பிரபலமான இடுகைகள்

தேர்தல் பிரச்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் பிரச்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 5

கீழப்பழூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலை சற்றே அதிக போக்குவரத்து நிறைந்தது. சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் லாரிகள் சாலையை அடைத்து செல்லும். ஆனால் அன்று அதிக போக்குவரத்து இல்லாமல் வாய்ப்பாக இருந்தது. 

அரியலூர், பைபாஸ் வழியாக அண்ணா சிலையை அடைந்தோம். வேன் நின்ற வேகத்தில் தளபதி உரையாற்றினார்கள். பைபாஸை பிடித்தோம். வேன் பறந்தே சென்றது. கூட்டத்திற்கு, குன்னம் மெயின்ரோட்டிலிருந்து அந்தூர் சாலையில் இரண்டு பர்லாங் செல்ல வேண்டும்.

அந்தப் பாதையை கிளியர் செய்து வைக்க சொன்னேன். கவுண்ட்டவுன் கடிகாரம், துடித்து துடித்து பத்து மணியை துரத்திக் கொண்டிருந்தது. வேனில் இருந்த எல்லோரும் திகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் கைக்கடிகாரங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். வேனை விட கடிகாரம் வேகமாக ஓடுவது போல இருந்தது.

மாணவியர் விடுதி கண்ணில் பட்டது, குன்னம் வந்தாயிற்று. மணி 9.57. சாலை எங்கும் வாகனங்கள். நீந்தி தான் சென்றது தளபதி வாகனம். நான்கு ரோடு 9.58. இதயம் வெளியே வந்துவிடும் போல இருந்தது. அந்தூர் சாலையில் திரும்பியது வாகனம்.

அகலப்படுத்தப்பட்ட சாலையில் ஒரு புறம் வாகன வரிசை. மறுபுறமே வாகனம் செல்ல வழி. அதில் வேன் புகுந்தது. முன்னால் வாகன அணிவகுப்பு, ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது வேன். அண்ணன் திருமா எழுந்து நின்றார். தளபதி திரும்பி எங்களைப் பார்த்தார்.

“இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கிறது அண்ணா”. தளபதி சிரித்தார். தன் கடிகாரத்தை பார்த்தார். நான் என் கடிகாரத்தைக் காட்டினேன். மக்கள் காத்திருப்பது என் மனக்கண் முன் வந்தது. “அண்ணா, மேடைக்கு செல்ல வேண்டாம். வேனில் இருந்தே பேசுங்கள்” நான் சொன்னேன்

தளபதி தன் கடிகாரத்தைக் காட்டினார். “கலைஞர் செய்திகள் டிவியின் டைமர் சரியான நேரத்தைக் காட்டி விடும் சங்கர்”. “அண்ணா, கலைஞர் செய்திகள் நேரலையை நிறுத்திவிடுவோம்” நான் முடிந்தவரை முயற்சித்தேன்.

தளபதி புன்னகையோடு,”தினம் ஒளிப்பரப்பாவதை இன்று மட்டும் நிறுத்தினால், எல்லோரும் சந்தேகப்படுவார்கள்” என்றார். சாதாரண தொண்டன் கேட்பதற்கும் பொறுப்பாக பதிலளித்தார்.

திருமா, “இது பெரிய வழக்கு ஆகாது” என்றார், வேட்பாளர் அவர் அல்லவா. தளபதி புன்னகைத்தார். “வழக்குக்காக இல்லை. சட்டம் அல்லவா”. சட்டத்தை மதிக்கின்ற பாங்கு. எதிகால முதல்வர் வேட்பாளர், சட்டத்தை மதிப்பது சரிதானே.

வேன் கூட்டம் நடக்கும் திடலை நெருங்கியது. கூட்டத்தை கிழித்து மேடையை நெருங்கியது. 


                         

வேன் மேல் ஏறிய தளபதி சுற்றிப் பார்த்தார். உடனே கீழே இறங்கினார். “மேடைக்கு செல்வோம்” என்றார். நாங்கள் பாதுகாப்பிற்க்காக யோசித்தோம்.

ஆனால் தளபதி வேனை விட்டு இறங்கிவிட்டார். நான் இறங்கி பாதையை விலக்கி மேடைக்கு சென்றேன். பாதையை சீர்படுத்தும் முயற்சியில், கால் இடறி விழுந்தேன். கழகத் தோழர்கள் கைத்தூக்கி விட்டார்கள். தளபதி மேடைக்கு வந்துவிட்டார்.

தளபதி அவர்கள் மேடையின் நாற்புறமும் சென்று கூடியிருந்தோரை நோக்கி கையசைத்தார். மகிழ்ச்சி ஆராவாரம் உச்சம் தொட்டது. அப்போது தான் நான் கூட்டத்தை பார்த்தேன். அட, என்னக் கூட்டம், திடல் நிரம்பி வழிந்தது. தளபதி மகிழ்ச்சியின் உச்சத்தில். 


                                  Photo: (தொடர்ச்சி)...

கீழப்பழூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலை சற்றே அதிக போக்குவரத்து நிறைந்தது. சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் லாரிகள் சாலையை அடைத்து செல்லும். ஆனால் அன்று அதிக போக்குவரத்து இல்லாமல் வாய்ப்பாக இருந்தது. 

அரியலூர், பைபாஸ் வழியாக அண்ணா சிலையை அடைந்தோம். வேன் நின்ற வேகத்தில் தளபதி உரையாற்றினார்கள். பைபாஸை பிடித்தோம். வேன் பறந்தே சென்றது. கூட்டத்திற்கு, குன்னம் மெயின்ரோட்டிலிருந்து அந்தூர் சாலையில் இரண்டு பர்லாங் செல்ல வேண்டும்.

அந்தப் பாதையை கிளியர் செய்து வைக்க சொன்னேன். கவுண்ட்டவுன் கடிகாரம், துடித்து துடித்து பத்து மணியை துரத்திக் கொண்டிருந்தது. வேனில் இருந்த எல்லோரும் திகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் கைக்கடிகாரங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். வேனை விட கடிகாரம் வேகமாக ஓடுவது போல இருந்தது.

மாணவியர் விடுதி கண்ணில் பட்டது, குன்னம் வந்தாயிற்று. மணி 9.57. சாலை எங்கும் வாகனங்கள். நீந்தி தான் சென்றது தளபதி வாகனம். நான்கு ரோடு 9.58. இதயம் வெளியே வந்துவிடும் போல இருந்தது. அந்தூர் சாலையில் திரும்பியது வாகனம்.

அகலப்படுத்தப்பட்ட சாலையில் ஒரு புறம் வாகன வரிசை. மறுபுறமே வாகனம் செல்ல வழி. அதில் வேன் புகுந்தது. முன்னால் வாகன அணிவகுப்பு, ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது வேன். அண்ணன் திருமா எழுந்து நின்றார். தளபதி திரும்பி எங்களைப் பார்த்தார்.

“இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கிறது அண்ணா”. தளபதி சிரித்தார். தன் கடிகாரத்தை பார்த்தார். நான் என் கடிகாரத்தைக் காட்டினேன். மக்கள் காத்திருப்பது என் மனக்கண் முன் வந்தது. “அண்ணா, மேடைக்கு செல்ல வேண்டாம். வேனில் இருந்தே பேசுங்கள்” நான் சொன்னேன்

தளபதி தன் கடிகாரத்தைக் காட்டினார். “கலைஞர் செய்திகள் டிவியின் டைமர் சரியான நேரத்தைக் காட்டி விடும் சங்கர்”. “அண்ணா, கலைஞர் செய்திகள் நேரலையை நிறுத்திவிடுவோம்” நான் முடிந்தவரை முயற்சித்தேன்.

தளபதி புன்னகையோடு,”தினம் ஒளிப்பரப்பாவதை இன்று மட்டும் நிறுத்தினால், எல்லோரும் சந்தேகப்படுவார்கள்” என்றார். சாதாரண தொண்டன் கேட்பதற்கும் பொறுப்பாக பதிலளித்தார். 

திருமா, “இது பெரிய வழக்கு ஆகாது” என்றார், வேட்பாளர் அவர் அல்லவா. தளபதி புன்னகைத்தார். “வழக்குக்காக இல்லை. சட்டம் அல்லவா”. சட்டத்தை மதிக்கின்ற பாங்கு. எதிகால முதல்வர் வேட்பாளர், சட்டத்தை மதிப்பது சரிதானே.

வேன் கூட்டம் நடக்கும் திடலை நெருங்கியது. கூட்டத்தை கிழித்து மேடையை நெருங்கியது. வேன் மேல் ஏறிய தளபதி சுற்றிப் பார்த்தார். உடனே கீழே இறங்கினார். “மேடைக்கு செல்வோம்” என்றார். நாங்கள் பாதுகாப்பிற்க்காக யோசித்தோம்.

ஆனால் தளபதி வேனை விட்டு இறங்கிவிட்டார். நான் இறங்கி பாதையை விலக்கி மேடைக்கு சென்றேன். பாதையை சீர்படுத்தும் முயற்சியில், கால் இடறி விழுந்தேன். கழகத் தோழர்கள் கைத்தூக்கி விட்டார்கள். தளபதி மேடைக்கு வந்துவிட்டார்.

தளபதி அவர்கள் மேடையின் நாற்புறமும் சென்று கூடியிருந்தோரை நோக்கி கையசைத்தார். மகிழ்ச்சி ஆராவாரம் உச்சம் தொட்டது. அப்போது தான் நான் கூட்டத்தை பார்த்தேன். அட, என்னக் கூட்டம், திடல் நிரம்பி வழிந்தது. தளபதி மகிழ்ச்சியின் உச்சத்தில். 

தளபதி உற்சாகத்தோடு நின்று கையசைத்தார். தளபதி அவர்களுக்கு வெற்றி மாலை அணிவித்தார்கள். அண்ணன் திருமா மைக்கை பிடித்தார், ”வந்திருப்பவர்கள் பத்திரமாக வீடு திரும்புங்கள். நாம் வெற்றி பெற வேன்டியது அவசியம்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.

திருமா, தளபதி அவர்களுக்கு மலர் செங்கோல் கொடுத்து மகிழ்ந்தார். தளபதி அவர்களுக்கு மேடையை விட்டு இறங்க மனம் வரவில்லை. அவ்வளவுக் கூட்டம். இது தான் குன்னத்தின் உச்சபட்சக் கூட்டம் என எதிர்கட்சியினரும் மனமுவந்து என்னிடம் பிறகு பாராட்டினார்கள்.

தளபதி வாகனத்திற்கு திரும்பினார். அவர் மொபைல் அலறியது. அவரது சகோதரி செல்வி, கூட்டத்தில் பேச முடியாமல் போனது குறித்து வருந்தினார், “எவ்வளவு கூட்டம் ?”என மகிழ்ந்தார்.

அண்ணன் ஆ.ராசா தளபதியை அழைத்தார், “அண்ணா, லைவ் பார்த்தேன். பேச முடியாமல போனது வருத்தமாக இருக்கிறது”. தொடர்ந்து மொபைல் அழைப்புகள். வேன் உளுந்தூர்பேட்டையை நெருங்கியது. பொன்முடி வரவேற்பளித்தார். 

தங்குமிடம் சென்றோம். மணி 11.00. அமைதியாக அமர்ந்து, வரவேற்ற அண்ணன் ஏ.வ.வேலு உள்ளிட்டோரிடம் தொகுதி நிலவரம் கேட்டார். உடன் வந்தவர்களை உணவருந்தி ஊர் திரும்ப சொன்னார். அண்ணன் திருமா அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.

அங்கிருந்து வெளியில் வந்தேன். ஜெயங்கொண்டம் இளைஞரணி அமைப்பாளர் மணி வந்து கைக்குலுக்கி, “பிறந்தநாள் வாழ்த்துக்கள்”என்றதை முன்னாள் எம்.எல்.ஏ அண்ணன் உதயசூரியன் பார்த்துவிட்டார். “என்னடா தம்பி ?”. மணி விளக்க, காரிலிருந்து வேட்டி எடுத்து வரசொல்லி, அணிவித்து வாழ்த்தினார் அண்ணன் சூரியன்.

# தடை பல கடந்து நிறைவான நாள் தான், மனம் நிறைந்த நாள் தான் !

தளபதி உற்சாகத்தோடு நின்று கையசைத்தார். தளபதி அவர்களுக்கு வெற்றி மாலை அணிவித்தார்கள். அண்ணன் திருமா மைக்கை பிடித்தார், ”வந்திருப்பவர்கள் பத்திரமாக வீடு திரும்புங்கள். நாம் வெற்றி பெற வேன்டியது அவசியம்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.



                               

திருமா, தளபதி அவர்களுக்கு மலர் செங்கோல் கொடுத்து மகிழ்ந்தார். தளபதி அவர்களுக்கு மேடையை விட்டு இறங்க மனம் வரவில்லை. அவ்வளவுக் கூட்டம். 


                               

இது தான் குன்னத்தின் உச்சபட்சக் கூட்டம் என எதிர்கட்சியினரும் மனமுவந்து என்னிடம் பிறகு பாராட்டினார்கள்.

தளபதி வாகனத்திற்கு திரும்பினார். அவர் மொபைல் அலறியது. அவரது சகோதரி செல்வி, கூட்டத்தில் பேச முடியாமல் போனது குறித்து வருந்தினார், “எவ்வளவு கூட்டம் ?”என மகிழ்ந்தார்.

அண்ணன் ஆ.ராசா தளபதியை அழைத்தார், “அண்ணா, லைவ் பார்த்தேன். பேச முடியாமல போனது வருத்தமாக இருக்கிறது”. தொடர்ந்து மொபைல் அழைப்புகள். வேன் உளுந்தூர்பேட்டையை நெருங்கியது. பொன்முடி வரவேற்பளித்தார்.

தங்குமிடம் சென்றோம். மணி 11.00. அமைதியாக அமர்ந்து, வரவேற்ற அண்ணன் ஏ.வ.வேலு உள்ளிட்டோரிடம் தொகுதி நிலவரம் கேட்டார். உடன் வந்தவர்களை உணவருந்தி ஊர் திரும்ப சொன்னார். அண்ணன் திருமா அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.

அங்கிருந்து வெளியில் வந்தேன். ஜெயங்கொண்டம் இளைஞரணி அமைப்பாளர் மணி வந்து கைக்குலுக்கி, “பிறந்தநாள் வாழ்த்துக்கள்”என்றதை முன்னாள் எம்.எல்.ஏ அண்ணன் உதயசூரியன் பார்த்துவிட்டார். “என்னடா தம்பி ?”. மணி விளக்க, காரிலிருந்து வேட்டி எடுத்து வரசொல்லி, அணிவித்து வாழ்த்தினார் அண்ணன் சூரியன்.

# தடை பல கடந்து நிறைவான நாள் தான், மனம் நிறைந்த நாள் தான் !

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 4

உடையார்பாளையம் நுழைந்த தளபதியின் வாகனம் அண்ணா சிலை அருகில் நின்றது. தாமதத்தில் 5 நிமிடம் குறைக்கப்பட்டிருந்தது. அதுவே பெரிய ஆறுதலாக இருந்தது. பத்து மணிக்காவது குன்னத்தை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

                   

கிரிக்கெட் மேட்சில், சேஸிங்கில் ரன்னையும், மிச்சமிருக்கும் பந்து எண்ணிக்கையையும் மாறி மாறி கணக்கு பார்ப்பது போல, போக வேண்டிய தூரத்தையும், மிச்சமிருக்கும் நேரத்தையும் கணக்கிட்டு கொண்டிருந்தேன். அதற்குள் தளபதி ஒரு நிமிட உரையை முடித்திருந்தார்.

விளாங்குடி கைக்காட்டி நோக்கி கான்வாய் பறந்தது. தளபதி அவர்கள் தொகுதி நிலவரம் குறித்து விசாரித்து வந்தார்கள். மற்றக் கட்சிகளின் பணி, வேட்பாளர் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். கைக்காட்டியில், அரியலூர் ஒ.செ ஜோதிவேல் காத்திருக்க, அதற்கு அடுத்த பாயிண்டில் இருவர் பரபரத்திருந்தனர்.

அடுத்த பாயிண்ட்டான கீழப்பழூரில் திருமானூர் ஒ.செ கென்னடியும், மா.து.செ தனபாலும் தான் பரபரத்திருந்தனர். காரணம், கீழப்பழூரை கட் செய்து, நேராக அரியலூர் போகப் போவதாக அவர்களுக்கு செய்தி. யார் சொன்னார்கள் என்று தெரியாமலே வதந்தி பரவி விட்டது.

பல வருடங்களாக, திருமானூர் ஒன்றியப் பகுதிக்கு தளபதி அவர்களின் சுற்றுப்பயணம் அமையாத காரணத்தால், இந்த வாய்ப்பை சிறப்பாக ஏற்பாடு செய்து, கூட்டமும் பெருமளவில் திரண்டிருந்தது. கேட்பவர்களிடம் சமாளிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

9.15 (6.45). கைகாட்டியை அடைந்த போது இந்த செய்தி கிடைத்தது. அவர்களை அழைத்து கீழப்பழூர் வருவதை உறுதி செய்தோம். கைக்காட்டியிலிருந்து அரியலூர் செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு வருவதால், அந்தப் பாதையில் சென்றாலும் தாமதமாகும். அதற்கு கீழப்பழூர் சென்று அரியலூர் செல்வதே சரி.

கைக்காட்டியில் கூடியிருந்த கூட்டத்தை பார்த்ததும் தளபதி அவர்களுக்கு மனம் கொள்ளவில்லை, “இவ்வளவு பேர் திரண்டிருக்கிறார்கள், அதிக நேரம் பேச முடியவில்லையே” என. ஒரு நிமிட உரை, கிளம்பினோம்.

இதற்குள் காரில் சார்ஜ் செய்யப்பட்டு எனது மொபைல் உயிர் பெற்றது. அரியலூர் நகர செயலாளர் முருகேசனை அழைத்து, அரியலூர் நகருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக பேருந்து நிலையம் வழியாக பாதையை மாற்றச் சொன்னேன், பத்து நிமிடம் மிச்சமாகும் என்பதால்.

9.30 (7.00). கீழப்பழுரை அடைந்தோம். ஒரே நிமிட உரை. கூடியிருந்தவர்களுக்கு வருத்தம், தளபதி அதிக நேரம் பேசவில்லையே என, தளபதி அவர்களுக்கு வருத்தம், அதிக நேரம் பேச முடியவில்லையே என. அந்த இருவருக்கும் மகிழ்ச்சி, தளபதி வந்தாரே என. எனக்கும் மகிழ்ச்சி, இவர்களையும் ஏமாற்றவில்லை, குன்னமும் அடைந்து விடலாம் என்று.
( தொடரும்)....

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 2

தளபதி கான்வாய் சிதம்பரத்தில் நுழைந்தது. தெற்குரத வீதியிலிருந்து, மேலரத வீதிக்கு திரும்பும் போதே, வண்டியின் வேகம் குறைய ஆரம்பித்தது. போலீஸ் ஸ்டேஷன் கடக்கும் போதே, வேனின் இருபுறமும் அலையடித்து ஒதுங்குவது போல் மக்கள் வெள்ளம். 


                   

பஸ் நிறுத்தம் அருகில், பேசும் இடம். தளபதி அவர்களும் திருமாவும் வேனின் மேற்புறம் செல்லும் போது எழுந்த உற்சாகம் சில நிமிடங்கள் நீடித்தது. நாங்கள் எழுந்து வேனின் நான்குபுறமும் சுற்றிப் பார்த்தோம், ஆனந்தம். மனிதக் கடலுக்கு நடுவே தீவு போல மிதந்தது, தளபதி அவர்களின் வாகனம்.

பேச ஆரம்பித்த தளபதி அவர்கள், கூடியிருந்தவர்களின் உணர்வை பிரதிபலித்து, உற்சாக மிகுதியில் இருந்தார். பேசும் நேரம் கூடிக் கொண்டே போனது. 


                           


ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அள்ளியது. “நான் சாலை வழியாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். பிரச்சாரத்திற்கு ஜெ எப்படி வருவார் ?” எனக் கேட்டு தளபதி தன் கையை “ஹெலிகாப்டர் காற்றாடி” போல் சுழற்றி காட்ட, “ஹோ” என்று எழுந்த ஓசை உச்சம் தொட்டது.

வேனின் கடைசி சீட்டில் இருந்த மகேஷ் தீவிரமாக செல்போனில் ஷூட் செய்து கொண்டிருந்தார். ஒரு டாஸ்மாக் நபர் தளபதியின் பேச்சுக்கு, தீவிரமாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தார். உண்மையில் ரசிக்கத்தக்க அளவில் இருந்தது. மகேஷ் அனேகமாக இதை குறும்படமாக வெளியிடும் வாய்ப்பு இருக்கிறது.

வேனின் முன் சீட்டை ஒட்டி, நின்று பேசும் மேடை. அதை அடுத்து இரண்டு இருக்கைகள். ஒன்றில் அண்ணன் எம்.ஆர்.கே.பி, இன்னொன்றில் அண்ணன் திருமா. அதற்கு அடுத்த வரிசையில் ஒரு இருக்கை, அதில் மகேஷ். இன்னொரு இரண்டு இருக்கை, அதில் அண்ணன்கள் துரைசாமி, சுபா.

இடையில் ஒரு பிளாஸ்டிக் ஸ்டூல் போட்டு என்னை இருத்தினார் மகேஷ். ஜின்னா நட்த்துனராக உள்ளே நடமாடிக் கொண்டிருந்தார், ஏதாவது எழுதும் பணி என்றால் நிற்கும் மேடையின் படிக்கட்டில் அமர்ந்து எழுதுவார். கலகலப்பாக கல்லூரி டூர் போல இருந்தது.

3.40-க்கு செல்ல வேண்டிய கீரப்பாளையத்திற்கு செல்லும் போது மணி 5.50. சரியாக இரண்டு மணி நேரம், பத்து நிமிடங்கள் தாமதம். அங்கேயும் நல்லக் கூட்டம். அடுத்தப் பாயிண்டான ஒரத்தூர் செல்வதற்குள், வழியில் மூன்று ஊர்களிலும் மக்கள் திரண்டு நின்று வேனை மறிக்க முயன்றனர். தளபதி கையசைத்து சமாளித்து வந்தார்.


                           

சேத்தியாத்தோப்பை அடையும் போதும் அதே தாமதம்(4.20-6.30). நல்லக் கூட்டம், எழுச்சியான வரவேற்பு. குமாரக்குடி செல்லும் போது மணி 6.50, தாமதம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆனது. இது போன்ற டூர்களில் நேரத்தை குறித்துக் கொண்டு, அட்ஜஸ்ட் செய்வது என் வழக்கம். அதனால் இந்தப் புள்ளி விபரம். அது தான் காப்பாற்றியது என்னை.

பயணத் திட்டத்தில், கடைசியாக குன்னம் கூட்டத்திற்கு 7.40க்கு செல்வதாக திட்டம். 9.30-க்கு சென்றால் கூட போதும். 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதம் என்றால் சரி செய்யலாம். ஆனால் சோழத்தரத்தில் பேசும் போது 2 மணி நேரம் 25 நிமிட லேட். இதே நிலையில் போனால் குன்னம் போகும் போது இரவு பத்தாகிவிடும். அதற்கு மேல் பேச அனுமதி கிடையாது.

லேசாக எனக்கு ஜுரம் வரும் போல இருந்தது....

(தொடரும்...)

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 1

23.03.2014. வைத்தீஸ்வரன்கோவில். மாலை 3.00 மணி.

கி விட்டார்கள் என தகவல் வந்தது. வெளியில் வெயில் கடுமையாக இருந்தது. முதல் நாள் நாகை மாவட்டம் சீர்காழியில் பொதுக்கூட்டத்தில் பேசிய தளபதி அவர்கள், வைத்தீஸ்வரன்கோவிலில் தனியார் விடுதியில் தங்கியிருந்தார்கள்.

கடலூர் மாவட்ட எல்லையான வல்லம் படுகையில் மாலை 3.00 மணிக்கு பிரச்சாரம் ஆரம்பிப்பதாக திட்டம். இரண்டு நாளாகவே மாலை 5.00 மணி வரை வெயில் கடுமையாக தகிக்க ஆரம்பித்திருந்தது. அதனால் சற்று தாமதமாக ஆரம்பிக்கலாம் என அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களும் நானும் ஆலோசித்திருந்தோம்.


                         


4.00 மணிக்கு கிளம்பினார்கள் தளபதி. பிரச்சாரம் செய்ய வசதியாக மேலே திறக்கும் வசதி உள்ள வேன். வேனில் தளபதி அவர்களுக்கு உதவியாக மாநில இளைஞரணி துணை செயலாளர் சகோதரர் அசேன் முகம்மது ஜின்னாவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும்.

தளபதியின் சுற்றுப்பயண விபரங்கள், பேசிய பேச்சுகள், பத்திரிக்கை செய்திகள், அன்றைய சுற்றுப்பயண விபரங்கள், பிரச்சார இடங்கள், அவை குறித்த விபரங்கள், ரூட் மேப் என தயாராக இருக்கிறார்கள். தற்போதைய செய்திகள் குறித்து அப்டேட்கள். ஜின்னா மூன்று மொபைல்களை வைத்துக் கொண்டு தகவல் தொடர்பில் பிஸி.

தளபதி அவர்கள் வாகனத்தில் வேட்பாளரோடு மாவட்டசெயலர்கள் பயணிப்பது வழக்கம். அதனால் எனக்கும் அந்த வாய்ப்பு. வேட்பாளர் அண்ணன் திருமா, கடலூர் மாவட்ட செயலர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் பா.துரைசாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் அண்ணன் சுபா.சந்திரசேகர் ஆகியோரோடு நானும்.

மணி 04.15. கொள்ளிடம் பாலம் தாண்டும் போதே மேளதாள முழக்கம் கேட்டது. கொள்ளிடக் கரையில் அமைக்கப்பட்டிருந்த சாலையை தளபதி அவர்களிடம் சுட்டிக்காட்டினார் எம்.ஆர்.கே, “இந்த சாலை நம் ஆட்சிக்காலத்தில் தான் அமைக்கப்பட்டது. எனது சொந்த ஊரை நேரடியாக இணைக்கிறது. தூரம் குறைகிறது”

சாலையை பார்த்தேன். தொலைவில் ஒரு டி.வி.எஸ்50 பறந்து வந்தது. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள். வரும் போதே தளபதி வாகனத்தை பிடித்து விட்ட குஷி முகத்தில் தாண்டவமாடியது. வண்டியில் நேராக வந்து மோதி விடுவாரோ என எனக்கு பயம். குழந்தைகள் வேனை நோக்கி ஆர்வமாக கையாட்டினார்கள்.

தளபதி அவர்கள் வாகனம் வல்லம்படுகையை அடைந்தது. மேள, தாளம் முழங்க, ஓயிலாட்டத்தோடு அந்தப் பகுதியே அதிர்ந்தது. சாலையே தெரியவில்லை. வேனின் மேற்புறம் மெல்ல திறந்தது. தளபதி அவர்களும் திருமாவும் மேற்புறம் தோன்ற உற்சாகக் குரல்கள்.

தளபதி அவர்கள் பத்து நிமிடம் உரையாற்றினார்கள். உற்சாகமான ரெஸ்பான்ஸ் கழகத் தோழர்களிடமிருந்தும், விடுதலை சிறுத்தைகளிடமிருந்தும். முதல் இடமே சிறப்பாக அமைந்த குஷியில் எல்லோரும், குறிப்பாக அண்ணன் எம்.ஆர்.கே.பி, சொந்த மாவட்டம் அல்லவா...

(தொடரும்)