பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

சுழலும் சூரியன் - நேரடி அனுபவம்

5-ம் தேதி மாலையே தளபதி அவர்கள் சென்னையிலிருந்து கிளம்பி பெரம்பலூர் வந்து தங்கி விடுவதாக திட்டமிடப் பட்டிருந்தது. பெரியார் திடலில் ஒரு நிகழ்வில் பங்கேற்க வேண்டிய நிலையில், அதை முடித்து இரவு 10.30 மலைக்கோட்டை விரைவு ரயிலில் எழும்புரிலிருந்து கிளம்பினார்கள்.

விடியற்காலை 3 மணிக்கு வரவேண்டிய ரயில் வழக்கம் போல் தாமதமாக வந்தது. 

                          DSC08280.JPG

அரியலூர் ரயில் நிலையத்தில் கழகத் தோழர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு 4 மணிக்கு அரியலூரிலிருந்து புறப்பட்டு, பெரம்பலூர் அண்ணன் ராசா அவர்கள் அலுவலகத்தை அடைந்தார்கள். அப்போது 4.45 ஆகியிருக்கும்.

காலை பணிகள் முடித்து, உணவருந்தி, காலை 08.30 மணிக்கு காரில் ஏறிவிட்டார். வழி நெடுக வரவேற்பை ஏற்றுக் கொண்டு மலையாளப்பட்டியை அடையும் போது 09.45.

                         

 அங்கு கழகக் கொடியேற்றி விட்டு மேடைக்கு வந்த போது மணி 10.00. நண்பகல் 12.30 வரை நாற்காலியை விட்டு எழுந்திரிக்காமல் நிகழ்வை கவனித்தார் தளபதி. ( அதற்குள் நான் 4 தடவை எழுந்து மேடையிலேயே உலாத்திவிட்டேன்).

இரண்டு கி.மீ தள்ளியிருந்த தங்கும் இடத்திற்கு சென்று உணவருந்தி விட்டு அங்கு கழக கொடியை ஏற்றி வைத்து விட்டு சரியாக இரண்டு மணிக்கு மேடைக்கு வந்து விட்டார். மாலை 4.30 வரை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கலந்து கொண்ட 750 இளைஞரணி தோழர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார், 50 தொண்டரணி தோழர்களுக்கும் வழங்கினார். 
                                  

மணி 5.45, மலையாளப்பட்டியிலிருந்து கிளம்பினார்.வழிநெடுக சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள் வரவேற்பை கையசைத்து ஏற்றுக் கொண்டு பெரம்பலூர் அண்ணன் ராசா அவர்கள் அலுவலகம் வந்த போது மணி 7.00. 

                               

குளித்து உடைமாற்றி கிளம்பும் போது மணி 07.30. வழியில் வரவேற்புகளை ஏற்று அரியலூர் மேடை ஏறிய போது 08.15. 

                                                                 
                                                               
                                                                             
                              

தளபதி அவர்கள் பேச ஆரம்பித்தப்போது மணி 08.45. ஒரு மணி நேரம் பேசினார்கள். அரியலூரிலிருந்து கிளம்பும் போது மணி 09.55. கார் பயணம். வழியில் உணவருந்தி சென்னை சென்றடைய எப்படியும் நள்ளிரவு 02.30 ஆகியிருக்கும். 

15 நாள் அலைச்சலில் அசந்து நான் தாமதமாக எழுந்து, கூட்டம் குறித்த செய்திக்காக நாளிதழ்களை டீ'யோடு புரட்டியப் போது மணி காலை 9.00. மொபைல் அழைத்தது. 

"என்ன சிவசங்கர், களைப்பு நீங்கி எழுந்தாச்சா ? கூட்டம் சிறப்பு" அழைத்தவர் தளபதி தான், வேறு யார் !

# கூட்டிக் கழிச்சு பாருங்க, கணக்கு சரியா வரும்.... உழைப்புன்னா தளபதி தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக