞ்சை சென்றார், நாளை நடைபெறவுள்ள மாநில இளைஞர் அணி நிகழ்ச்சியில் பங்கேற்க.

இந்த ஆறுதல் கூறும் நிகழ்ச்சிக்காக, இன்று அவர் காரில் பயணம் செய்த தூரம் 350 கி.மீ.

நன்றி சொல்லத் தவறியதற்கு வருந்தி, அதற்காக நன்றி கடிதம் எழுதி, வர இயலாமல் போன சுபா.சந்திரசேகர் அவர்களது பண்புகளை குறிப்பிட்டு, அவரது இல்ல துக்கத்தில் பங்கேற்க தனது சிரமத்தை பொருட்படுத்தாமல் வருகைப் புரிந்து ஆறுதல் கூறியிருக்கிறார் தளபதி.

# தளபதியின் தலைமைப் பண்பு, உயரியப் பண்பு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக