பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 4 அக்டோபர், 2013

அவர் நடக்கறதையே ஒரு பி.எச்.டி செய்யலாம்....

என்ன தான் ரஜினி ரசிகனாக இருந்தாலும் கமல் நடிப்பை ரசிப்பது போல், எம்.ஜி.ஆரின் துள்ளல் நடிப்பின் ரசிகனான நான் சிவாஜியை ஒதுக்க முடியவில்லை. சற்றே மிகை நடிப்பு என்ற திரை விமர்சகர்களின் வாதத்தை ஒப்புக் கொண்டாலும், அதிலும் ஒரு சுவை இருக்கத் தான் செய்கிறது.

அதிலும் சிவாஜியின் நடிப்பு, உடல் மொழி, முகபாவம், கண்ணசைவு, புருவ சுளிப்பு எல்லாமே வேறொருவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இதை எல்லாம் தாண்டி சிவாஜியின் நடை இருக்கிறதே.....

வசனம் பேசும் போது நடப்பது சரி. சில பாடல்களில் அவர் நடப்பதை வைத்தே முடித்திருப்பார்கள். அதில் அவர் காட்டும் வித்தியாசங்கள், அடடா. அதில் இன்பமான பாடலுக்கு ஒரு நடை, சோகப்பாடலுக்கு ஒரு நடை.

“வசந்தமாளிகை” திரைப்படத்தில், தன் காதலிக்காக தான் வடிவமைத்த வசந்தமாளிகையை சுற்றி தன் காதலியிடம் சுற்றிக் காட்டுவார். அப்போது ஒரு நடை நடப்பார், அதை பார்க்க வேண்டும்.

                   

நடக்கும் போது படி ஏறி ஒரு இடைவெளி விட்டு நிற்பார். அப்போது உடலில் ஒரு அசைவும் இல்லாமல் வலது கை மட்டும் ஆடிக் கொண்டிருக்கும். அப்படியே வலது காலில் ஒரு ஜெர்க் கொடுத்து விட்டு திரும்ப நடக்க ஆரம்பிப்பார்.

இந்தக் காட்சிகள் புதுமுக நடிகர்களுக்கு ஒரு பாடத்திட்டமாகவே வைக்கலாம். தொடர்ந்து பேசிக் கொண்டே நடப்பார். நடக்கும் போதே ஒரு மெல்லிய “யூ டர்ன்” அடிப்பார். கைகளை மேலும் கீழுமாக கொண்டு சென்று பேசியவாறே இரண்டு கைகளையும் தட்டுவார். நாட்டியம் தான். மியூட் போட்டு விட்டு ரசிக்கலாம்.

கண்ணாடி மாளிகையை சுற்றிப் பார்த்து விட்டு வாணீஸ்ரீ திரும்ப ஓடி வருவார். அப்போது கேமரா சைடில் இருக்க சிவாஜி காத்திருப்பார். பின்புறம் கையை கட்டிக் கொண்டு இடது காலை லேசாக மடக்கி நிற்பார். சிம்ப்ளி சூப்பர். அப்புறம் தான் “மயக்கம் என்ன” பாடல் துவங்கும்.

இந்தப் பாடலில் நடன அசைவுகளே இருக்காது. நடையிலும், அசைவிலுமே அசத்துவார். பாடல் முடியும் தருவாயில் சிறு நடன அசைவு காட்டுவார். அப்படியே “இரண்டு மனம் வேண்டும்” பாடலில் தளர்ந்த நடை போட்டு சோக ரசம் பிழிவார்.

அவரது நடை காட்சிகளை மாத்திரம் எடுத்துக் கொண்டு ஒரு பி.எச்.டி செய்யலாம். சிவாஜிக்கு பிறந்தநாள்.

# பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார், அவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக