பிரபலமான இடுகைகள்
-
மாறி வரும் இந்திய சூழலும், சட்டமன்ற உறுப்பினர்களும் என்ற தலைப்பில் IIMB -ல் பணிபுரியும் பேராசிரியர் ராஜிவ் கௌடாவின் உரை புதிய தகவல்களை தந்த...
-
சாண்டிப் புயல் அமெரிக்காவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் அதிபர் தேர்தலுக்கான உச்சக் கட்ட பிரச்சாரம். தற்போதைய அதிபர் ஒபாமா உச...
-
அண்ணன் பன்னீர்செல்வம்.... அ.திமு.க-வின் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர். 1996-லிருந்து தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் ஒன்றிய செயலாளர். அதே போல 19...
புதன், 1 மே, 2013
நியாயங்களும் மாறத் தான் செய்கின்றன....
நடைப்பயிற்சி, வியர்வை வரும் அளவு வேகமாக...
ஒரு மணி நேர பயண கெடு முடியும் தருவாய். வெயில் தாழ்ந்திருந்தாலும் இன்னும் வெக்கை குறையவில்லை.
லேசாக இருள் சூழ ஆரம்பித்திருந்தது. தெரு விளக்குகள் மின்ன துவங்கியிருந்தன. சின்ன கடைகள் நிரம்பிய தெரு. யார் கண்ணிலும் படாமல் சற்று ஒதுங்கி நடந்தேன்.
அகலமான சாலை, கடைகள் இல்லாத பிரதேசம், நடமாட்டமும் அவ்வளவு கிடையாது. அடித்துக் கொண்டிருந்த மொபைலை தவிர்த்து நடந்துக் கொண்டிருக்கிறேன்.
பின்னாலிருந்து தொடர்ந்து ஹாரன் சத்தம். ஏதோ பைக் ஹாரன் சத்தம். சாலையில் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஏன் இப்படி ஹாரன் என்று கோபம் வந்தது.
இடதுபுறம் ஒதுங்கவும் இடம் இல்லை, வலதுபுறம் சாலையில் சிறு பள்ளம். பைக் சற்று பிரேக் அடித்து வரலாம். இருப்பினும் வேகமாக நடந்து வழிவிட்டேன்.
கடந்த பைக் பார்த்து இன்னும் கோபம் வந்தது, நான்கு பேர் பயணம் செய்தனர். ஒரு ஆண், இரண்டு பெண்கள், ஒரு சிறுவன்.
ஒரு பெண்னின் கையில் கைக்குழந்தை...
கோபம் வடிந்தது, நான் இன்னும் சற்று முன்னர் ஒதுங்கி, வழி விட்டிருக்கலாம் என்று தோன்றியது.
# நியாயங்களும் மாறத் தான் செய்கின்றன....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக