பிரபலமான இடுகைகள்

மின்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 நவம்பர், 2012

சென்றோம், குரலெழுப்பினோம், வெளியேற்றப்பட்டோம்....

31.10.2012 அன்று காலை சட்டமன்றத்தில் கேள்வி நேரம் நடைபெற்றது. வழக்கம்போல் அம்மாவை வணங்கி கேள்விகள் கேட்கப்பட, அமைச்சர்களும் அம்மாவை துதித்து பதிலளித்துக் கொண்டிருந்தனர், அம்மா இல்லாமலே.


இடையில் ஜெ வருவதாக எண்ணி ஓ.பி.எஸ் எழ, அவரைப் பார்த்து மற்ற அமைச்சர்கள் எழ, அவர்களை பார்த்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நிற்க, நொடிகள் கடந்து, நிமிட
ம் கடந்து, ஐந்து நிமிடம் ஆகியும் ஆளைக் காணோம். அனைவரும் உட்கார, ஓ.பி.எஸ்க்கு அழைப்பு வந்தது. உடன் விஸ்வநாதன் மற்றும் முனுசாமி சென்று வந்தனர்.


பிறகு ஜெ சபைக்கு வர, முகத்தில் உக்கிரம். சூழல் தெரியாமல், டாக்டர் கிருஷ்ணசாமி விபத்துகள் நிறைய நேர்வது குறித்து கவலை தெரிவித்து புள்ளிவிவரங்களை அடுக்கி, சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பேசிக்கொண்டிருந்தார்.


போக்குவரத்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டிய கேள்வி. ஆனால் டாக்டர் பேச்சில், இடைமறித்த ஜெயலலிதா, " போக்குவரத்து துறை அமைச்சரிடத்தில் நெடுஞ்சாலைத் துறை சம்பந்தமாக கேள்வி கேட்டால் எப்படி பதிலளிக்கமுடியும் ? " என முகம் சிவக்க கேட்க, டாக்டர் பாதிலேயே உட்கார்ந்துவிட்டார்.


இப்படியாக கேள்வி நேரம் முடிந்தவுடன், அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் எழுந்து மின்சாரம் குறித்து, ஒத்திவைப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்க சபா மறுக்க, சூழ்நிலை சூடாக ஆரம்பித்தது.


சட்டமன்ற தி.மு.க துணைத் தலைவர் துரைமுருகன் பேச நேரம் கேட்க, சபா மறுக்க, நாங்கள் எல்லோரும் எழுந்து குரல் கொடுக்க ஆரம்பித்தோம். முதல்வர் பதிலளிப்பார் என்பதையே சபா திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.


எங்கள் கோரிக்கை சபையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து, தமிழ்நாட்டின் மின்பற்றாக்குறை நிலவரம் குறித்து, அனைத்துக் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து அதன் மீது பதில் அளிக்க வேண்டும் என்பது.


ஆனால் ஆட்சியாளர்கள் குற்றங்களை காதில் வாங்கத் தயாராக இல்லை. வாழ்த்துப்பா என்றால் மட்டும் அனைவரும் இசைக்கவேண்டும்.


சபா எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். சபைக்காவலர்கள் எங்களை இழுத்தும், தள்ளியும் வெளியேற்ற, நாங்கள் முழக்கம் எழுப்பிய படி வெளியேறினோம்.


" காணோமே, காணோமே, மின்சாரத்தை காணோமே. சொன்ன வாக்கு, என்ன ஆச்சு, மின்சாரம் தான் என்ன ஆச்சு "


# தமிழகத்தின் வீதிகளிலும் ஒலிக்கும் பொதுமக்களின் " மவுன" முழக்கமும் இதுதானே...

திங்கள், 22 அக்டோபர், 2012

அது ஒரு கனாக் காலம்...


கடந்த தி.மு.க ஆட்சிக்காலம்....

இரவு நேரம். சென்னையின் ஒரு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. டிரான்ஸ்பார்மர் சீர்கெட்டதால் என தெரியவருகிறது. வழக்கம் போல் ஆற்காட்டாருக்கு அர்ச்சனை நடக்கிறது. மின்வாரிய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள், போனை யாரும் எடுக்கவில்லை.

ஒரு நடுத்தர வர்க்கத்து பெண் முதலமைச்சர் இல்ல தொலைபேசி எண்ணை தேடுகிறார். கிடைக்கிறது. தொடர்புகொள்கிறார், யாராவது உதவியாளர்கள் தொலைபேசியை எடுப்பார்கள் என்ற எண்ணத்தோடு.

" வணக்கம். கருணாநிதி பேசுகிறேன் " என்ற கனிவான கம்பீரக் குரல். இந்தப் பெண் திகைத்துப் போகிறார். தடுமாறி விபரத்தை சொல்கிறார். எந்தப் பகுதி என்று விபரம் கேட்டுக் கொள்கிறார் தலைவர் கலைஞர். உடனடியாக அதிகாரிகள் தொடர்பு கொண்டு சீர் செய்தது தனிக்கதை.

இன்று முதல்வர் இல்ல தொலைபேசி எண் கிடைத்தால், யாராவது பேச முன்வருவார்களா தைரியமாக ? நிச்சயம் தற்போதைய முதல்வர் எடுக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். முதல்வரிடம் அல்ல, உதவியாளர்களிடம் பேசவே பயப்படுவார்கள் பொதுமக்கள் இன்று .

# ஏங்கம்மினி, கெரண்ட் இல்லாதது அப்புறம்  உங்களுக்கு எப்படி தெரிய வருங்க ? செரிதானுங்கோ நீங்க சொல்றதும்....