பிரபலமான இடுகைகள்

ஃபேஸ்புக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஃபேஸ்புக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 ஜூலை, 2015

ஒரு வழியா வெளியிட்டாச்சி, புத்தகம் தான்

நான் பாட்டுக்கு புத்தகம் ரிலீஸ் அப்படின்னு ஸ்டேடஸ் போட்டுட்டேன். ஆனா ரிலீஸ் ஆகறத்துக்குள்ள பட்டபாடு இருக்கே. இனி இந்த வேலையே வச்சிக்கக் கூடாது. புத்தகத்த கைல வச்சிக்கிட்டு தான் அறிவிக்கனும்.

முதல்நாளே, புத்தகங்கள் லாரியில் ஏறி விட்டது என்று உறுதிப்படுத்தி விட்டார்கள். லாரி ஷெட்டில் 12 மணிக்கு வந்துவிடும் என்றார்கள். அதனை நம்பி 10.52க்கு ஸ்டேடஸ் போட்டு விட்டேன் “ரிலீஸ்”.

மீண்டும் 12 மணிக்கு ஷெட்டில் கேட்டால் லாரி வரவில்லை என்றார்கள். 12.30க்கும் வரவில்லை. லாரி எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க சொல்லி, லூயி அவர்களோடு போராடிக் கொண்டிருந்தார்.

இதற்குள் அண்ணன் ஞானமூர்த்தி இல்ல நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள பெண்ணாடம் கிளம்பிவிட்டோம். இன்னாருக்கு, இன்ன விஷயத்திற்காக புத்தகங்கள் வருகின்றன என லூயி அவர்களிடம் விளக்கி மன்றாடினார்.

இதற்கிடையில் புத்தகத்தை வெளியிட, திருச்சியிலிருந்த பத்ரிசேஷாத்ரியை அழைக்க, அவரும் தன் பணிகளை ஒத்தி வைத்து 7.00 மணிக்கு கிளம்பி வர ஒப்புக் கொண்டார். அப்போது கேட்டார்,”சார், புத்தகம் வந்திடுச்சா?”. “இல்லிங்க சார். அது ஒரு சினிமா போல போய்கிட்டு இருக்கு” என்றேன். சிரித்து விட்டார்.

லாரி ஷெட்காரர்கள், லாரி உளுந்தூர்பேட்டையில் இருக்கிறது என்று கண்டுபிடித்து சொன்னார்கள். லாரி இதே போக்கில் வழியில் பார்சல்களை இறக்கிவிட்டு வந்தால் மாலை ஆகிவிடும். வெளியிடுவது சிரமம் ஆகிவிடும்.

முதல்நாளே வெளியிட துடிப்பதற்கு இரண்டு காரணங்கள். முதல் நாளே வெளியிட்டால் தான், அடுத்த இரண்டு மூன்று நாட்களில் பிரபலமாகி, புத்தகம் விற்பனையாகி, பதிப்பகத்திற்கு பலன்.

அடுத்து தள்ளிப் போகும் நாட்கள் பிரச்சினை. மறுநாள் 18, தளபதி கடலூர் நிகழ்ச்சி. அதற்கடுத்த நாள் மகனுக்கு பிறந்தநாள். அதற்கடுத்த நாள் வேறொரு பணி. 4 நாட்கள் ஓடி விடும். 21 தான் மீண்டும் வெளியிட வாய்ப்புள்ள நாள். அதனால் தான் இந்த பரபரப்பு.

நாங்களோ பெண்ணாடத்தில். செல்வத்தை ஒரு கார் எடுத்துக் கொண்டு லாரியை சேஸ் செய்ய சொன்னோம். செல்வம் கிளம்ப, அரியலூர் பைபாஸ் ரோட்டில் கார் தடுக்கப்படுகிறது காவல்துறையால். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பெரம்பலூரிலிருந்து கிளம்பி விட்டதால், எதிபுறம் நோ டிராபிக்.

பிறகு அனுமதிக்கப்பட்ட செல்வம் பெரம்பலூர், தொழுதூர் தாண்டி 70 கி,மீ தொலைவில் லாரியை மடக்கினார். அப்போது கிழக்கு பதிப்பகம் மேலாளர் போன் செய்தார்,”சார், எங்களுக்கு வர வேண்டிய புத்தகம் வரும் லாரி வந்து சேரவில்லை. உங்க புத்தகம் வந்துடுச்சா?”. “சார் லாரிய புடிச்சிட்டோம். பில் நம்பர் சொல்லுங்க சார்”.

செல்வம் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு அரியலூர் வந்தார். புத்தகத்தை ஸ்டாலுக்கு அனுப்பினோம். கலாம் இன்னொரு நிகழ்ச்சிசையை முடித்துக் கொண்டு அருகில் வந்துவிட்டார் என கதவுகளை பூட்டிவிட்டார்கள் காவல்துறையினர், பாதுகாப்புக் கருதி. புத்தகங்களை அனுமதிக்கவில்லை.

பிறகு நிகழ்ச்சிக்கு செல்லும் என் காரிலேயே ஏற்றிக் கொண்டு சென்றோம். கலாமும் வந்தார். புத்தகக் காட்சியை துவக்கி வைத்தார். இதற்குள் பத்ரி அவர்களை ஆசை.அன்பு அழைத்துக் கொண்டு திருச்சியிலிருந்து வர, டிராபிக் நெருக்கடி.

ஒரு வழியாக 08.30-க்கு புத்தகத்தை பத்ரிசேஷாத்ரி அவர்கள் வெளியிட்டார்கள். அவர் புத்தகத்தை வெளியிடும் கிழக்கு பதிப்பகத்தை சேர்ந்தவர் என்றாலும், எனது முகநூல் நண்பர். முகநூல் மூலம் என் எழுத்துக்களை முன்னமே வாசித்திருந்த காரணத்தால் தான், பதிப்பிக்க ஒப்புக் கொண்டார்.

பெற்றுக் கொண்டவர்கள் கவிஞர் அரங்கன்.தமிழ் மற்றும் எஸ்.பி.மகேந்திரன். இவர்கள் இருவரும் எனது முகநூல் நண்பர்கள். அரியலூரை சேர்ந்தவர்கள் என்றாலும் முகநூல் மூலமே அறிமுகமானவர்கள். தொடர்ந்து வாசித்து கருத்து சொல்பவர்கள். சூழ்ந்திருந்து வாழ்த்தியவர்களும் முகநூல் நண்பர்களே.

           

ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், அவைத்தலைவர் சந்திரசேகர், நகராட்சித்தலைவர் முருகேசன், பொதுக்குழு செல்வராஜ் ஆகியோர் ஸ்டேடஸ் பார்த்து வந்திருந்தார்கள், பார்வையாளர்களாக.

காலை ஸ்டேடசை பார்த்து தேனியிலிருந்து பறந்து வந்த சோமசுந்தரம் பத்ரி அவர்களுக்கு ஏலக்காய் மாலை அணிவிக்க, அவர் நெளிந்தார். சில பிரதிகளில் கையெழுத்திட்டு வழங்கி, எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றேன்.

முகநூலால் தான் எழுதும் எண்ணம் வந்தது, புத்தகம் வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் முழுதும் முகநூல் விழாவாகத் தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.

விழாவாக வைத்திருந்தால், அரசியல் கலந்திருக்கும், பெரும் விழா ஆகியிருக்கும். எழுத்து பின்னுக்கு தள்ளப்பட்டு, ஆளுமை முன்னுக்கு வந்திருக்கும். எழுத்து, எழுத்துக்காக மாத்திரம் கொண்டாடப்பட வேண்டும் என்றே எளிய வெளியீடு.

# முதல் நூல் முகநூலால். நன்றி மார்க் மற்றும் “உங்களுக்கு” !

திங்கள், 28 அக்டோபர், 2013

முகநூல் மார்க்குக்கு கடுப்பில் ஓர் கடிதம் !

அன்பு சகோதரர் மார்க், 

லைக் இல்ல. உன் கமெண்ட் அறிய ஆவல்.

நிற்க. தங்கள் புண்ணியத்தில் முகநூல் மூலமாக புதுபுது நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். பழைய நண்பர்களும் மீண்டும் தொடர்புக்கு வந்துள்ளார்கள். பள்ளி, கல்லூரி நண்பர்களை கண்டு பிடித்து புளகாங்கிதம் அடைந்துள்ளோம். மறுக்கவில்லை...

எழுத்துக்கு எழுத்து அர்த்தம் கண்டுபிடித்து எங்களை ஒழுங்கு படுத்தும் புரூப் ரீடர்கள் கிடைத்துள்ளார்கள். ஸ்டேடசின் இன்னொரு அர்த்தத்தை சொல்லி குட்டும் செய்தி ஆசிரியர்கள் உள்ளார்கள். சுடசுட கமெண்ட் போட்டு விளம்பரம் அளிக்கும் விளம்பர மேனேஜர்கள் சிக்கியுள்ளார்கள்.

லைக் மட்டும் செய்து மட்டற்ற அன்பு காட்டும் நெஞ்சங்கள் உள்ளார்கள். ஷேர் செய்து பாசம் காட்டும் உள்ளங்கள் உண்டு. காப்பி,பேஸ்ட் அடிக்கும் காப்பிரைட்டர்களும் அதிகம். மொத்தத்தில் குருப்பா செட் ஆயிட்டோம்.

முகநூல் வந்த பிறகு தான் பள்ளிக்கூடத்துல பரிட்சையில விடைன்னு விட்ட கதைய திருப்பி இங்க டிரை பண்ணி எழுத்தாளரா ஆகியிருக்கோம். கல்லூரியில பிட் பேப்பர்ல எழுதி வச்சத எல்லாம் இங்க போஸ்ட் பண்ணி கவிஞரா உருவெடுத்தோம். மொபைல்ல கிளிக்கியத போட்டு புகைப்பட வல்லுநரா டெவலப் ஆகியிருக்கோம். சுருங்க சொன்னா தெறமய பெருக்கியிருக்கோம்.

                               
                          


இப்பப் போய் இப்படி பண்ணிட்டீங்களே !

Page-ல் செய்த வியாபார யுக்தியை fb account-க்கும் கொண்டு வந்துட்டீங்களே. நேற்று ஒரு ஸ்டேடஸ் போட்டுட்டு பார்க்கிறேன். Promote option-ஐ கொண்டு வந்து காசு கேக்கறீங்களே, இது நியாயமா ?

பேஜில் தான் புரமோட் ஆப்சன் வச்சிங்க, நியாயம். மெயின்ல வச்சா நாங்க என்ன பண்றது ? அப்பவே மக்கள் எச்சரிச்சாங்க, காசு பார்க்க மார்க் வழி பாக்குறாருன்னு. இப்பவே எல்லாரோட ஸ்டேடசும் கண்ல படறது இல்லன்னு ஒரு கம்ப்ளெயிண்ட் வர ஆரம்பிச்சிருக்கு.

அப்போ அப்போ ஸ்பான்சர்ட் ஸ்டேடஸ் வரும் போதே நினச்சேன், நம்ம ஸ்டேடச எல்லாம் இப்படி ஸ்பான்சர் பண்ணா தான் எல்லாரும் பார்க்க முடியுனு நிலை வந்துடுமோன்னு. ஆனா இவ்ளோ சீக்கிரம் வரும்னு நினைக்கல.

ஆனா அப்பவே தொல்ஸ்( அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் ) அண்ணன் சொன்னத கேட்டதால தப்பிச்சேன். மார்க்'லாம் புது ஆளு. நம்ம கூகுள் பாரம்பரியமிக்கது. அங்க ஒரு துண்டு போட்டு வைங்கன்னாரு. இங்க போடுற ஸ்டேடச எல்லாம், blog-ல காப்பி, பேஸ்ட் போட்டு வைங்க சேப்-ஆ இருக்கும்னாரு. போட்டு வச்சேன்.

கூட்டம் இல்லன்னாலும் கூகுள் பிளஸ்ல கணக்கு துவங்கிடுங்கன்னாரு. அதையும் செஞ்சேன். இப்போ free-யா feel பண்றேன். இங்க வழியில்லன்னா செட்டா அங்க கிளம்பிடலாம்.

பிளாக்ல செய்திக்கு இடையில் நிறைய படங்களை போட்டு பத்திரிக்கை மாதிரி காட்சி அளிப்பது போல், முகநூல்லயும் பண்ணா நல்லா இருக்கும்னு சொல்லலாம்னு நினச்ச நேரத்தில, நீ முதலுக்கே மோசம் பண்றீயே. வேட்டிக்கு ஆசப் பட்டவன் கோவணத்த உருவுன கதையா ஆயிடுச்சி.

சரி, உன் ஃபேஸ்புக், உன் இஷ்டம்.

நன்றி-ஷேர், பிளாக்-வணக்கம்.

அன்பு ஆப்சன்களுடன்

படைப்பாளிகள் சார்பாக சிவசங்கர்.