பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

எம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார்...

போக்குவரத்து துறை அமைச்சர் அப்போது அண்ணன் கே.என்.நேரு அவர்கள். தலைமை செயலகத்தில் அவரது அறையில் நுழையும் போதே நல்லக் கூட்டம், ஆளுக்கொரு மனுவோடு.

நானும் என் பங்குக்கு மனுக்களோடு சென்றிருந்தேன். அரசியலில் அவர் என் தந்தையின் சம காலத்தவர். இருந்தாலும் எல்லோருடனும் எளிமையாக பழகக் கூடியவர். “என்னப்பா ? என்றார். “அண்ணே, பஸ் தான்என்று இழுத்தேன். காரணம், கையில் கணக்கில்லா புது ரூட்டுகள் கேட்டு அத்தனை மனு.

K. N. Nehru In Office

மனுக்களை வாங்கிப் பார்த்தார். பக்கத்தில் இருந்த போக்குவரத்து துறையின் உயர் அதிகாரியிடம் கொடுத்தார். “எஸ்.எஸ் பையன்யா, சீக்கிரம் சர்வே பண்ணி குடுங்க என்றார். மனுக்களை படித்த அதிகாரி “சார், மொத்தமே 200 பஸ் தான் வருது. எம்.எல்.ஏ-வே 16 ரூட்டு கேக்கறார் என்றார்.

“என்னப்பா பண்றது என்றார். “சரிங்க அண்ணே, முக்கியமான பஸ் போகாத கிராமத்துக்கு மட்டும் இந்த வருஷம் கொடுங்க. மிச்சத்தை அடுத்த வருடம் கொடுங்க என்றேன். “ டிவிஷ்னல் மேனேஜர சர்வே பண்ணிட்டு, எம்.எல்.ஏ-வ பார்க்க சொல்லுங்கஎன்றார் அதிகாரியிடம்.

ஊருக்கு வந்த பிறகு, சர்வே செய்த டிவிஷ்னல் மேனேஜர் சந்தித்தார். “சார் 8 ரூட்கள் வருது. அத்தனை பஸ் தருவாங்களா ? என்றார். அது அரியலூர் டெப்போவில் 4 பஸ் செந்துறை ஒன்றியத்திற்கும், ஜெயங்கொண்டம் டெப்போவில் 4 பஸ் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கும் என வந்தது.

நான் அதற்கு ஒரு தீர்வு கொடுத்தேன். டி.எம் “சார், இது போல இதுவரை செய்ததில்லை என்றார். நான் என் லெட்டர்பேடில் நான் சொன்ன வகையில் புது ரூட்களை எழுதி கொடுத்தேன். “நீங்க ஒங்க சர்வே படியும் அனுப்புங்க, என் திட்டப்படியும் அனுப்புங்க என்றேன்.

மீண்டும் கோட்டை, அமைச்சரிடம். என் திட்டத்தை பார்த்த அதிகாரி அமைச்சரிடம் “சார், இது புது மாதிரியா கொடுத்திருக்கிறார் என்றார். “ அண்ணே, 8 பஸ் வேண்டும். ஆனால் நான் 2 பஸ்ல அந்த ரூட் எல்லாம் போகிற மாதிரி கொடுத்திருக்கிறேன் என்றேன்.

“சார், அவன் வேலைக்கு போயிருந்தா, உங்கள மாதிரி அதிகாரியா வந்திருக்க வேண்டிய ஆள், எஞ்சினியர். சரியா தான் இருக்கும். அனுப்புங்க என்று அதிகாரியிடம் சொல்லி மனுவை வாங்கி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.


அந்தத் திட்டம்.... (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக