பிரபலமான இடுகைகள்

கே.என்.நேரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கே.என்.நேரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 நவம்பர், 2013

எள் என்றால் எண்ணெயாக நிற்பார்....

அப்போது திமுக எதிர்கட்சி. திருச்சியில் திமுக மாநாட்டு ஏற்பாடுகள். பெரிய பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. இப்போது போல ஷீட்டால் அமைக்கும் பந்தல் அல்ல, தென்னங்கீற்றாலான பந்தல். பந்தல் அமைப்பதே பெரும் பணி.

திருச்சி, கரூர், பெரம்பலூர் என ஒருங்கிணைந்த பழைய திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் அனைவரும் மாதக் கணக்கில் தங்கி பணியை பார்வையிடுகிறார்கள். முன்னாள் அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்கள் தான் ஒருங்கிணைப்பாளர் இந்தப் பணிகளுக்கு.

இடையில் ஒரு நாள் இந்தப் பணிகளை காண தலைவர் கலைஞர் திருச்சி வருகிறார். மாநாட்டு பந்தலை கண்டு மகிழ்வுறுகிறார். சில திருத்தங்களை சொல்கிறார். மற்ற பணிகளுக்கு ஆலோசனை வழங்கிவிட்டு இரவு 10.30-க்கு மலைக்கோட்டை ரயிலை பிடித்து சென்னை செல்கிறார். அண்ணன் நேரு தலைமையில் வழியனுப்பி வைக்கிறார்கள் நிர்வாகிகள்.

காலை 9 மணி, சென்னை கோபாலபுரம், தலைவர் கலைஞர் இல்லம். அண்ணன் நேரு காரில் வந்து இறங்குகிறார். பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி, இரவு திருச்சியில் வழியனுப்பி வைத்தாரே, காலையில் இங்கு நிற்கிறாரே என்று. சென்னை-திருச்சி சாலை இப்போது போல நான்கு வழிச் சாலை கிடையாது அப்போது, நல்ல சாலையும் கிடையாது. அது 1996.

தலைவர் சொன்ன திருத்தங்களை இரவே முடித்து, அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு, தலைவர் சொன்ன ஆலோசனைகளை செய்து, அதை தலைவரிடம் காட்டி ஒப்புதல் வாங்க, விடியற்காலை கிளம்பி காரிலேயே வந்து சேர்ந்துவிட்டார்.

தலைவருக்கும் அண்ணன் நேரு அவர்களை கண்டு அதிர்ச்சி. ஒரு புறம் பணிகளுக்காக பாராட்டினாலும், இரவுப் பயணத்திற்காகக் கடிந்து கொண்டார். இது தான் அண்ணன் நேரு. எள் என்றால் எண்ணெயாக நிற்பார். சுறுசுறுப்புக்கு மறு பெயர்.

இப்போது என்றில்லை அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, தொழிலதிபராக இருந்த போதும் அப்படி தான். அரியலூர் தான் அவரது தொழில் மையம். அப்போது புல்லட் அரிதாகத் தான் இருக்கும். காணக்கிளியநல்லூரில் இருந்து கிளம்பினால், அந்த புல்லட் திருச்சி பகுதியையோ, அரியலூர் பகுதியையோ ஒரு சுற்று சுற்றி தான் நிற்கும்.

இப்போதும் அப்படி தான். திருமண முகூர்த்த நாட்களில் அவரது கார் கிளம்பினால் இரண்டு, மூன்று மாவட்டங்களை சுற்றி வந்துவிடும். அன்று பார்த்த அதே இளமைத் துடிப்பு.

எப்போதும் இளமையாக இருப்பவர்க்கு  நவம்பர் 09 அன்று பிறந்தநாள்.

# பயணம் தொடரும் !


                             

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

எம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார்...

போக்குவரத்து துறை அமைச்சர் அப்போது அண்ணன் கே.என்.நேரு அவர்கள். தலைமை செயலகத்தில் அவரது அறையில் நுழையும் போதே நல்லக் கூட்டம், ஆளுக்கொரு மனுவோடு.

நானும் என் பங்குக்கு மனுக்களோடு சென்றிருந்தேன். அரசியலில் அவர் என் தந்தையின் சம காலத்தவர். இருந்தாலும் எல்லோருடனும் எளிமையாக பழகக் கூடியவர். “என்னப்பா ? என்றார். “அண்ணே, பஸ் தான்என்று இழுத்தேன். காரணம், கையில் கணக்கில்லா புது ரூட்டுகள் கேட்டு அத்தனை மனு.

K. N. Nehru In Office

மனுக்களை வாங்கிப் பார்த்தார். பக்கத்தில் இருந்த போக்குவரத்து துறையின் உயர் அதிகாரியிடம் கொடுத்தார். “எஸ்.எஸ் பையன்யா, சீக்கிரம் சர்வே பண்ணி குடுங்க என்றார். மனுக்களை படித்த அதிகாரி “சார், மொத்தமே 200 பஸ் தான் வருது. எம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார் என்றார்.

“என்னப்பா பண்றது என்றார். “சரிங்க அண்ணே, முக்கியமான பஸ் போகாத கிராமத்துக்கு மட்டும் இந்த வருஷம் கொடுங்க. மிச்சத்தை அடுத்த வருடம் கொடுங்க என்றேன். “ டிவிஷ்னல் மேனேஜர சர்வே பண்ணிட்டு, எம்.எல்.ஏ-வ பார்க்க சொல்லுங்கஎன்றார் அதிகாரியிடம்.

ஊருக்கு வந்த பிறகு, சர்வே செய்த டிவிஷ்னல் மேனேஜர் சந்தித்தார். “சார் 8 ரூட்கள் வருது. அத்தனை பஸ் தருவாங்களா ? என்றார். அது அரியலூர் டெப்போவில் 4 பஸ் செந்துறை ஒன்றியத்திற்கும், ஜெயங்கொண்டம் டெப்போவில் 4 பஸ் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கும் என வந்தது.

நான் அதற்கு ஒரு தீர்வு கொடுத்தேன். டி.எம் “சார், இது போல இதுவரை செய்ததில்லை என்றார். நான் என் லெட்டர்பேடில் நான் சொன்ன வகையில் புது ரூட்களை எழுதி கொடுத்தேன். “நீங்க ஒங்க சர்வே படியும் அனுப்புங்க, என் திட்டப்படியும் அனுப்புங்க என்றேன்.

மீண்டும் கோட்டை, அமைச்சரிடம். என் திட்டத்தை பார்த்த அதிகாரி அமைச்சரிடம் “சார், இது புது மாதிரியா கொடுத்திருக்கிறார் என்றார். “ அண்ணே, 8 பஸ் வேண்டும். ஆனால் நான் 2 பஸ்ல அந்த ரூட் எல்லாம் போகிற மாதிரி கொடுத்திருக்கிறேன் என்றேன்.

“சார், அவன் வேலைக்கு போயிருந்தா, உங்கள மாதிரி அதிகாரியா வந்திருக்க வேண்டிய ஆள், எஞ்சினியர். சரியா தான் இருக்கும். அனுப்புங்க என்று அதிகாரியிடம் சொல்லி மனுவை வாங்கி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.


அந்தத் திட்டம்.... (தொடரும்)