பிரபலமான இடுகைகள்

வியாழன், 28 பிப்ரவரி, 2013

ஹைதராபாத் அனுபவங்கள்....



டாக்டர்.காமராஜ் என்றவுடன் தமிழர் என நினைத்து, தமிழில் பேசினால், தெலுங்கில் பேசுகிறார், ஆந்திராக்காரர். பெருந்தலைவர் காமராஜர் மீதான அன்பால் வைக்கப்பட்ட பெயராம்.

அறைக்கு உணவு எடுத்து வரும் உணவக நபர், நாங்கள் தமிழில் பேசுவதைக் கேட்டு நின்றார். என்ன என்று கேட்டால், காரைக்குடிக்காரராம், கணேசன். பத்து வருடமாக இங்கு வேலை செய்கிறாராம்.

மருத்துவமனை அறையை சுத்தம் செய்யும் துப்புரவுப் பெண் தெலுங்கர், அவர் வேறொரு பெண்மணியை அழைத்து வந்து, மாட்லாடு என சொல்ல, வந்தப் பெண், நீங்கள் தமிழா எனக் கேட்டார். அவர் யார் எனக் கேட்டால் தமிழர். நாற்பது வருடங்களுக்கு முன்பு திருச்சியிலிருந்து இங்கு குடியேறியவர். இவர் தமிழில் பேசுவதைக் கண்டு தெலுங்கு பெண்மணிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

எனது தந்தையாருக்கு அறுவை சிகிச்சை செய்தவர் டாக்டர்.பிரவீன், ஆந்திரர். இவர் எப்போதும் என் தந்தையிடம் விவாதிக்கும் சப்ஜெக்ட் - ஈழம். பிரபாகரன், யாழ்பாணம், முள்ளிவாய்க்கால் என விரல் நுனியில் அனைத்து விவரங்களும் அத்துபடி.

பக்கத்து அறையில் இருக்கும் ஆந்திர எம்.எல்.ஏவின் பாதுகாவலரான காவல்துறை நண்பர், கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் என சரத்குமார் வரை அலசி ஆராய்கிறார்.

அண்ணன் ராசா அவர்கள், அப்பாவை சந்தித்த புகைப்படம் நாளிதழில் வெளியானதைப் பார்த்து, மருத்துவமனைக்கு தேடி வந்தார் வழக்கறிஞர் கோவிந்தசாமி. பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள டி.களத்தூரை சேர்ந்தவர். ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டவர். ஆந்திரர்களின் குணநலன்கள குறித்து பேச்சு வந்த போது, இங்கு வாழும் தமிழர்களிடம் நல்லுறவே பாராட்டுகின்றனர் என சிலாகித்தார்.

" சென்னை ஷாப்பிங் மால்" என பெயர் தாங்கிய பிரம்மாண்ட வணிக வளாகம். எங்கு நோக்கினும் தமிழ் நடிகர்களின் முகம் தாங்கிய போஸ்டர்கள்.

இப்படியாக தமிழர்கள் பெருமளவில் ஹைதராபாத்தில் வாழ்வதும், தெலுங்கு மக்கள் தமிழகம் குறித்து கொண்டுள்ள ஆர்வம் குறித்தும் ஹைதராபாத்தை சேர்ந்த தெலுங்கு நண்பரோடு விவாதித்தபோது சொன்னார்," என்ன இருந்தாலும், நாங்கள் ஒரு காலத்தில் மதராஸ் பிரசிடென்சியை சேர்ந்தவர்கள் தானே" .

" சென்னை தானே தலைநகராக இருந்தது. மொழியும் பெரியப் பிரச்சினை இல்லை. ஏறக்குறைய பல வார்த்தைகள் ஒத்துப் போகும். திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள், இப்படி பல காரணங்கள் " என்றார் அந்த நண்பர்.

# சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து.....

பி.எஸ்.எல்.வியும், வெங்கியும்...



பி.எஸ்.எல்.வி. சி - 20 நாளை மாலை விண்ணில் பாய்கிறது : திருப்பதி கோயிலில் இஸ்ரோ தலைவர் சாமி தரிசனம்

ஒவ்வொரு முறை செயற்கைக்கோள் ஏவப்படும்போதும் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் திருப்பதி கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

# ஏன்யா கஷ்டம், வெங்கிட்டு சக்கரத்த இரவல் வாங்கி, ராக்கெட்ட அதுல வச்சு சுத்தி உட்ரலாமே ?





ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி தொடர்பான விஷயம், நாட்டின் பொதுவான நடவடிக்கை. அதில் ஒரு விஞ்ஞானி இப்படி நடந்து கொள்வது சரியா

அடுத்தது இவரே யாராவது சொந்த விஷயங்களுக்கு நாள், நேரம் பார்த்தால் இந்த கேள்வி எழாது.


இது ஒரு மதச்சாற்பற்ற நாடு. ஒரு பொது விஷயத்தில் இப்படி நடப்பது சரியல்ல.
 

ஒரு விஞ்ஞானியே அஞ்ஞானமா நடந்தா ....

வாய்தா ராணிகளும், ஆஜர் ராசாவும்....




நீதிமன்றம் பக்கம் தலை வைக்கமாட்டேன் என வாய்தா வாங்குவோருக்கு மத்தியில், நீதிமன்றத்தில் தினம் ஆஜாராகி வழக்கை சந்திப்பதோடு மாத்திரமல்லாமல், நாடாளுமன்றக் கூட்டு குழுவில் ஆஜராக தயார் என தானாக முன்வரும் அண்ணன் ஆ.ராசாவை போன்றோரும் இருக்கிறார்கள்.

இவரை குத்திக் கிழிக்க தான் சத்தியவான்கள் துடிப்பார்கள், வாய்தா ராணியை தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள்.

அண்ணன் ஆ.ராசா அவர்களது கடிதம்.***********

மதிப்பிற்குரிய பாராளுமன்ற சபாநாயகர் அவர்களுக்கு!

1998 ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட 2 G அலைக்கற்றை கொள்கை, அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நான் ஆஜராக வேண்டும் என்று அதில் இடம் பெற்றுள்ள சில உறுப்பினர்கள் கோரி வருவதாக அறிகின்றேன்.

2007ம் ஆண்டு மே 17 முதல் 2010 ம் ஆண்டு நவம்பர் 14 வரை மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக நான் இருந்த போது 2008ம் ஆண்டில் 122 அலைக்கற்றை உரிமங்கள் ஒதுக்கப்பட்டன.

அலைக்கற்றை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எனது தரப்பு விளக்கத்தை அறிந்து கொள்ள வாய்ப்பளிக்காமல் 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி அந்த 122 அலைக்கற்றை உரிமங்களையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது. அதை மறு சீராய்வு செய்யக்கோரி நான் தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக மத்திய தொலை தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், அட்டர்னி ஜெனரல் போன்றோர் ஆஜராகி வருகின்றனர். ஆனால் துரதிஷ்ட வசமாக அவர்கள் குழுவிடம் அளிக்கும் விளக்கம் உண்மைக்கு புறம்பாகவும் குற்றத்தை வேறொறுவர் மீது சுமத்தும் வகையில் இருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகும் செய்தியின் மூலம் அறிகின்றேன்.

இந்த விவகாரத்தில் தவறாகவும், முழுமையான ஆதாரங்கள் இல்லாமலும் பாராளுமன்ற கூட்டுக்குழு வழிநடத்தக்கூடாது. அதனால் பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நானே நேரில் ஆஜராகி தொலைதொடர்பு கொள்கை, தொலைதொடர்பு உரிமங்கள் வழங்குவதில் அரசு கடைபிடித்த கோட்பாடு, இதில் யாருக்கெல்லாம் உரிமையும் பங்கும் உண்டு என்பதை விளக்குவதே சரியாக இருக்கும்.

அலைக்கற்றை தொடர்பான தீர்ப்பில் இந்திய ராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட அரிய இயற்கை வளமான அலைக்கற்றை பண பலம் கொண்ட சிலராலும் அரசு நடைமுறையை மாற்றும் சக்தி படைத்தவர்களாலும் அனுபவிக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் ஆலைக்கற்றை முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை சி.பி.ஐ நீதிமன்றத்தில் எனது பதவிக்காலத்தில் ராணுவம் பகிர்ந்து கொண்ட அல்லது அது பயன்படுத்தி வந்த அலைக்கற்றை வழங்கப்படவில்லை என சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

எனது பதவிக்காலத்தில் பயன் படுத்தாமல் இருந்த அலைக்கற்றையை கண்டறியவும் அவற்றை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதை ஒருக்கிணைக்கும் பணியையும் மத்திய தொலைத்தொடர்பு துறை மேற் கொண்டது.

ஆனால் எனக்கு முன்பு அமைச்சராக இருந்தவர்கள் அலைக்கற்றையை பயன்படுத்தாமல் இருந்ததால் தான் அரசுக்கு உண்மையான வருமான இழப்பு ஏற்ப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத்தலைவர் மூலம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அதில் ஏலம் நடத்தி அலைக்கற்றையை ஒதுக்குவது அரசின் நோக்கம் அல்ல , நாட்டின் தொலைத்தொடர்பு வளர்ச்சியை அதிகரிக்க நிறுவனங்களின் வருவாய் அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கலாம் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான அதிகாரிகள் விளக்கினர்.

மேற்க்கண்டவாறு 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நிலவும் பல முரண்பாடுகளை பாராளுமன்ற கூட்டுக்குழுவிடன் என்னால் விளக்க முடியும். இதன் மூலம் மறைக்கப்படும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். சி பி ஐ நீதிமன்றத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சட்ட விரோதமாக அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கு தான் விசாரிக்கப்படுகின்றது இப்போது.

அந்த விசாரணை பாதிக்காத வண்ணம் அலைக்கற்றை கொள்கை அதை அமல்படுத்திய நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதனால் என்னை விசாரனைக்கு அழைக்கும் படி பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு உத்தரவு இட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

ஆ. ராசா
( மொழி பெயர்ப்பு - அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்)

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பொதுவாழ்வு - ஒரு நாள் பணி


இது எல்லோருக்குமான தகவல் அல்ல...

இவர் எம்.எல்.ஏ வேலை பார்க்கிறாரா, இல்லையா என்று எண்ணும் தோழர்களுக்கானது...

எம்.எல்.ஏ பணியோடு சேர்த்து எனக்கு மாவட்ட செயலாளர் பணியும் இருக்கு.

களத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் பணியை தெரியப்படுத்துவதற்காக எனது ஒரு நாள் சுற்றுப்பயண விவரத்தை மட்டும் இணைத்துள்ளேன்.

சுய விளம்பரம் அல்ல. பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளின் பணி இப்படிதான் அமையும். 

16.02.2013
சனிக்கிழமை...
காலை 8.30 – இல்லத்தில் பார்வையாளர்கள் சந்திப்பு.

9.00
மணி அரியலூர் நகரம்
சபரி டிஜிட்டல் சபரிஸ்வரன் திருமணம் விசாரிப்பு
தொ.மு.ச தோழர் கருப்பையா புதுமனைப் புகுவிழா
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எழில்மாறன் திருமணம் விசாரிப்பு (காலை உணவு )


10.30
அரியலூர் ஒன்றியம், அய்க்கால் கிராமம்
*
கழகத் தோழர் அழகுதுரை இல்ல காதணி விழா விசாரிப்பு

11.30
செந்துறை ஒன்றியம்
*
தெற்கு பரணம் கிளை பிரதிநிதி விஸ்வநாதன் தந்தை மறைவு விசாரிப்பு
*
பரணம் ஆதிதிராவிடர்காலனி செயலாளர் கோவிந்தன் மறைவு விசாரிப்பு
*
வடக்கு பரணம் கழகத் தோழர் விஸ்வநாதன் தந்தை மறைவு விசாரிப்பு

பகல் 12.30 ஆண்டிமடம் ஒன்றியம், குவாகம் கிராமம்
*
குவாகம் கிளை பிரதிநிதி அன்பழகன் திருமணம் விசாரிப்பு
*
கீழகுவாகம் கழக முன்னோடி ரத்தினசாமி மறைவு விசாரிப்பு

1.15
கு.வல்லம் கிராமம்
*
வல்லம் கிளை கழக செயலாளர் முருகேசன் புதுமனைப் புகுவிழா விசாரிப்பு
*
வல்லம் கழகத் தோழர் கண்ணன் புதுமனைப் புகுவிழா ( மதிய உணவு )
*
வல்லம் கிளை பிரதிநிதி பொய்யாமொழி மகன் திருமணம் விசாரிப்பு

3.00
மணி இடையக்குறிச்சி கிராமம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ( அதிமுக ) அண்ணன் கிருஷ்ணமூர்த்தி மறைவு விசாரிப்பு
கழக தோழர் செல்வராசு தந்தை மறைவு விசாரிப்பு


மாலை 4.30 ஜெயங்கொண்டம் நகரம்
மறைந்த கொள்கை முரசு அலைகடல் வெற்றிகொண்டான் இல்லம்- இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

5.30
தா.பழூர் ஒன்றியம்
*
ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டம் ( 6.00- 8.00)

8.30
ஜெயங்கொண்டம் நகரம்
*
மறைந்த மருத்துவர் விஜயன் உடலுக்கு இறுதி அஞ்சலி

9.15
உடையார்பாளையம் பேரூர்
*
மறைந்த கழகப் பேச்சாளர் சி.ஆர்.மாரிமுத்து உடலுக்கு இறுதி அஞ்சலி

10.00
ஜெயங்கொண்டம் ஒன்றியம்
*
வளவெட்டி குப்பம் கழக முன்னோடி முருகேசன் மறைவு அஞ்சலி

இரவு 10.45 அரியலூர் வீடு இரவு உணவு.
(
கிட்டத்தட்ட 160 கி.மீ சுற்றுப்பயணம், 14,15,16,17 அனைத்து நாட்களுமே இப்படிதான் )

இது என்ன கல்யாணத்திற்கு, சாவிற்கு போனதெல்லாம் கணக்கான்னு ஆரம்பிச்சுடாதீங்க... எங்கு போனாலும் பொதுமக்கள் சந்திப்பு தான், பொதுப் பணியின் அங்கம் தான். நோக்கம் அதுதான்.

#
இயக்கப்பணியும், பொதுப்பணியும் முடித்துதான், இணையப்பணி. அதுவே அவர்களுக்கு பிடிக்கலைன்னா, நான் என்ன செய்ய ?

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

ஹைதராபாத்துக்கு இது பழகிவிட்டது போலும் ....


( ஹைதராபாத்திலிருந்து .... )



குண்டுவெடித்த இடத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இருந்தேன். நகரம் அமைதியாகவே இருந்தது, வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தது.

குண்டு வெடிப்புக்கு பல காரணங்கள் சொல்லப் பட்டன.

குரு அப்சல் தூக்குக்கு பதிலடி.....

மறுநாள் துவங்க இருந்த தெலுங்கானா போராட்டத்தை திசை திருப்ப...

வலுவிழந்திருக்கும் மாவோயிஸ்ட் இயக்கம் தன் இருப்பை உறுதி செய்ய...


# ஆனால் பாதிக்கப்பட்டது பொது மக்களே...



                           ***************************************************



" தயவுசெய்து மறுபடியும் இதை செய்யாதீர்கள் " - அப்துல் வாசி மாசே, ஹைதராபாத் குண்டு வெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர் விடுத்துள்ள வேண்டுகோள்.

கொடுமை, இவர் 2007 குண்டு வெடிப்பிலும் பாதிக்கப்பட்டவர். பாதுகாப்பான இடம் தேடி தில்சுக் நகரில் குடியேறிவரை தேடி வந்து தாக்கியிருக்கிறது தீவிரவாதம்.

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு புத்தகம் வாங்க வந்த 24 வயதான விஜயக்குமார், வெடித்த குண்டிலிருந்து பறந்து வந்த இரும்பு ஆணிகளுக்கு பலியானார்.

ஹஜ் போக திட்டமிட்டிருந்தார், போன மாதம் மகளுக்கு திருமணம் முடித்த முகமது அமானுல்லா கான். ஆனால் மார்கெட்டுக்கு போன இடத்தில் உயிர் போனது.

எம்.பி.ஏ படிக்கும் மாணவர் வாங்கிய புத்தகத்தோடு கருகிப் போனார்,

கர்நாடகா பிதார் மாவட்டத்திலிருந்து பிழைக்க வந்த இளைஞர் உணவுக்காக அங்கே போக பிணமானதே மிச்சம்.

அய்.ஏ.எஸ் படிக்கும் கனவிலிருந்த திருப்பதி, கனவுகளோடு எரிந்துப் போனார்.

இப்படி பலியானோர் எண்ணிக்கை 16. காயமுற்று மருத்துவமனையில் இருப்போர் 200-ஐநெருங்கும்.

குண்டு வெடிப்பில் பாதிக்கப் பட்டோரில் பாகுபாடே இல்லை. முஸ்லிம், இந்து, வயதானவர்கள், இளையோர், மாணவர்கள், பணிபுரிவோர், ஏழை, பணக்காரன் என எல்லோரையும் துளைத்திருக்கிறது குண்டு.

மொத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால் மனிதர்கள். பாதிப்படைய செய்தவன் மிருகம்.



                        **********************************************************


ஹைதராபாத்துக்கு இது பழகிவிட்டது போலும் ....

குண்டு வெடிப்பு துயரத்திலிருந்து ஒரே நாளில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

யாரும் யாரையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கவில்லை, பொதுமக்கள். அரசியல்வாதிகளை கணக்கில் கொள்ள வேண்டாம்.

பா.ஜ.க குண்டுவெடிப்புக்கு எதிராக விடுத்த பந்த் அழைப்பு பிசுபிசுத்தது.

மதக் கண்ணோட்டம் இல்லாமல் தீவிரவாதம் என்ற நோக்கிலேயே பார்க்கப்படுகிறது. இந்து-முஸ்லிம் இணைந்தே உதவி வருகின்றனர்.

# தீவிரவாதிகளே மதப் போர்வை போர்த்திக் கொள்கின்றனர். மக்கள் தயாராயில்லை....


திங்கள், 18 பிப்ரவரி, 2013

சர்நேம் ( surname ) ஏமி ?

ஹைதராபாத் Croma showroom சென்றேன், மடிக்கணினிக்கு இணைப்பு சரடு வாங்கினேன்.

பணம் செலுத்துமிடம் வந்தேன். காசாளர் தொகையை சொன்னார், கொடுத்தேன்.

கணினியை தட்டியபடியே கேட்டார், " பேரு செப்பண்டி ? "

" சிவசங்கர் " என்றேன்.

" சர்நேம் ( surname ) ஏமி ? " 

( சர்நேம் - சாதி பெயர், ஆந்திராவில் எல்லோருடைய பெயருக்கும் பின்னால் கண்டிப்பாக சாதி பெயர் இருக்கும் )

" சர்நேம் லேது "

" எந்த ஊர் ?"

" தமிழ்நாடு "

" அங்க யாருக்கும் சர்நேம் கிடையாதா ? " என்று கேட்டார்.

" மிகக் குறைந்த பேருக்கு உண்டு "

" அப்போ உங்களுக்கு கிடையாதா ? "

" உண்டு. பெரியார் "

புரியாமல் பார்த்தார்...


குமுதம் வரதராஜனுக்கு வள்ளுவர் அறிவுரை

தலைவர் கலைஞர் மீது, காழ்ப்புணர்ச்சியோடு தனிமனிதத் தாக்குதல் நடத்தியுள்ள குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் நச்சுத் தனத்தைக் கண்டித்து, 18.02.2013 காலை அரியலூர் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்... 



கழகத் தோழர்கள் தலைவர் மீது கொண்டிருக்கின்ற அன்பு, அந்தப் பத்திரிக்கைக்கு எதிர்ப்புக் குரலாக ஆவேசமாக வெளிப்பட்டது.


# குமு’தம்’ போகப் போவுது.....


குமுதம் வரதராஜா,
இந்தப் பிழைப்பிற்கு செத்து போகலாமென வள்ளுவரே சொல்கிறார்.

# உன் முடிவின் ஆரம்பம்.