பிரபலமான இடுகைகள்

வியாழன், 4 ஏப்ரல், 2013

சட்டமன்ற நிகழ்வுகள் 26.03.2013

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், திமுக சார்பாக ..வேலு பேசத் துவங்கினார், 12.05க்கு மணிக்கு...

12.06க்கு அமைச்சர் வளர்மதி குறுக்கிட துவங்கினார். இனி குறுக்கீடுகளின் விவரங்கள்....

1. அமைச்சர் வளர்மதி 12.06 - 12.08.

 2. . வளர்மதி 12.10 - 12.11

 3. மு. நைனார் நாகேந்திரன் 12.11 - 12.12

 4. அமைச்சர் ரமணா 12.14 - 12.17

 5. .பி.எஸ் 12.17 - 12.20

 6. . செந்தில்பாலாஜி 12.21 - 12.22

 7. செந்தில்பாலாஜி 12.23 - 12.24

 8. நத்தம் விஸ்வநாதன் 12.24 - 12.28

 9. .பி.எஸ் 12.29 - 12.30

 10. நத்தம் 12.30 - 12.34

 11. முனுசாமி 12.34 - 12.35

 12. நத்தம் 12.35 - 12.36

 13. நத்தம் 12.37 - 12.39

 ( 12.40 -க்கு நாங்கள் அனைவரும் எழுந்து குரல் கொடுக்கும் அளவுக்கு நிலை )

 14. .பி.எஸ் 12.41 - 12.42

 15. நத்தம் 12.43 - 12.49

 16. நத்தம் 12.51 - 12.54

 17. நத்தம் 12.55 - 12.55

 18. . தங்கமணி 12.56 - 12.57

 அண்ணன் வேலு மீண்டும் பேச எழுந்திரிக்க, சபா மணியடித்து " நேரம் முடிந்தது, உட்காருங்கள்" என்று முடித்தார்.

அமைச்சர்கள் குறுக்கீடு போக இடையில் கிடைத்த நேரத்தில் தான் அண்ணன் ..வேலு அவர்கள் பேச முடிந்தது.

# எதிர்கட்சி குரலை ஓங்கி ஒலிக்க செய்யும் சபா தனபால் வாழ்க !
 
 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்தான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக சார்பாக அனிதா ராதாகிருஷ்ணன் பேச எழுந்தார். (26.03.2013)

அதிமுக உறுப்பினர்கள் பக்கத்திலிருந்து " ஊஊஊஊஊ " என்று கேலி சத்தம் வந்தது. சிலர் அதை சிரித்து ரசிக்க, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். சபா கண்டுகொள்ளவில்லை.

நானும், அண்ணன் செங்குட்டுவனும் எழுந்து குரல் எழுப்ப, சபா எங்களை உட்கார சொல்லி சைகை காட்டினார். ஜெ எங்களை கவனித்துக் கொண்டிருந்தார்.

நான் "சபைக்குள் ஏதோ விலங்கினம் வந்துவிட்டது போல் தெரிகிறது. வெளியேற்ற நடவடிக்கை எடுங்கள்" என சொல்ல, அவர் சிரித்து விட்டார்.

சபா என்ன செய்வது என தெரியாமல் விழித்து, அதிமுகவினரை பார்த்து அமைதி காக்க சைகை காட்ட....

# இப்படி தான் ஓட்டுறோம்.....

 


சட்டமன்றத்தில் 26.03. 2013 அன்று கேள்வி நேரத்தில் நான் எழுப்பிய கேள்வி


" பின்தங்கிய தொகுதியான குன்னம் தொகுதியில், ஆலத்தூர் ஒன்றியத்தில் அரசுக்கு சொந்தமான இடங்கள் இருக்கின்றன. இது திருச்சி-சென்னை நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கின்ற பகுதி.

எனவே அங்கே ஒரு தொழிற்பேட்டை கொண்டு வந்தால் எங்கள் பகுதி வளர்ச்சி பெற மிகவும் உதவிகரமாக இருக்கும். எனவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்தக் கோரிக்கையை ஏற்க முன் வருவாரா எனத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.
 
மாண்புமிகு திரு.. மோகன் ( ஊரகத் தொழில் துறை அமைச்சர்) : பொதுவாக எந்த மாவட்டமாக இருந்தாலும் தகுதியுடைய நிலங்கள் இருக்குமேயானால், அதிலே 20 தொழில் முனைவோர்கள் திட்டங்களுடன் முன்வருவார்களேயானால், அதனை அரசு பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

# நாங்க வேலையும் பாக்கறோம்ணா.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக