பிரபலமான இடுகைகள்

விஸ்வரூபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஸ்வரூபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 பிப்ரவரி, 2013

அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே...


அன்பிற்குரிய ( விஸ்வரூபத்தால் மனவலிக்கு உள்ளாகியிருக்கும்) சகோதரர்களே,

அஸ்சலாமு அலைக்கும் ( சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக )..

விஸ்வரூபம் பிரச்சினையின் "உண்மைரூபத்தை" தற்போது அறிந்திருப்பீர்கள்.

நீதிமன்ற நடவடிக்கைகளை கவனித்தவர்களுக்கு அரசின் உள் நோக்கம் புரிந்திருக்க வேண்டும்.

விஸ்வரூபம் திரைப்படத்தை ஜெ தொலைக்காட்சி விலை பேசிய போது அரசின் தலைமைக்கு இந்தப் படத்தின் கருவும் காட்சியமைப்பும் தெரியாதா ?

அரசின் தலைமை வேறு, ஜெ டிவியின் தலைமை வேறா ?

அப்போதே தடை செய்யும் எண்ணம் வரவில்லையே, ஏன் ?

திரையரங்க உரிமையாளர்களோடு கமலஹாசனுக்கு பிணக்கு ஏற்பட்ட போதும் அமைதி காத்தார்களே...

டி.டி.ஹெச் மூலமாக வெளியிட முயற்சி நடந்த போது தானே பிரச்சினை வெடித்தது. காரணம், கை நழுவி போகும் என தானே ?

அதற்கு பிறகு இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தை லாகவாகமாக சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டது யார் ?

நீங்கள் போராடியதால் இந்த அரசு தடை விதித்ததா என சிந்தியுங்கள்....

நீங்கள் போராடிய மற்ற எந்த விசயத்தில் இந்த அரசு காது கொடுத்து கேட்டது ?

" இன்னொஸன்ஸ் ஆப் முஸ்லிம்" என்ற ஆங்கில திரைப்படத்தை எதிர்த்து அண்ணா சாலையில் போராட்டம் நடத்திய போது இந்த அரசு எப்படி கையாண்டது ?

நீங்கள் போராடியதற்காக இந்த அரசு தடை விதிக்கவில்லை.

ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வெறுப்புகளின் வெளிப்பாடு அது.

ஜெயா தொலைக்காட்சியின் லாப நட்டக் கணக்கு அது.

நடந்தது உங்களுக்கும் கமலுக்குமான பிரச்சினை அல்ல,

ஜெயா தொலைக்காட்சிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குமான பிரச்சினை.

இதில் கருத்து தெரிவித்த எங்களையொத்த நண்பர்களின் கருத்தை நீங்கள் மதத்திற்கு எதிரான கருத்தாகக் கொண்டீர்கள்.

இதை போன்ற பல படங்கள் ஏற்கனவே வந்துவிட்டன, இனியும் வரத்தான் செய்யும்.

தன்னை மனிதனுக்குரிய அடையாளம் பெற வைத்த பெரியாரையே, விமர்சனம் செய்கிற புத்திசாலிகளும் நடமாடிக் கொண்டிருக்கின்ற காலம் இது.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என யாரும் கிடையாது.

இது போன்ற படங்கள் வந்த போதும், கோவை போன்ற சம்பவங்கள் நடந்த பிறகும் சகோதரத்துவம் எங்கும் குலைந்து விடவில்லை.

அனைவருக்கும் தெரியும், ஒரிருவர் செய்கிற காரியங்களுக்கு, ஒட்டுமொத்தமாக எல்லோரும் குற்றவாளியாகிவிடமாட்டார்கள்.

அதேபோல ஒரு திரைப்படம் சொல்வதால், அனைவரையும் தீவிரவாதியாக பார்த்துவிடமாட்டார்கள்.

இப்போதும் சொல்கிறோம், எப்போதும் சொல்வோம் நாங்கள் உங்களின் சகோதரர்கள்,

உண்மையானவர்களை உணருங்கள். ஒரிரு இடத்திற்காக குரலை மாற்றி ஒலிக்க தயங்காதவர்களின் குரலை எதிரொலிக்காதீர்கள்.

நடந்த அத்தனை திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த நாடகக் காட்சிகளை பார்த்து ரசித்திருப்பீர்கள்.

கலையின் பெயராலோ, கருத்து சுதந்திரத்தின் பெயராலோ காவி நுழைய இடம் கொடுத்துவிடாதீர்கள்.

ஜெ, ஜெ-வாகத் தான் இருப்பார். கமல், கமலாகத் தான் இருப்பார். நாம் என்றும் நாமாக இருப்போம்.

மீண்டும் சொல்கிறேன், எதிர் கருத்தை எதிர்க்கவில்லை. அதை யார் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை உணருங்கள் எனத்தான் சொல்கிறோம்.

அன்போடு...
பெரியாரின் பேரன்
சிவசங்கர்.

சனி, 2 பிப்ரவரி, 2013

நடிகரே அன்போடு முதல்வர் நான் கொடுக்கும் பேட்டியே..


குணா கமல் மாதிரி உங்கள நினைச்சிக்கோங்க... ம்... ஆரம்பிங்க...............


நடிகர் அன்போடு முதல்வர் நான் நான் கொடுக்கும் இண்டர்வியூ..
சீ... அறிக்கை.... இல்ல அறிவிப்பு வச்சிக்கலாமா ?... இல்ல பேட்டியே இருக்கட்டும்... எங்க படி...

"  
நடிகரே அன்போடு முதல்வர் நான் கொடுக்கும் பேட்டியே..."

பாட்டாவே படிச்சிட்டியா.... அப்ப நானும்...
மொதல்ல நடிகர் சொன்னேன்ல... இங்க ஆக்டர் போட்டுக்க....

ஆக்டர் ஒன் பேட்டி ரிலீசா, எம் பேட்டி இங்க ரிலீஸ்...

" ஆக்டரே உன் பேட்டி ரிலீஸா, என் பேட்டி இங்கு ரிலீஸே..."

உன்ன நெனச்சி பாக்கும் போது கோவம் மனசுல அருவி மாதிரி கொட்டுது.... ஆனா அத பேசனும்னு ஒக்காந்தா அந்த பேச்சுத்தான் வார்த்த...

" உன்னை எண்ணிப் பார்க்கையில் கோபம் கொட்டுது
(அதான்)
அதை சொல்ல நினைக்கையில் வார்த்த முட்டுது "

அதேதான்...ஆஹா... பிரமாதம்...
பேட்டி...பேட்டி...பேசு...

எனக்கு உண்டான ஓட்டு தன்னால விழுந்துடும்
அது என்னமோ தெரியல...
என்ன மாயமோ தெரியல....
எனக்கு ஒன்னுமே தெரியரதில்ல...

இதையும் பேசிரனுமா ?

நடுவுல நடுவுல தீவிரவாதம், பெட்ரோல் பாம், சட்டம் ஒழுங்கு
போட்டுக்கனும்...

இதப் பாரு... எனக்கு என்ன பிரச்சினைன்னாலும் ஆட்சி தாங்கிடும்...
உன் படம் தாங்குமா ? தாங்காது.. தாங்காது...

பிரதமர்... பிரதமர்... பிரதமர்...

அதையும் பேசிரவா ?

அது...கனவு...

ஆ.. என் கனவு என்னன்னு சொல்லாம...
ஏங்க, ஏங்க சிரிப்பா வருது....
ஆனா நான் சிரிச்சி... என் மகிழ்ச்சி உன்ன தாக்கிடுமோ
அப்படின்னு நினைக்கும் போது வர்ர சிரிப்பு கூட நின்னுடுது...

நடிகர் உணர்ந்துக் கொள்ள இது சாதாக் கனவு அல்ல...
கனவு அல்ல....கனவு அல்ல....கனவு அல்ல....

அதையும் தாண்டி பெரிதானது....பெரிதானது....பெரிதானது....

" உண்டான பிரச்சினை தன்னாலே பெரிதானதென்ன
மாயம் என்ன பெட்ரோல் பாமே, பெட்ரோல் பாமே...
என்ன பிரச்சினை ஆன போதும் என் ஆட்சி தாங்கிக் கொள்ளும்
உந்தன் படம் தாங்காது தீவிரவாதமே
எந்தன் கனவு என்னவென்று சொல்லாமல்
ஏங்க ஏங்க சிரிப்பு வந்தது....
எந்தன் மகிழ்ச்சி உன்னை தாக்கும் என்றென்னும் போது வந்த சிரிப்பு நின்றது...
நடிகர் உணர்ந்துக் கொள்ள இது சாதாக் கனவு அல்ல...
அதையும் தாண்டி பெரிதானது....

பிரதமரே தாலாட்டும் சோவே நான் தானே தெரியுமா ?
பி.எம்மே ஆட்சியில் நீயும் பாதியே அது உனக்கு தெரியுமா ?

சுபலாலியே லாலியே லாலி லாலியே
பிரதமரே லாலியே லாலி லாலியே

பிரதமரே தாலாட்டும் சோவே நான் தானே தெரியுமா ? உனக்கு தெரியுமா ? "

( தாலாட்டு முடிந்து ஜெ கண் விழிக்க அடுத்த பாடல் கேட்கிறது )

"இந்தியிலும் பாடுவேன்
வெற்றி நடை போடுவேன்
ஏக்துஜே கே லீயே
ஏன்டி நீ பார்த்தியே
எனக்காக ஏக்கம் என்னம்மா
களத்தூரின் கண்ணம்மா
உனக்காக வாழும் மாமன் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறும் தான் ஆள் மாறுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்"

# ஏ.ஜி.எஸ் தியேட்டரில் கண்ணாடி உடைந்து சிதறுகிறது.....