பிரபலமான இடுகைகள்

சனி, 2 பிப்ரவரி, 2013

நடிகரே அன்போடு முதல்வர் நான் கொடுக்கும் பேட்டியே..


குணா கமல் மாதிரி உங்கள நினைச்சிக்கோங்க... ம்... ஆரம்பிங்க...............


நடிகர் அன்போடு முதல்வர் நான் நான் கொடுக்கும் இண்டர்வியூ..
சீ... அறிக்கை.... இல்ல அறிவிப்பு வச்சிக்கலாமா ?... இல்ல பேட்டியே இருக்கட்டும்... எங்க படி...

"  
நடிகரே அன்போடு முதல்வர் நான் கொடுக்கும் பேட்டியே..."

பாட்டாவே படிச்சிட்டியா.... அப்ப நானும்...
மொதல்ல நடிகர் சொன்னேன்ல... இங்க ஆக்டர் போட்டுக்க....

ஆக்டர் ஒன் பேட்டி ரிலீசா, எம் பேட்டி இங்க ரிலீஸ்...

" ஆக்டரே உன் பேட்டி ரிலீஸா, என் பேட்டி இங்கு ரிலீஸே..."

உன்ன நெனச்சி பாக்கும் போது கோவம் மனசுல அருவி மாதிரி கொட்டுது.... ஆனா அத பேசனும்னு ஒக்காந்தா அந்த பேச்சுத்தான் வார்த்த...

" உன்னை எண்ணிப் பார்க்கையில் கோபம் கொட்டுது
(அதான்)
அதை சொல்ல நினைக்கையில் வார்த்த முட்டுது "

அதேதான்...ஆஹா... பிரமாதம்...
பேட்டி...பேட்டி...பேசு...

எனக்கு உண்டான ஓட்டு தன்னால விழுந்துடும்
அது என்னமோ தெரியல...
என்ன மாயமோ தெரியல....
எனக்கு ஒன்னுமே தெரியரதில்ல...

இதையும் பேசிரனுமா ?

நடுவுல நடுவுல தீவிரவாதம், பெட்ரோல் பாம், சட்டம் ஒழுங்கு
போட்டுக்கனும்...

இதப் பாரு... எனக்கு என்ன பிரச்சினைன்னாலும் ஆட்சி தாங்கிடும்...
உன் படம் தாங்குமா ? தாங்காது.. தாங்காது...

பிரதமர்... பிரதமர்... பிரதமர்...

அதையும் பேசிரவா ?

அது...கனவு...

ஆ.. என் கனவு என்னன்னு சொல்லாம...
ஏங்க, ஏங்க சிரிப்பா வருது....
ஆனா நான் சிரிச்சி... என் மகிழ்ச்சி உன்ன தாக்கிடுமோ
அப்படின்னு நினைக்கும் போது வர்ர சிரிப்பு கூட நின்னுடுது...

நடிகர் உணர்ந்துக் கொள்ள இது சாதாக் கனவு அல்ல...
கனவு அல்ல....கனவு அல்ல....கனவு அல்ல....

அதையும் தாண்டி பெரிதானது....பெரிதானது....பெரிதானது....

" உண்டான பிரச்சினை தன்னாலே பெரிதானதென்ன
மாயம் என்ன பெட்ரோல் பாமே, பெட்ரோல் பாமே...
என்ன பிரச்சினை ஆன போதும் என் ஆட்சி தாங்கிக் கொள்ளும்
உந்தன் படம் தாங்காது தீவிரவாதமே
எந்தன் கனவு என்னவென்று சொல்லாமல்
ஏங்க ஏங்க சிரிப்பு வந்தது....
எந்தன் மகிழ்ச்சி உன்னை தாக்கும் என்றென்னும் போது வந்த சிரிப்பு நின்றது...
நடிகர் உணர்ந்துக் கொள்ள இது சாதாக் கனவு அல்ல...
அதையும் தாண்டி பெரிதானது....

பிரதமரே தாலாட்டும் சோவே நான் தானே தெரியுமா ?
பி.எம்மே ஆட்சியில் நீயும் பாதியே அது உனக்கு தெரியுமா ?

சுபலாலியே லாலியே லாலி லாலியே
பிரதமரே லாலியே லாலி லாலியே

பிரதமரே தாலாட்டும் சோவே நான் தானே தெரியுமா ? உனக்கு தெரியுமா ? "

( தாலாட்டு முடிந்து ஜெ கண் விழிக்க அடுத்த பாடல் கேட்கிறது )

"இந்தியிலும் பாடுவேன்
வெற்றி நடை போடுவேன்
ஏக்துஜே கே லீயே
ஏன்டி நீ பார்த்தியே
எனக்காக ஏக்கம் என்னம்மா
களத்தூரின் கண்ணம்மா
உனக்காக வாழும் மாமன் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறும் தான் ஆள் மாறுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்"

# ஏ.ஜி.எஸ் தியேட்டரில் கண்ணாடி உடைந்து சிதறுகிறது.....

1 கருத்து: