பிரபலமான இடுகைகள்

திங்கள், 28 அக்டோபர், 2013

முகநூல் மார்க்குக்கு கடுப்பில் ஓர் கடிதம் !

அன்பு சகோதரர் மார்க், 

லைக் இல்ல. உன் கமெண்ட் அறிய ஆவல்.

நிற்க. தங்கள் புண்ணியத்தில் முகநூல் மூலமாக புதுபுது நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். பழைய நண்பர்களும் மீண்டும் தொடர்புக்கு வந்துள்ளார்கள். பள்ளி, கல்லூரி நண்பர்களை கண்டு பிடித்து புளகாங்கிதம் அடைந்துள்ளோம். மறுக்கவில்லை...

எழுத்துக்கு எழுத்து அர்த்தம் கண்டுபிடித்து எங்களை ஒழுங்கு படுத்தும் புரூப் ரீடர்கள் கிடைத்துள்ளார்கள். ஸ்டேடசின் இன்னொரு அர்த்தத்தை சொல்லி குட்டும் செய்தி ஆசிரியர்கள் உள்ளார்கள். சுடசுட கமெண்ட் போட்டு விளம்பரம் அளிக்கும் விளம்பர மேனேஜர்கள் சிக்கியுள்ளார்கள்.

லைக் மட்டும் செய்து மட்டற்ற அன்பு காட்டும் நெஞ்சங்கள் உள்ளார்கள். ஷேர் செய்து பாசம் காட்டும் உள்ளங்கள் உண்டு. காப்பி,பேஸ்ட் அடிக்கும் காப்பிரைட்டர்களும் அதிகம். மொத்தத்தில் குருப்பா செட் ஆயிட்டோம்.

முகநூல் வந்த பிறகு தான் பள்ளிக்கூடத்துல பரிட்சையில விடைன்னு விட்ட கதைய திருப்பி இங்க டிரை பண்ணி எழுத்தாளரா ஆகியிருக்கோம். கல்லூரியில பிட் பேப்பர்ல எழுதி வச்சத எல்லாம் இங்க போஸ்ட் பண்ணி கவிஞரா உருவெடுத்தோம். மொபைல்ல கிளிக்கியத போட்டு புகைப்பட வல்லுநரா டெவலப் ஆகியிருக்கோம். சுருங்க சொன்னா தெறமய பெருக்கியிருக்கோம்.

                               
                          


இப்பப் போய் இப்படி பண்ணிட்டீங்களே !

Page-ல் செய்த வியாபார யுக்தியை fb account-க்கும் கொண்டு வந்துட்டீங்களே. நேற்று ஒரு ஸ்டேடஸ் போட்டுட்டு பார்க்கிறேன். Promote option-ஐ கொண்டு வந்து காசு கேக்கறீங்களே, இது நியாயமா ?

பேஜில் தான் புரமோட் ஆப்சன் வச்சிங்க, நியாயம். மெயின்ல வச்சா நாங்க என்ன பண்றது ? அப்பவே மக்கள் எச்சரிச்சாங்க, காசு பார்க்க மார்க் வழி பாக்குறாருன்னு. இப்பவே எல்லாரோட ஸ்டேடசும் கண்ல படறது இல்லன்னு ஒரு கம்ப்ளெயிண்ட் வர ஆரம்பிச்சிருக்கு.

அப்போ அப்போ ஸ்பான்சர்ட் ஸ்டேடஸ் வரும் போதே நினச்சேன், நம்ம ஸ்டேடச எல்லாம் இப்படி ஸ்பான்சர் பண்ணா தான் எல்லாரும் பார்க்க முடியுனு நிலை வந்துடுமோன்னு. ஆனா இவ்ளோ சீக்கிரம் வரும்னு நினைக்கல.

ஆனா அப்பவே தொல்ஸ்( அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் ) அண்ணன் சொன்னத கேட்டதால தப்பிச்சேன். மார்க்'லாம் புது ஆளு. நம்ம கூகுள் பாரம்பரியமிக்கது. அங்க ஒரு துண்டு போட்டு வைங்கன்னாரு. இங்க போடுற ஸ்டேடச எல்லாம், blog-ல காப்பி, பேஸ்ட் போட்டு வைங்க சேப்-ஆ இருக்கும்னாரு. போட்டு வச்சேன்.

கூட்டம் இல்லன்னாலும் கூகுள் பிளஸ்ல கணக்கு துவங்கிடுங்கன்னாரு. அதையும் செஞ்சேன். இப்போ free-யா feel பண்றேன். இங்க வழியில்லன்னா செட்டா அங்க கிளம்பிடலாம்.

பிளாக்ல செய்திக்கு இடையில் நிறைய படங்களை போட்டு பத்திரிக்கை மாதிரி காட்சி அளிப்பது போல், முகநூல்லயும் பண்ணா நல்லா இருக்கும்னு சொல்லலாம்னு நினச்ச நேரத்தில, நீ முதலுக்கே மோசம் பண்றீயே. வேட்டிக்கு ஆசப் பட்டவன் கோவணத்த உருவுன கதையா ஆயிடுச்சி.

சரி, உன் ஃபேஸ்புக், உன் இஷ்டம்.

நன்றி-ஷேர், பிளாக்-வணக்கம்.

அன்பு ஆப்சன்களுடன்

படைப்பாளிகள் சார்பாக சிவசங்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக