
பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
விஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...
-
கடந்த வருடம் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் பயிலும் 20 மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுகிறது. அவர...
ஞாயிறு, 29 மார்ச், 2015
பைக் என்ப ஏனை சைக்கிள் என்ப...

சனி, 28 மார்ச், 2015
தோசைக்கல் மேல் குவியலாக இறால்


செவ்வாய், 24 மார்ச், 2015
சிங்கம் நீ, சிங்கப்பூரே நீ !
இதில் செந்துறை, வேப்பூர், ஆண்டிமடம் ஒன்றியங்கள் சற்று கூடுதல். இந்த குடிசை வீடுகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம், கான்கிரீட் வீடுகளாக மாறியதற்கு காரணமானவர் லீ குவான் யூ. வீடுகள் மட்டும் உயரவில்லை. அவர்கள் வாழ்வாதாரமே உயர்ந்திருக்கிறது. அவரை நான் வணங்குகிறேன்.
ஆம் மறைந்த சிங்கப்பூரின் பிரதமர் லீ குவான் யூ தான். அவர் வெறும் பிரதமர் மாத்திரமல்ல சிங்கப்பூரை நிர்மாணித்த சிற்பி. தனி ஒரு மனிதனாய் அந்த தேசத்தையே நிர்மாணித்தவன்.
ஒரு சுண்டைக்காய் அளவிலான தீவை, உலக பொருளாதார வரைபடத்தில் இடம் பெற செய்தது அவரது கடுமையான உழைப்பு தான். அந்த பொருளாதார வளர்ச்சிக் காரணமாக, அங்கு வேலைவாய்ப்பு பெருக, தமிழகத்தில் இருந்து நம் மக்கள் பயணப்பட்டார்கள், பயன்பட்டார்கள்.
இது பொருளாதார வளர்ச்சிக்கு பிறகு. ஆனால் அதற்கு முன்பே அங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்தார்கள். சீனர்கள், மலாய் மக்கள், தமிழர்கள் என்று பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கியதாக இருந்தது சிங்கப்பூர். ஆனால் அனைவரையும் ஒருங்கிணைத்து சிங்கப்பூரை முன்னேற்றினார் லீ.
பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த நேரத்தில் அரசியலில் நுழைந்து கட்சி ஆரம்பித்தவர், அப்போதே பிரதமரானார். இடையில் சிறிது காலம் சிங்கப்பூர் மலேசியாவோடு இணைந்திருந்தது. பிறகு பேதம் ஏற்பட்டு பிரிய நேர்ந்தது. பிரியாமல் இருக்க வேண்டுமென லீ விரும்பினார்.
காரணம் சின்னத் தீவான சிங்கப்பூர் குடிக்கிற தண்ணீர் முதற்கொண்டு அனைத்திற்கும் மலேசியாவை நம்பித் தான் இருக்க வேண்டும். அதனால் அந்த நாட்டோடே இணைந்திருந்தால், மக்கள் வளம் பெறுவார்கள் என்பது அவர் எண்ணம். ஆனால் பிரிந்து விட்டது. அதனால் ஓய்ந்துவிட வில்லை அவர்.
சிங்கப்பூரை பொருளாதார வளம் கொழிக்கும் நாடாக மாற்ற வேண்டுமென உறுதி பூண்டார். செய்துகாட்டி விட்டார். பல்வேறு நாடுகளுக்கு வணிக மையப் புள்ளியாக திகழ்கிறது. இன்னும் பல காலத்திற்கு திகழும், அவர் போட்டு கொடுத்திருக்கிற அஸ்திவாரத்தின் மேல்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முழு முதற் காரணமாக இருந்ததாக, இவருக்கு ஒப்பாக, வேறு எந்த நாட்டுத் தலைவரையும் காட்ட முடியாது.
அந்த நாட்டின் வளர்ச்சி மட்டுமல்லாமல், தமிழகத்தை போல் பல்வேறு நாடுகளில் இருந்து அங்கு சென்று பணியாற்றுவோர் குடும்பத்தின் வளர்ச்சிக்கும் அவரே காரணம், அதன் மூலம் அந்த நாடுகளின் வருமானத்திற்கும் அவரே காரணம்.
சர்வாதிகாரம் சில நேரங்களில் தலைதூக்கியது என்றக் குற்றச்சாட்டு இருந்தாலும், அதுவும் அந்த நாட்டின் வளர்ச்சிக்கான அவரது செயல்பாடாகவே அமைந்தது. ஒரு தலைவனாக, இப்படி தான் இருக்க வேண்டுமென ரோல்மாடலாக வாழ்ந்துக் காட்டி விட்டார்.
இதை எல்லாம் தாண்டி அவர் மீது கூடுதல் அபிமானம் ஏற்படுவதற்கு காரணம், தமிழுக்கு அவர் கொடுத்த மரியாதை. தமிழை ஆட்சி மொழியாக்கினார். சிங்கப்பூர் பணத்தில் இடம் பெற்றிருக்கும் நான்கு மொழிகளில் தமிழும் ஒன்று.
தமிழகத்தில் இருந்து சென்ற தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரை வாஞ்சையோடு வரவேற்றவர், அன்பு பாராட்டியவர்.
அவர் மறைந்து விடவில்லை. சிங்கப்பூர் நாட்டினரின், அங்கு பணியாற்றும் வெளிநாட்டினரின் ஒவ்வொருவரது வீட்டிலும் எரிகிற அடுப்புத் தீயாக, “அணையா தீபமாக” அவர் என்றும் இருப்பார்.
சிங்கப்பூரில் ஓங்கி உயர்ந்து நிற்கிற கட்டிடங்களில் அவர் மூச்சுக் காற்று உலவிக் கொண்டிக்கும். புதிதாக ஏற்படுத்தப்பட்ட நீர்நிலைகளில் அவரது உதிரம் கலந்திருக்கும். நாட்டின் உள்கட்டமைப்பில் அவரது உடல் மறைந்திருக்கும். புழங்கும் நாணயங்களில் அவரே நிறைந்திருப்பார்.
# சிங்கம் நீ, சிங்கப்பூரே நீ !

பிறந்தநாள் துவங்கியது நெகிழ்ச்சியாக
மெயில் பார்ப்பதற்காக அலைபேசியை எடுக்க கை வைத்தேன். இடம் காலியாக இருந்தது. பின் சீட்டில் தேடினேன் , அங்கும் காணோம். ராம்கோ சிமெண்ட் ஆலை அருகே வந்திருந்தோம்.
காரை நிறுத்த சொல்லி இறங்கி, கார் முழுதும் தேடினேன். அலுவலக மேசையில் இருக்கிறதா என ராஜவேலுவை பார்க்க சொன்னேன். அங்கும் இல்லை.
சற்று சிந்தித்து பார்த்தேன். அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து, பின்புறம் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பிறகு கார் ஏறினேன்.
சற்றே குழப்பமாக இருந்தது. நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு நொடியாக கட் செய்து, நினைத்துப் பார்த்தேன். அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் போது, வழக்கம் போல் குறிப்பேடு மற்றும் இரண்டு மொபைல்களையும் எடுத்துக் கொண்டு வந்தேன்.
ஆனால் குறிப்பேடு மட்டும் காரில் இருந்தது. புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக செல்லும் போது, குறிப்பேட்டை உள்ளே வைத்து விட்டு சென்றேன்.
அப்போது தான் நினைவு வந்தது, புகைப்படம் எடுக்க ஒரு அலைப்பேசியை கையில் வைத்துக் கொண்டு, மற்றொன்றை கார் மீது வைத்தேன். ஸ்விப்ட் கார்.
எடுத்தப் புகைப்படங்களை மெயில் அனுப்பும் போது, ராமதுரை வந்தார், கூட்ட அழைப்பிதழ் கொடுக்க. அவரிடம் பேசிக் கொண்டே, காரை கதவுக்கு வெளியில் கொண்டு வரச் சொல்லி, ஏறியது நினைவுக்கு வந்தது.
கார் மீது இருந்த மொபைல் எந்த இடத்தில் விழுந்திருக்கும் என அனுமானிக்க முடியவில்லை. வீட்டிலிருந்து இறங்கி, சாலையில் ஏறினால் சிறிது தூரத்தில் ஒரு வேகத் தடை. அடுத்து கல்லூரி அருகே ஒரு திருப்பம்.
சாலை ஏற்றம், வேகத்தடை, திருப்பம் இந்த இடங்களில் விழுந்திருக்க வாய்ப்பு உண்டு. ராஜவேலுவை மறுபடியும் அழைத்து, கல்லூரி வரை பார்க்க சொன்னோம்.
நாங்களும் காரை திருப்பினோம், வந்த வழியில் தேடுவோம் என. 4 கி.மீ தூரம் இருக்கும். அப்போது தான் சிந்தனை, அந்த அலைப்பேசியை அழைக்கலாமே .
அந்த அலைப்பேசியை அது வரை இணைய பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தி இருந்ததால், அதை பேச பயன்படுத்தியது இல்லை. எண் தெரியவில்லை. ரீசார்ஜ் செய்ய குறித்து வைத்திருந்ததை தேடி எடுத்தேன்.
நேரம் பறந்துக் கொண்டிருந்தது. ரிங் போனது, யாரும் எடுக்கவில்லை. இதற்குள் கல்லூரி வரை தேடிய ராஜவேலு, காணவில்லை என தகவல் கொடுத்தார். மறுநாள் பிறந்தநாள். அவ்வளவு தான்.
நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இதற்குள் கார் செந்துறை பைபாஸ் ரவுண்ட்டானாவை நெருங்கியது. மீண்டும் அழைத்து பார்ப்போமே, அழைத்தேன். யாரும் எடுத்து சிம்மை கழற்றி விடுவார்களோ என்ற குழப்பம்.
ரிங் போனது போய் கொண்டே இருந்தது. இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. "என்ன இப்படி பண்ணிட்டீங்களே?" என்று வருத்தப்படுவார் துணைவியார்.
ஆனால்"ஹாஹா. அப்பவே சொன்னோம், இரண்டு ஸ்மார்ட் போன்லாம் உங்களுக்கு ஓவர்னு. தொலைச்சுட்டிங்களா",மகன்கள் கலாய்க்கப் போவதை நினைத்து தான் வேர்த்தது.
எப்படி தொலைந்தது என்று கேட்டால், அதற்கு என்ன சொல்வது என்று நினைத்தால், தலை வேகமாக சுற்ற ஆரம்பித்தது.
ரிங் துண்டிக்க ஒரு நொடியில் யாரோ எடுத்தார்கள். "ஹலோ, யார் பேசறீங்க". "நான் சிவசங்கர் பேசறேன். நீங்க?"."அண்ணா, நான் வினோத், மணியங்குட்டை ஏரியா. வரும் போது ராஜவேலு தேடிக்கிட்டிருந்தார்"
"நான் பைக்குல வரும் போது, ஒரு சின்னப் பையன் கீழே கிடந்தத எடுத்தான். வாங்கிப் பார்த்தேன், மொபைல். ராஜவேலு சொன்னத வச்சி, உங்களதா இருக்கும்னு நினைச்சேன். நீங்க கூப்பிட்டுட்டீங்க"
கல்லூரி தாண்டி, அடுத்த திருப்பம் தாண்டி கார் மீதே பயணித்திருக்கிறது மொபைல். அங்கு ஒரு குழியில் விழுந்து எழும் போது துள்ளி விழுந்திருக்கிறது.
நாங்கள் இருந்த இடம் வந்து கொடுத்தார். நன்றி சொன்னேன், மனம் நெகிழ்ந்து. கடமையை செய்த உணர்வுடன் விடை பெற்றார். இப்படியும் வாழ்கிறார்கள்.
சாம்சங் நோட் _3. சிங்கப்பூரில் ரூ 30,000.
பிறந்தநாள் பரிசு வினோத் கொடுத்து விட்டார். நன்றி சகோதரா.
மெயிலை திறந்து, புகைப்படத்தை இறக்கி, முகநூல் முகப்பு படமாக வைத்தேன், அதே சாம்சங்கில்.
அதற்கு ஒரு கமெண்ட், சபா திலீபன் போட்டிருந்தார். "வெறும்10ரூபாய் தவறினால் கூட மீளப்பெற முடியாத சமகாலத்தில் நேற்று மாலை உங்கள் கார் முன்புறத்தில் வைத்து கீழே விழுந்து மீண்டும் உங்கள் கையில் வந்து சேர்ந்த போதே இன்று உங்கள் பிறந்தநாள் என்பது தெரியாமலே நான் சொன்னேன்."இது அவரின் உழைப்பு.பிறர் பொருளுக்கு துளிகூட ஆசைப்படாமல் பிறருக்காக வாழும் நல்ல மனத்திற்கான அங்கீகாரம்.' என்றேன்.உயர்ந்த விடயங்கள் ஆயிரம் நீங்கள் அடைந்து வாழி நலங்கள் யாவும் சூழ.!!!"
இவருக்கு விஷயம் எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. இவர் பின்னூட்டம் பார்த்தப் பிறகு பகிர்ந்து கொள்ள தோன்றியது.
# ஆண்டு (பிறந்தநாள்) துவங்கியது மகிழ்ச்சியாக, நெகிழ்ச்சியாக !
சனி, 21 மார்ச், 2015
எஞ்சினியரிங் மாணவர்களுக்கு அது இரண்டாம் வீடு
வெள்ளி, 20 மார்ச், 2015
இவர்கள் பொருட்டே இன்னும் மழை !

மாட்டுவண்டியில் சென்று தேர்தலை சந்தித்தவர்

புதன், 18 மார்ச், 2015
போராடித் தான் ஆகணும்...




