பிரபலமான இடுகைகள்

சனி, 21 ஜனவரி, 2017

திமுக போராடனுமா?

ஊடகம்: திமுக உண்ணாவிரதப் போராட்டமாமே?
திமுக தொண்டன்: ஆமாம். கழக செயல் தலைவர் தளபதி தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.

ஊடகம்: இன்னும் பழைய காலத்திலேயே இருக்கீங்க? 60 வருசத்துக்கு முன்ன மாதிரியே உண்ணாவிரதம், ரயில் மறியல்னு இருக்கீங்களே?
திமுக தொண்டன்: அறுபது வருசத்து முன்னாடி உங்க வீட்டுல என்ன சாப்பிட்டாங்க?

ஊ: சோறு தான்.
தொ: இப்போ என்னா சாப்பிடுறீங்க?

ஊ: சோறு தான்.
தொ: அது தான்யா வாழ்க்கை. சில நேரங்கள்ல போராட்ட உத்திய மாத்தலாம், போரட்டத்த மாத்த முடியாது. போராட்டம் அறவழியில தான் செய்ய முடியும். ஒரு இயக்கம் இப்படி தான் இருக்க முடியும்.

ஊ: இல்ல ரயில் மறியல்?
தொ: அப்ப என்ன ஃபிளைட்ட மறிக்கனுமா? என்னா சார் பேசறிங்க? பஸ்ச மறிச்சா மாநில அரசுக்கு தான் தெரியும். ரயில மறிச்சா தான் மத்திய அரசுக்கு தெரியும்.

ஊ: மாணவர்கள் தான் போராடுறாங்களே. நீங்க ஏன் குறுக்கப் போறீங்க?
தொ: அலங்காநல்லூரில் ஜனவரி3ந் தேதியே முதல் போராட்டம் நடத்தியவர் தளபதி தான். அதுக்கு அப்புறம் போகி அன்னைக்கு மாநிலம் தழுவி போராட்டம். இன்னைக்கு ரயில்மறியல், அடுத்து உண்ணாவிரதம். நாங்க முன்னாடியே துவங்கிட்டோம், தொடருகிறோம்...

மாணவர் போராட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறதுன்னு எங்க தளபதி பாராட்டியிருக்கார். அதனால் நாங்க குறுக்க போகல. உடன் பயணிக்கிறோம்.

அடுத்து இன்னைக்கு வணிகர் சங்கம், தொழிற்சங்கங்கள் அப்படின்னு பலரும் போராடி இருக்காங்க.  த.மா.கா, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க. அவங்களும் குறுக்க வரல. கிட்டத்தட்ட பந்த்.

ஊ: இல்ல நீங்க போராடாம இருக்கலாம்ல?
தொ: 89 எம்.எல்.ஏக்கள எங்கக் கட்சியில் மக்கள் தேர்ந்தெடுத்திருக்காங்க. அதற்கான பணி இந்தப் போராட்டம். இல்லன்ன ஜெயிச்ச எம்.எல்.ஏலாம் என்னா பண்றாங்கன்னு கேப்பீங்க.

ஊ : அப்ப இன்னும் வேற மாதிரி?
தொ: 135 எம்.எல்.ஏக்கள அதிமுகவுக்கு மக்கள் கொடுத்திருக்காங்க. அவங்கள ஏதும் கேள்வி கேட்டீங்களா?

ஊ: இல்ல, அது வந்து... நீங்க தானே போராடுறீங்க. அதனால உங்கள தான் கேக்க முடியும்.
தொ: அப்போ ஜெயலலிதா மாதிரி தோத்தா கொடநாட்டுக்கு போயிட்டா கேள்வி கேக்க மாட்டீங்க. தோத்தாலும் போராடுற எங்கள தான் கேப்பீங்க.

ஊ: சரி, சரி. ஜல்லிக்கட்டு உங்களால தான நின்னுதாம்?
தொ: 2011 எங்க ஆட்சி வரை ஜல்லிக்கட்டு நடந்தது. அப்புறம் வந்த அம்மா ஆட்சியில தான் ஜல்லிக்கட்டு நின்னுது. இப்போ மாநில அரசு தானே அவசர சட்டம் கொண்டு வருது. இத முன்னமே கொண்டு வந்திருக்கலாமே. அப்புறம் எப்படி திமுகவ குறை சொல்ல முடியும் ?

ஊ: காளையை காட்சிப் பட்டியலில் சேர்த்தது தான் ஜல்லிக்கட்டு நிக்கக் காரணம்னு சொல்றாங்களே?
தொ: அப்போ அந்தப் பட்டியல தான இப்போ சரி செய்யனும். மாநில சட்டத்த திருத்தறாங்களே, அப்போ அது பிரச்சினை இல்லைன்னு அவங்களே ஒத்துக்கிறாங்களா?

ஊ: மாணவர்கள் அரசியல் கூடாதுன்னு சொல்றாங்களே?
தொ: அது நீங்க மறைக்கிறது தான். ஒரு பொண்ணு, "வர சொல்லு, வர சொல்லு, பன்னீர வரசொல்லுன்னு. சின்னம்மா, சின்னம்மா, ஓபிஎஸ் எங்கம்மா?" அப்படின்னு கோஷம் போட்டு வாட்ஸ் அப் அலறுதே. நீங்க பாக்கலையா?

நியூஸ்7ல ஒரு பொண்ணு பேசும் போது,"ஆர்.எஸ்.எஸ் தான் காரணம்"னு சொன்ன உடனே செந்தில் பதறி "அவங்க இங்க இல்ல. குற்றம்சாட்டாதீங்க"னு கட் பண்ணினாரே பாத்தீங்களா?

தந்தி டீவில, போராட்ட ஆதரவாளர, பாண்டே கட்சிக்காரர் மாதிரி டீல் பண்ண, அவர் எகிற, பாண்டே சமாளிச்சத பாத்தீங்களா? அவரும் அரசாங்கத்த குற்றம் சொன்னத பாண்டே கண்ட்ரோல் பண்ணியத நாடே பார்த்ததே? நீங்கப் பார்க்கலையா?

ஊ: நான் கேள்வி கேட்டா, திருப்பி என்ன கேக்கறீங்களே?
தொ: நான் என்ன பேசா கட்சியா? திமுக தொண்டன்ங்க.

ஊ: நீங்க ஏதும் கேக்க ஆசப்படறீங்களா?
தொ: நிறைய கேக்கனும். ஒன்னு மட்டும் கேக்கறன். நாங்க ஆட்சிய இழந்துட்டோம். அதிமுக இரண்டாவது முற ஆட்சிக்கு வந்திருக்கு. மோடி ஆட்சிக்கு வந்து இரண்டரை வருசம் ஆயிடுச்சி. நீங்க என்னா செஞ்சிங்கன்னு அவங்கள போய் கேள்வி கேளுங்க. இல்லன்னா, 'அவரு'கிட்ட மிக்சர் வாங்கி சாப்பிட்டுக்கிட்டு ஒதுங்கி நில்லுங்க.

நாங்க போராடுறோம். மாணவர்கள் போராடுறாங்க. நீங்க ஒதுங்கி வேடிக்க பாருங்க.

# ஒதுங்கு, ஒதுங்கு, ஓரமா ஒதுங்கு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக