ஹைதராபாத் Croma showroom சென்றேன், மடிக்கணினிக்கு இணைப்பு சரடு வாங்கினேன்.
பணம் செலுத்துமிடம் வந்தேன். காசாளர் தொகையை சொன்னார், கொடுத்தேன்.
கணினியை தட்டியபடியே கேட்டார், " பேரு செப்பண்டி ? "
" சிவசங்கர் " என்றேன்.
" சர்நேம் ( surname ) ஏமி ? "
( சர்நேம் - சாதி பெயர், ஆந்திராவில் எல்லோருடைய பெயருக்கும் பின்னால் கண்டிப்பாக சாதி பெயர் இருக்கும் )
" சர்நேம் லேது "
" எந்த ஊர் ?"
" தமிழ்நாடு "
" அங்க யாருக்கும் சர்நேம் கிடையாதா ? " என்று கேட்டார்.
" மிகக் குறைந்த பேருக்கு உண்டு "
" அப்போ உங்களுக்கு கிடையாதா ? "
" உண்டு. பெரியார் "
புரியாமல் பார்த்தார்...
பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
சைதை இடைத் தேர்தலில் பொய்வழக்கில் கைதாகி ( விபரத்திற்கு முந்தைய ஸ்டேடஸ்), நீதிபதி முன் நிறுத்தப்பட்ட போது, அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக...
-
ஊர்வலத்திற்கு வரும் போது வாகனத்தை கிண்டியிலேயே காவல்துறை மடக்கியது. அதற்கு மேல் வாகனத்தை அனுமதிக்க முடியாது என்றனர். அங்கேயே போலீஸார் வீடி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக