பிரபலமான இடுகைகள்

சனி, 28 செப்டம்பர், 2013

அதிரடிப் படை வீரர்கள் எங்களை சுற்றி நின்றனர்....

அது 2001-2006 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலம். சைதாப்பேட்டை இடைத்தேர்தல். அண்ணன் மா.சுப்ரமணியன் கழக வேட்பாளர். அரியலூர் மாவட்டத்திற்கு 135-ஆ வார்டு ஒதுக்கப்பட்டு தேர்தல் பணியாற்றினோம்.

அந்த வார்டிற்கு அ.தி.மு.க சார்பில் தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன். அப்போது அவர் துணை மேயர். அதிகாரத்தின் உச்சியில் இருந்த நேரம். அந்தப் பகுதியின் புகழ் பெற்ற தாதா ஃபங்க் குமார். 

இருவர் சார்பாகவும் எங்களுக்கு மிரட்டல் விடப்பட்டது. அதை மீறி பணியாற்றிக் கொண்டிருந்தோம். எங்கள் மீது ஒரு கண்ணாகவே இருந்தார்கள். வாக்குப் பதிவிற்கு இரண்டு நாள் முன்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ஓட்டு கேட்டுக் கொண்டிருந்தோம். 

திடீரென கராத்தே தலைமையில் போலீசார் எங்களை சுற்றி வளைத்தனர். ஓட்டுக்கு பணம் கொடுத்தோம் என்று காரணம் சொன்னார்கள். போலீசார் என்னை சோதனையிட்டனர். என் சட்டைப் பையில் அறுநூற்று சொச்சம் ரூபாய் தான் இருந்தது. 

என்னோடு சைதை பகுதி 135 –வது வட்டத்தை சேர்ந்த சேர்ந்த கழக நிர்வாகிகள் ரவிராஜ், நாகா, ரமேஷ், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லூயி கதிரவன் கைது செய்யப்பட்டு சைதை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டோம்.

எங்கள் மீது புகார் யார் கொடுப்பது என விவாதிக்கப்பட்டு அப்போதைய ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ இன்பத்தமிழன் அழைக்கப்பட்டார். அவர் கொடுத்த நாற்பதினாயிரம் ரூபாய் எங்களிடத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்கு பதிவானது.

செய்தி கேள்விப்பட்டு, தலைவர் கலைஞர் சைதை கழகத் தேர்தல் அலுவலகத்திற்கு வந்திருப்பதாக தகவல் வந்தது. காவல் நிலையத்திலிருந்து வெகு அருகில் அலுவலகம். உடனே எங்களை இடம் மாற்றுவதற்கான நடவடிக்கை துவங்கியது.

             

சிறிது நேரத்தில் அதிரடிப் படை வீரர்கள் வந்தனர். எங்கள் அய்ந்து பேரையும் கிளப்பினர். காவல் நிலையத்தின் உள்ளேயே எங்களை சுற்றி சுவர் வைத்தது போல் நின்றனர், தீவிரவாதிகளைப் போல. அப்படியே யார் கண்ணிலும் படதாவாறு வெளியில் அழைத்து வந்தனர். சினிமாவில் பார்க்கும் காட்சிகள் எங்களை சுற்றி நிஜத்தில் நடந்துக் கொண்டிருந்தது. 

எங்களை அதிரடிப்படையினரின் வாகனத்தில் ஏற்றினர். அப்போது ஒரு கார் காவல் நிலைய வளாகத்தினுள் நுழைந்தது. காரில் இருப்பவர்கள் கண்ணில் படாமல் எங்களை கொண்ட வாகனம் வெளியேறியது. பிறகு சொன்னார்கள், காரில் வந்தவர் தளபதி அவர்கள், எங்களைப் பார்ப்பதற்கு. அவருக்கு பயந்தே அந்த அவசரம்.

எங்களை கொண்டு சென்ற அதிரடிப்படை வாகனத்திற்கு முன்னும் பின்னும் அதிமுக வாகனங்கள் இன்பத்தமிழன் தலைமையில், தெலுங்கு பட வில்லன் குழுவை போல், ஓ என குரல் எழுப்பிக் கொண்டு. (இதற்கு பரிசு தான் ஒரு மாதத்தில் இன்பத்தமிழன் அமைச்சர்). 


தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக