பிரபலமான இடுகைகள்

கங்கைகொண்ட சோழபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கங்கைகொண்ட சோழபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

மக்கள் கூடி எடுத்த விழா - மாமன்னனுக்கு !


மக்கள் கூடி எடுத்த விழா, மாமன்னன் இராஜேந்திரன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா. கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள ஏழு கிராமத்து மக்கள் கூடி விழா எடுக்க முடிவு எடுத்தார்கள். அவர்களுக்கு தூண்டு கோலாக இருந்தவர் அண்ணன் கோமகன்.

சரியாக ஒரு மாதம் முன் தான் முடிவெடுத்திருப்பார்கள் என எண்ணுகிறேன். அதற்கு பிறகு ஊர் கூடி பேசி, கங்கை கொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுமம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். முகநூல் பதிவுகள் மூலம் பார்த்துக் கொண்டே வந்தேன்.

இதற்கிடையில் இராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடித் திருவாதிரையா, மார்கழி திருவாதிரையா என்ற சர்ச்சை வேறு. இதனை தீர்க்க கல்வெட்டு ஆய்வாளர் பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களோடு திருவாரூர் பயணம் செய்தார் அண்ணன் கோமகன்.

                 

அங்கு தியாகராஜர் கோவிலில் உள்ள கல்வெட்டில் ராஜேந்திர சோழனே செதுக்கி வைத்த கல்வெட்டை ஆதாரமாக உறுதிப் படுத்திக் கொண்டு விழா ஏற்பாடுகள் ஆரம்பமானது.

விழாவில் பங்கேற்ற அறிஞர்கள், சான்றோர்கள் தேதிகளை, நேரத்தை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சியை திட்டமிட்டு, அழைப்பிதழ் தயாரிப்பதற்குள் நாட்கள் வேகமாக ஓட ஆரம்பித்து விட்டன. அண்ணன் கோமகனும் குழுவினரும் பம்பர வேகத்தில் இயங்கினர்.

அரசு ஆதரவு இல்லாதது ஒரு புறம், நிதி நெருக்கடி ஒரு புறம், நேர நெருக்கடி இப்படி பல பிரச்சினைகளை சமாளித்து விழா மிக, மிக சிறப்பாக நடந்தேறியது. திட்டமிட்டப்படி துல்லியமாக நடைபெற்றது அடுத்து குறிப்பிடத் தக்கது.

உள்ளூர் ஊடகத்துறை மிகுந்த ஒத்துழைப்பு அளித்து நிகழ்ச்சியை வெகு மக்களிடம் கொண்டு சேர்த்தனர். கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை மிகப் பெரிய வெற்றியாக்கினர்.

உள்ளூர் இளைஞர்கள் பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியது. தஞ்சையிலிருந்து தீபச்சுடர் ஏந்தி பெரும் இளைஞர் கூட்டம் இருசக்கர வாகனங்களில். தவறாமல் கலந்து கொண்ட அறிஞர் பெருமக்களுக்கு இராஜேந்திர சோழ மண் சார்பாக நன்றி. நான் பார்வையாளனாக சென்று கலந்து கொண்டு மகிழ்ந்தேன்.


கருத்தரங்கில் பேசிய சான்றோர்கள் அனைவருமே அண்ணன் கோமகன் அவர்களுக்கு தங்கள் வாழ்த்தையும் நன்றியையும் சொன்னார்கள். இதற்கு எல்லாம் உச்சம் நிகழ்வுகளின் கடைசியாக நடைபெற்றது.

ஒரு பெரும் இளைஞர் கூட்டம் திடுமென மேடையில் ஏறினார்கள். கையில் ஆளுயர ரோஜா மாலை. மேடைக்கு பின்புறமிருந்து அண்ணன் கோமகனை அழைத்து வந்தார்கள். அதற்கு முன் மேடையில் அதிகம் தலைகாட்டாமல் சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்த அண்ணனுக்கு ரோஜா மாலையை சூட்டி கையில் ஒரு வாளை வழங்கினார்கள்.

              Photo: மக்கள் கூடி எடுத்த விழா, மாமன்னன் இராஜேந்திரன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா. கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள ஏழு கிராமத்து மக்கள் கூடி விழா எடுக்க முடிவு எடுத்தார்கள். அவர்களுக்கு தூண்டு கோலாக இருந்தவர் அண்ணன் கோமகன்.

சரியாக ஒரு மாதம் முன் தான் முடிவெடுத்திருப்பார்கள் என எண்ணுகிறேன். அதற்கு பிறகு ஊர் கூடி பேசி, கங்கை கொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுமம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். முகநூல் பதிவுகள் மூலம் பார்த்துக் கொண்டே வந்தேன்.

இதற்கிடையில் இராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடித் திருவாதிரையா, மார்கழி திருவாதிரையா என்ற சர்ச்சை வேறு. இதனை தீர்க்க கல்வெட்டு ஆய்வாளர் பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களோடு திருவாரூர் பயணம் செய்தார் அண்ணன் கோமகன்.

அங்கு தியாகராஜர் கோவிலில் உள்ள கல்வெட்டில் ராஜேந்திர சோழனே செதுக்கி வைத்த கல்வெட்டை ஆதாரமாக உறுதிப் படுத்திக் கொண்டு விழா ஏற்பாடுகள் ஆரம்பமானது.

விழாவில் பங்கேற்ற அறிஞர்கள், சான்றோர்கள் தேதிகளை, நேரத்தை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சியை திட்டமிட்டு, அழைப்பிதழ் தயாரிப்பதற்குள் நாட்கள் வேகமாக ஓட ஆரம்பித்து விட்டன. அண்ணன் கோமகனும் குழுவினரும் பம்பர வேகத்தில் இயங்கினர்.

அரசு ஆதரவு இல்லாதது ஒரு புறம், நிதி நெருக்கடி ஒரு புறம், நேர நெருக்கடி இப்படி பல பிரச்சினைகளை சமாளித்து விழா மிக, மிக சிறப்பாக நடந்தேறியது. திட்டமிட்டப்படி துல்லியமாக நடைபெற்றது அடுத்து குறிப்பிடத் தக்கது.

உள்ளூர் ஊடகத்துறை மிகுந்த ஒத்துழைப்பு அளித்து நிகழ்ச்சியை வெகு மக்களிடம் கொண்டு சேர்த்தனர். கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை மிகப் பெரிய வெற்றியாக்கினர். 

உள்ளூர் இளைஞர்கள் பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியது. தஞ்சையிலிருந்து தீபச்சுடர் ஏந்தி பெரும் இளைஞர் கூட்டம் இருசக்கர வாகனங்களில். தவறாமல் கலந்து கொண்ட அறிஞர் பெருமக்களுக்கு இராஜேந்திர சோழ மண் சார்பாக நன்றி. நான் பார்வையாளனாக சென்று கலந்து கொண்டு மகிழ்ந்தேன்.

கருத்தரங்கில் பேசிய சான்றோர்கள் அனைவருமே அண்ணன் கோமகன் அவர்களுக்கு தங்கள் வாழ்த்தையும் நன்றியையும் சொன்னார்கள். இதற்கு எல்லாம் உச்சம் நிகழ்வுகளின் கடைசியாக நடைபெற்றது.

ஒரு பெரும் இளைஞர் கூட்டம் திடுமென மேடையில் ஏறினார்கள். கையில் ஆளுயர ரோஜா மாலை. மேடைக்கு பின்புறமிருந்து அண்ணன் கோமகனை அழைத்து வந்தார்கள். அதற்கு முன் மேடையில் அதிகம் தலைகாட்டாமல் சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்த அண்ணனுக்கு ரோஜா மாலையை சூட்டி கையில் ஒரு வாளை வழங்கினார்கள்.

அவர் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிக்க பட்டபாடு அத்தனைக்கும் சிறந்த மரியாதையாக அமைந்தது.

# பாராட்டுகள், வாழ்த்துக்கள், நன்றிகள் !

அவர் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிக்க பட்டபாடு அத்தனைக்கும் சிறந்த மரியாதையாக அமைந்தது.

# பாராட்டுகள், வாழ்த்துக்கள், நன்றிகள் !

வியாழன், 31 ஜூலை, 2014

மாமன்னன் இராஜேந்திர சோழன் - மேலாண்மை தலைவன் !

                   Rajendra Chola I

மாமன்னன் இராசேந்திரனின் எழுச்சிமிகு வரலாறு குறித்த கருத்தரங்கில் இல.தியாகராசன் அவர்களை கடைசியாக பேச அழைத்தார்கள். எழுத்தாளர் பாலகுமாரன், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோர் பேசிய பிறகு இவரை பேச விடுகிறார்களே என இவரை அறியாதவர்கள் பார்த்தனர்.

பேச ஆரம்பித்தார். முழுதும் நிரம்பிய மேட்டூர் அணையை திடீரென திறந்து விட்டால் எப்படி நீர் பீரிட்டு வெளியேறுமோ, அப்படி கருத்துகள் வந்து விழுந்தன. ஒரு செகண்ட் தவறினாலும் முக்கிய செய்தியை தவற விட்டுவிடுவோமோ என கூர்ந்து கவனிக்க வேண்டியதாயிற்று.

“’மண்ணின் மேல் வான் புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும், உண்ணு நீர்க்
கூவல் குறை இன்றித் தொட்டானும், இம் மூவர்
சாவா உடம்பு எய்தினார்’ என்று திருகடிகம் கூறியது. இதில் மூவர் என்று கூறப்பட்டது”

“ஆனால் இந்த மூன்று வாய்ப்புகளை பெற்ற ஒருவன் யாரென்றால் அது இராஜேந்திரன் தான். தன் தந்தை பெற முடியாத வெற்றிகளை பெற்று மண்ணில் வான் புகழ் நட்டான். தான் இறந்த போது உடன்கட்டை ஏறிய வீரமாதேவியை பெற்றான். நீர்வளத்தை சோழகங்கம் மூலம் பெருக்கி குறை இன்றி தொட்டான்”

“அப்போதே முதன்முதலாக, Transfer of Capital என்ற முறையை கையிலெடுத்து வறண்ட பகுதிக்கு தலைநகரை மாற்றி 86 ஊர்களை தோற்றுவித்து, இந்தப் பகுதி வளர்ச்சிக்கு வித்திட்டவன்”

“240 ஆண்டுகளுக்கு இராஜேந்திரன் உருவாக்கிய கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்நாட்டிற்கு தலைநகராக இருந்தது. அதைத் தாண்டி தென்னிந்தியாவிற்கு தலைநகராக இருந்தது. அதையும் தாண்டி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தலைநகராக விளங்கியது”

“அரியலூர் பகுதியில் ஓடும் மருதையாற்றில் வாய்கால்களை வெட்டி பாசன வசதியை பெருக்கினான். மருதையாற்றில் சிறப்பாக கலுங்கு, மதகுகளை கட்டி பெருமை பெற்றான்.”

“கடலூர் மாவட்டத்தில், திட்டக்குடி அருகே பாசன வசதிகளை பெரிய அளவில் தருகிற ‘வெலிங்டன் ஏரி’ இராஜேந்திரன் வெட்டிய ‘உத்தம சோழ பேரேரி’ ஆகும்”

( நான் ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊர் பெயர்கள் குறித்து பதிவிட்ட தகவலில் இல்லாத இன்னும் பல ஊர் பெயர்களுக்கு விளக்கம் சொன்னார். அப்போது கூடியிருந்தோர் அனைவரும் வியந்து போயினர்)

“இன்று இருக்கும் ‘செட்டித் திருகோணம்’ கிராமம் இராஜேந்திரன் உருவாக்கிய ‘மதுராந்தக சோழபுரம்’. விக்கிரம சோழபுரம் இன்று ‘விக்கிரமங்கலம்’. ‘வஞ்சினபுரம்’ இவை எல்லாம் வியாபார நகரங்களாக விளங்கின”

“வானவன் மாதேவி சதுர்மங்கலம் என்று உருவாக்கப்பட்ட நகர் இன்று ‘நாகமங்கலம்’ ஆகிவிட்டது. சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சோழதரம் ஏற்கனவே ‘சோழ உத்தமபுரம்’ என்பதாகும்”

“இலங்கை வரை படையெடுத்து பெற்ற வெற்றியையும், பாண்டியன் மணிமுடியை கைப்பற்றியதையும் இராஜேந்திரன் மிக முக்கியமானதாகக் கருதினான். அதைக் கொண்டாட 86 இடங்களுக்கு ‘முடிகொண்ட’ என துவங்குகிற பெயர்களை சூட்டினான். அவனும் ‘முடிகொண்ட சோழன்’ என புகழப்பட்டான்”

“ராஜேந்திரன் மனைவி லட்சுமிக்கு ‘சுத்தமல்லி’ என்ற பெயரும் உண்டு. அவள் பெயரால் அயன்சுத்தமல்லி, ஜெமீன்சுத்தமல்லி என ஊர்கள் உருவாக்கப்பட்டன.”

“சோழர்களின் சம்பந்திகள் பழவேட்டரையர்கள். இவர்கள் தலை நகர் ‘மேலப்பழவூர்’ ஆகும். இதற்கு அருகில் பவித்திரமாணிக்க பேரேரி என்று வெட்டப்பட்டது இப்போது ‘மலத்தான் குளம்’ ஆகும்”

“கங்கை வரை சென்று கங்கை நீரை கொண்டு வந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இரண்டு ஊர்களை அமைத்தான். அவை விழுப்புரம் அருகிலுள்ள ‘எண்ணாயிரம் கோவில்’, இன்னொன்று குத்தாலம் அருகேயுள்ள 'திரைலோக்கி”

“திருவாரூர் கோவிலை கற்றளியாக்க வேண்டிய ராஜேந்திரனின் ‘அணுக்கி’ பரவை நினைவாக அமைந்த ஊர் குன்னம் அருகேயுள்ள பரவாய். இதே போல பரவைபுரம் என்ற ஊரும் உருவாக்கப்பட்டது”

“படைவீரர்களுக்கு நிலங்களை தானமாக அளித்தான் ராஜேந்திரன். ‘குலோத்துங்க நல்லூர்’ உள்ளிட்ட ஊர்கள், வீரர்கள் அனுபவிக்க ‘வீரபோகமாக’ அளிக்கப்பட்டது”

“ராஜேந்திரனின் மகன் ராஜாதிராஜன் பெயரில் ஜெயங்கொண்ட சோழபுரம் என்ற நகரம் அமைக்கப்பட்டது. ஜெயங்கொண்ட சோழபுரம் முன்னர் நெம்மேலி என்ற கிராமம். இது அதிகம் நெல் விளையும் ஊர் என்பதால் ஏற்பட்ட பெயர்.”

“வாரியங்காவல் கேரளாவில் உள்ள ஆரியங்காவு பெயரில் ஏற்படுத்தப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்கள் கேரளா துறைமுகங்களில் இறங்கி கங்கைகொண்ட சோழபுரம் வரும் வணிகப்பாதையில் (trade route) இந்த ஊர்கள் அமைந்தன“

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து ஜெயங்கொண்டம், வாரியங்காவல், செந்துறை, ராயம்புரம், அரியலூர், பழவூர், திருமழப்பாடி வரையிலான பாதை பெருவழிப் பாதை என அழைக்கப்பட்டது. அந்த நினைவாக அமைக்கப்பட்ட கோவில் ‘பெருவழியப்பா கோவில்’ உஞ்சினி கிராமத்தில் தற்போது உள்ளது”

“மாமன்னன் இராஜேந்திர சோழன், வணிக மேலாண்மை, நீர் மேலாண்மை, உள்ளாட்சி மேலாண்மை, நுண்கலை மேலாண்மை என ஆட்சியை சிறப்பாக நடத்தியதால் தான் மிகுந்த புகழ் பெற்று விளங்குகிறான்”

இப்படி இன்னும் பல அரிய, அறியாதத் தகவல்களை அள்ளிக் கொட்டினார். சுருக்கெழுத்து தெரியாததால் இவ்வளவு தான் குறிப்பெடுத்ததைக் கொண்டும், நினைவில் இருத்தியவையைக் கொண்டும் பதிவிட்டுள்ளேன்.

இந்த உரையை வழங்கிய பேராசிரியர் இல.தியாகராஜன், தொல்பொருள் ஆய்வாளர். அரியலூர் அரசுக் கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் கொடுத்த தகவல்களை பார்த்தால் மாமன்னன் இராஜேந்திரனோடே, கங்கைகொண்ட சோழபுரத்தில் வாழ்ந்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

# அவன் அந்த சிறப்புப் பெயருக்கு முழுக்கத் தகுதியானவன் – அதிசய சோழன் !

புதன், 30 ஜூலை, 2014

தாங்கள் ராஜேந்திரனின் போர்படை என்ற உணர்வோடு ...

அரசு நடத்தியிருக்க வேண்டிய விழா. ஊர் மக்கள், ஆர்வலர்கள் கூடி நடத்தினார்கள். ஆனாலும் அரசு நடத்தியிருந்தாலும், இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது என்பதே உண்மை.

தஞ்சையிலிருந்து தீபச்சுடர் ஏந்திய ஓட்டம், மாளிகை மேட்டிலிருந்து தமிழறிஞர்கள் ஊர்வலம், வரலாற்று ஆய்வாளர்கள் கருத்தரங்கம், ஆயிரம் தீபமேற்றும் நிகழ்ச்சி, நாட்டியாஞ்சலி என இரண்டு நாட்கள் களைகட்டிய விழாவிற்கு "மாமன்னன் இராஜேந்திரனின் எழுச்சிமிகு வரலாற்றை" குறித்து அறிஞர்கள் ஆற்றிய உரை மணிமகுடம்.

           

சென்னை பல்கலைகழகத்தின் முன்னை துணைவேந்தர் பொற்கோ மண்ணின் மைந்தராக இராஜேந்திரனின் பெருமைகளை விவரிக்கையில் உணர்ச்சி வசப்பட்டார். 


             

அடுத்து பேசிய எழுத்தாளர் பாலகுமாரன், “ பரவை என்கிற தாசிக்குல பெண்ணின் வேண்டுகோளை ஏற்று செங்கல்லால் கட்டப்பட்ட திருவாரூர் கோவிலை கற்றளியாக்கினான் இராஜேந்திரன்” என்று துவங்கி

“கம்மாளர்கள் பிராமணர்கள் போல் பூணூல் அணிந்து கொள்ள அனுமதி கேட்டப் போது, 'நீங்கள் வடித்துக் கொடுக்கும் வாளால் தான் நான் வெற்றி பெறுகிறேன். நீங்கள் காலில் செருப்பு அணியவும், திருநீர் அணியவும், சிவிகையில் செல்லவும், பூணூல் அணியவும் அனுமதி கொடுக்கிறேன்' என கொடுத்தான்.”எனற வரலாற்றை சொல்லி


           

“தேன்நிலவுக்கு ஊட்டிக்கு போகாதீங்கைய்யா. கங்கை கொண்ட சோழபுரம் வாங்க! என்ன அற்புதமான நகரமையா, வாங்கய்யா இங்க, வரலாறு தெரிஞ்சுக்கங்க, ஓவியங்கள் இருக்கு பார்த்து தெரிஞ்சுக்கங்க. தமிழ் படிக்கச்சொல்லி கொடுத்தால் மட்டும் போதாது, தமிழ் எழுத்ச்சொல்லி கொடுத்தால் மட்டும் போதாது, தமிழரின் சரித்திரம் தெரியாது நீங்கள் குழ்ந்தைகளை வள்ர்த்தீர்கள் என்றால் நீங்க்ள் தமிழர் அல்ல! நீங்கள் ராஜராஜன், ராஜேந்திரனின் வரலாற்றையும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டுமென்ற விண்ணப்பத்தையும் இந்த மகாசபை முன் வைக்கின்றேன்” என்று வேண்டுகோள் வைத்து முடித்தார்.

          

அடுத்து தமிழக அரசின் வேளாண்துறை செயலர் இராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் பேசினார். “இங்கு கூடியிருக்கிற மக்கள் தாங்கள் ராஜேந்திரனின் போர்படை என்ற உணர்வோடு தாங்களாகவே கூடியிருக்கிறார்கள்” என்று செண்டிமென்ட் டச் கொடுத்தார்.

“தஞ்சை 150 ஆண்டுகள் தான் தலைநகராக இருந்தது. ஆனால் கங்கைகொண்ட சோழபுரம் 240 ஆண்டுகள் தலைநகராக இருந்தது. ஏரி, கோவில்கள் அமைத்தல், மதங்களை சமமாக பேணியமை, நில அளவி, பஞ்சாயத்து ஆட்சி, நுண்கலை வளர்ப்பு என பணியாற்றியதால் தான் சோழர்கள் புகழோடு திகழ்ந்தார்கள்”

“ராஜேந்திரனின் இயற்பெயர் மதுராந்தகன். அதன் அர்த்தம், மதுரைக்கு ஆந்தகன் அதாவது எமன். பாண்டியர்களை வீழ்த்தியவன். ஆனால் அதே மதுரையிலிருந்து ராஜேந்திரன் என்ற பெயரோடே வந்து அவனை பாராட்டுகிறேன் என்றால் அது தான் ராஜேந்திரன்.” என்று புகழ்ந்தார்.

அடுத்து பேசிய அரசு செயலர் தனவேல் ஐ.ஏ.எஸ் “அரசர்களின் தலைநகர்கள் நகரங்களாகி விட்டன. கங்கைகொண்ட சோழபுரம் மட்டும் தான் கிராமமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டேன். ஆனால் கிராமமாக இருப்பதால் தான் மக்கள் பண்பாட்டோடு, உணர்வோடு இருக்கிறீர்கள். அதனால் தான் இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்” என்று பெருமிதப்பட்டார்.

“ஐரோப்பாவில் மாவட்ட தலைநகரங்களில் ஒரு மியூசியம் இருக்கும். இங்கு ஒவ்வொரு கோவிலுமே ஒரு மியூசியம் தான். பிரிட்டானிக்காவில் ‘தமிழர்கள் கோவில் கட்டுவதில் வல்லவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.”

“பெருவுடையார் கோவிலின் மூலஸ்தானத்திற்குள் நுழையுமுன் இடது பக்கமிருக்கும் துவாரபாலகரை கவனியுங்கள். அவன் ஒரு காலை கதாயுதம் மீது வைத்திருப்பான். கதை மீது ஒரு மலைப்பாம்பு படர்ந்திருக்கும். மலைப்பாம்பு வாயில் பாதி யானை சிக்கியிருக்கும். யானையை விட மலைப்பாம்பு பெரிது, அதை விட கதை பெரிது, அதை கையில் பிடித்திருக்கும் துவாரபாலகன் எத்தகையவனாக இருப்பான். ஆனால் அவன் ஒரு கையால் உள்ளே காட்டுவான்,”என்னை விடப் பெரியவர் உள்ளே இருக்கிறார்” என பெருவுடையாரை நோக்கி. இதன் அர்த்தத்தை பார்க்க வேண்டாம். சிற்பி எவ்வளவு எளிதாக் ஒரு சிற்பத்தில் இவ்வளவு செய்திகளை நுணுக்கமாக கொடுக்கிறார் என கவனியுங்கள். இது தான் சர்ரியலிஸம். இது சோழற்கால சிற்ப சிறப்பு” என்று விளக்கமளித்தார்.

கவிஞர் அறிவுமதி “வேட்டிக் கட்டியவர்களை வெளியேற்றுகிற இந்த நாட்டிலிருந்து தான் வேட்டிக் கட்டி போய் உலக நாடுகளை வென்று உலகப் பெருமை பெற்றான்.” என்று துவங்கியவர் “ஆனால் ராஜராஜனும், ராஜேந்திரனும் என்னைப் பொறுத்தவரை குற்றவாளிகள்” என்று நிறுத்தினார்.

“பூணூல் போட அனுமதி கொடுத்த ராஜேந்திரனுக்கு என்ன தைரியம் என்று கேட்டீர்களே பாலகுமாரன், நீங்கள் செருப்பையே அரியணையில் ஏற்றி ஆளவைத்தவர்கள். நாங்கள் செருப்பு போடவே 2000 ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று கர்ஜித்தார்.

“இன்று இந்தி,சமஸ்கிருதம் உள்ளே வர வேலை நடக்கிறது. நீங்களும் பிள்ளைகளுக்கு அப்படி தான் பெயர் வைக்கிறீர்கள். சமீபத்தில் நோயுற்ற தன் பிள்ளையை கருணை கொலை செய்ய கோரிக்கை வைத்தாளே ஒரு தாய், அவளைப் போல என் தாய் தமிழை கருணை கொலை செய்து விடுங்கள்” என்று சபையை அதிரடித்தார்.

அடுத்து கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் “ஆடித் திருவாதிரை தான் மாமன்னன் இராஜேந்திரனின் உண்மையானப் பிறந்தநாள். இதை திருவாருர் கோவில் கல்வெட்டிலே ராஜேந்திரனே பொறித்து வைத்திருக்கிறான்” என சர்ச்சைக்கு பதிலளித்து, “இந்த மன்னனுக்கு விழா எடுத்தீர்களே உங்கள் திருவடியை வரலாற்று ஆய்வாளர் என்ற முறையில் வணங்குகிறேன்” என்று உருகினார்.


             

அடுத்து பேசிய அரியலூர் இல.தியாகராசன் உரை அனைவரையும் கட்டிப் போட்டது. அது தனிப் பதிவாகப் போட வேண்டிய அளவு பெரிது.

செவ்வாய், 29 ஜூலை, 2014

இராஜேந்திர சோழன் பராக், பராக் !

இரவு இரண்டாம் ஜாமம் துவங்கியிருந்தது. ஒளிவெள்ளத்தில் நனைந்து கொண்டிருந்தது பெருவுடையார் ஆலயம். ஆடித் திருவாதிரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆலயத்தினுள் மக்கள் வெள்ளம். ஆலயத்திற்கு வெளியில் மக்கள் கடல்.

                             

ஆலயத்தின் வெளிப்புறத்தில் வரிசையாக விளக்குகள். எண்ணெய் ஊற்றி, திரி போட்டு மக்கள் விளக்கை ஏற்றி வழிபட்டுக் கொண்டிருந்தனர். பின்னால் வரிசையில் நின்று தங்கள் பங்கிற்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தனர் சோழவள நாட்டு மக்கள்.

மெய்காவலர்கள் விழிப்பாக மக்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இங்கும் அங்கும் உலவி கூட்டத்தை நகர்த்தி, புதிதாக வருகிறவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். தளபதிகள் அவர்கள் பணியை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

திருமதிலுக்குள் தரையில் பாவியிருந்த புல்வெளியில் நடந்து, கிழக்கு கோபுர வாயிலைக் கடந்து வெளிப்புறமிருந்த ஆலமரத்தை அடைந்தால், வடக்கு மூலையில் எழில் கொஞ்சும் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் முன்பும் ஜனத்திரள்.

மேடையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி. ஆடல் பெண்டிர் முத்திரைப் பிடித்து நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தனர். மெய்மறந்த மக்கள் இசையில் லயித்து தொடையில் தட்டி, தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தனர். இது இரண்டாம் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

மூன்றாம் ஜாமம் தாண்டும் போலத் தோன்றியது. மெல்ல நழுவி வாயிலுக்கு வந்தேன். வெண்புரவி நெருங்கி வந்தது. தாவி ஏறினேன். மீண்டும் ஒரு முறை ஆலயத்தின் கோபுரத்தைப் பார்த்தேன். கலசம் மின்னிக் கொண்டிருந்தது. மனமின்றி நகர்ந்தது புரவி.

பெருவழியை அடைந்து இடப்புறம் திருப்பினேன். அங்கும் சோழகங்கம் தளும்புவது போல் ஜனக் கடல் தளும்பியது. கூட்டத்தை ஊடுருவி கடந்து, வேகம் பிடித்தேன். இப்போதும் பெருவழியின் இருபுறமும் மக்கள் நடந்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருபுறம் கோவிலை நோக்கி, இன்னொருபுறம் தரிசனம் கண்டு முடித்தவர்கள் கிராமம் நோக்கியும் நடைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு கல் தொலைவு கடந்தவுடன் குருவாலப்பர் கோவில் கண்ணில் பட்டது. விளக்கொளியில் அமைதியாகக் காட்சியளித்தது.

அடுத்த ஒரு கல் தொலைவு கடந்ததும் பெருவழி மேடேறியது. மேட்டில் ஏறும் போது திரும்பிப் பார்த்தேன். ஆலயத்தின் இடது மூலையில் இருந்து வானவேடிக்கை. வண்ண வண்ண ஒளியில் ஜொலித்தது உயர்ந்து நின்ற ஆலயம். மேடேறி இறங்கியது புரவி.

சோழகங்கம். சாலையை தொடும் தண்ணீர். நீரின் சலசலப்பு காதை வருடியது. நீரைத் தட்டி வந்த ஆடிக் காற்று அங்கேயே படுக்கத் தூண்டியது. புரவியும் சாரல் இதத்தில் வேகத்தைக் குறைத்தது. இருட்டிலும் மீன்கள் துள்ளுவது தெரிந்தது.

எதிரில் வந்த லாரியின் உச்ச ஹாரன் சத்தத்தில் சுய நினைவுக்கு வந்தேன். புரவியை பார்த்தேன், டாடா சபாரி கார். ஆம், நேற்றைய மாமன்னன் இராசேந்திரனின் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவிற்கு வந்தவர்கள், நிகழ்வு முடிந்து செல்லும் போது தங்களை இராஜேந்திரனாகவே உணரும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள், அவன் தம் பெருமைகள் கேட்டு. அந்த கால நினைவுகளுக்கே போயாயிற்று.

# இராஜேந்திரனாய் உணர்வோம், மண்ணின் பெருமை காத்திடுவோம் !

திங்கள், 28 ஜூலை, 2014

மாமன்னன் இராசேந்திரனின் திட்டமிடலும், உருவாக்கமும்

ராசேந்திர சோழன் பெருவுடையார் கோவிலையையும், சோழகங்கம் ஏரியையும் மாத்திரம் திட்டமிட்டு அமைக்கவில்லை. தஞ்சையில் இருந்து தலைநகரை மாற்றுவது என்று முடிவெடுத்த பிறகு, திட்டமிட்டு அமைத்த நகரம் தான் கங்கை கொண்ட சோழபுரமும் அதனை சுற்றியுள்ள கிராமங்களும். 

              

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள், கிட்டத்தட்ட மாமன்னன் இராசேந்திரனின் காலத்தில் உருவாகியவை என்பதே வரலாற்று ஆய்வுகளை கொண்டு இறுதி செய்ய முடியும்.

தனது கோட்டையை அமைத்த பகுதி “உட்கோட்டை”. இன்றும் அதே பெயரோடு இருக்கிறது கிராமம். இதன் அருகில் தான் அரண்மனை அமைந்த மாளிகைமேடு. பிறகு படையெடுத்த பாண்டிய மன்னர்களால் அரண்மனை இடிக்கப்பட்டு விட்ட்து. இது இப்போது தொல்லியல் ஆராய்ச்சி பகுதி.

ராசேந்திரன் வருவதற்கு முன் இது காட்டுப் பகுதி. காட்டை திருத்த ஆரம்பித்த இடம் தான் “காடுவெட்டி”. இதற்கு அருகில் தான் படை நிலை கொண்ட இடம், “படைநிலை”. அருகில் "பாப்பாக்குடி" உள்ளது. இது பார்ப்பனர்குடியாக இருந்திருக்க வேண்டும்.

கோவிலை கட்டுவதற்கு சுண்ணாம்பு அரைத்த இடம் தான் “சுண்ணாம்புக்குழி”. மன்னனின் அரண்மனை, கோட்டை கட்டுவதற்கு செங்கல் தயாரித்த இடம் தான் “கீழ செங்கல்மேடு”, “மேல செங்கல்மேடு”. அடுத்த ஊர் ‘தழுதாழைமேடு”..

இதற்கு அருகில் உள்ள கிராமம் “ஆயுதகளம்”. ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட பகுதி. அடுத்து “மெய்காவல் புத்தூர்”. மன்னனின் மெய்காவலர்கள் மற்றும் தலைநகரை காவல்புரிந்த வீரர்கள் தங்கியிருந்த பகுதி. கோவிலுக்கு வருவோர் தங்குவதற்கு “சத்திரம்” கிராமம்.

வீரசோழன் பெயரில் “வீரசோழபுரம்’. அரசி பெயரில் “சோழமாதேவி”. இவைகள் இன்றும் இருக்கிற ஊர்கள். “நாயகனைப்பிரியாள்” இதுவும் ஒரு அரசி பெயரால் இருக்க வேண்டும். கடாரம் வென்ற நினைவாக “கடாரம் கொண்டான்”.

ராஜராஜ சோழன் பெயரில் “அருள்மொழி”, “தேவமங்கலம்”. ராசேந்திரனின் அரசி கட்டிய கோவில் “குருவாலப்பர்கோவில்”. தளபதிகள் பெயரால் “வானதிரையன் குப்பம்”, “வானதிரையன் பட்டிணம்”.

சோழ வீரர்கள் குடிகொண்ட “சோழன்குடிகாடு”, “நந்தியன்குடிகாடு”, “உகந்தநாயங்குடிகாடு”, “படைவெட்டிக் குடிகாடு”. இவை எல்லாம் செந்துறை ஒன்றியத்தில் வருபவை.

இதல்லாமல் பரவலாக பல இடங்களில் “செயங்கொண்ட சோழபுரம்”, “சோழங்குறிச்சி”, “சோழன்பட்டி”, “வால சௌந்திர சோழபுரம்”, "ராஜேந்திரபட்டிணம்" என்று சோழன் பெயர் தாங்கிய ஊர்கள் மாவட்டம் முழுதும் விரவிக் கிடக்கின்றன. எங்கும் சோழமயம்.
# சோழன் சோர்விலன், இன்றும் வாழ்கிறான் மக்கள் மனம் நிறைந்து !

ஞாயிறு, 27 ஜூலை, 2014

சோழகங்கம் - சலமயமான சயத்தம்பம்

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவிலை கட்டியதும், கடாரம், ஈழம் என வென்றதும் மாத்திரம் மாமன்னன் ராஜேந்திரனின் சாதனையாகக் கருதக் கூடாது. அவனால் வெட்டப்பட்ட "சோழகங்கம்" ஏரியானது அவனது முத்திரை அடையாளமாகும்.

            

கங்கை வரை படையெடுத்து வெற்றிக் கொண்டதை கொண்டாட, தான் வெட்டிய ஏரிக்கு "சோழகங்கம்" என்று பெயரிட்டான்.

கடந்தப் பதிவில் பார்த்தது போல், எப்படி கங்கை கொண்ட சோழபுரம் ஆலயம் இரு பயன்பாட்டுக்கு உபயோகமோ, அப்படியே சோழகங்கம் வெட்டப்பட்டதும். ஒரு செயலில் இரு பயன்பாடு.

அவ்வளவு உயரமான கோவிலை கட்ட சாரம் அமைப்பது என்பது ஆகாதக் கதை. கீழேயிருந்து சுவர்களை கட்ட கட்ட சுற்றி மண்ணை நிரப்பி, அதன் வழியாக கற்களைக் கொண்டு சென்று, மறுபடியும் சுவர் எழுப்பி, மீண்டும் மண்ணை நிரப்பி என்று தான் கோவில் கட்டப்பட்டிருக்கும் என்பது ஆய்வாளர்கள் பார்வை.

இதற்கு தேவையான மண்ணை எடுப்பதற்கு வெறுமனே நிலத்தை வெட்டாமல், அதனை ஏரியாக அமைக்கத் திட்டமிட்டு, எங்கு மண் வெட்டுவதற்கு ஏதுவாக இருக்கிறது என்று ஆய்ந்து அமைத்ததே சோழகங்கம்.

அதுவும் எங்கோ அமைத்து விட்டால் அதற்கான நீர் ஆதாரம் என்ன செய்வது என யோசித்து, தெற்கே கொள்ளிடத்தில் இருந்து நீர் கொண்டு வந்தால் எங்கு ஏரி அமைய வேண்டும் என திட்டமிட்டு, இன்னொரு புறம் வடக்கே வெள்ளாற்றில் இருந்தும் நீர் வர திட்டமிட்டு, மலைக்க வைக்கும் திட்டம்.

வழக்கமாக அணை கட்டுவதானால், இரண்டு மலைகளுக்கு இடையே கட்டுவது தான் இன்றைய காலம் வரை கடைபிடிக்கப்படும் தொழில் நுட்பம். ஆனால் கரிகால் சோழன் அமைத்த கல்லணை அப்படி இல்லாமல் சமதளத்தில், மணற்பரப்பில் கட்டினான். சிந்தித்து பார்க்க முடியாத தொழில் நுட்பம்.

அது போல் ஏரி வெட்டுவது ஆற்றை ஒட்டியோ, வாய்கால்களை ஒட்டியோ வெட்டப்படும். இங்கே ஏரி அமைப்பதற்காக வாய்கால்கள் வெட்டப்பட்டன. தமிழகத்தில் பெரும்பாலும் ஆறுகளும், அதிலிருந்து வெட்டப்படும் வாய்கால்களும் கிழக்கு, மேற்காகத் தான் இருக்கும். இங்கு வடக்கு, தெற்கு.

இப்படி எல்லாமே பிரத்தியேகமாக, வித்தியாசமாக சிந்தித்து அமைக்கப்பட்டதே சோழகங்கம். ராஜேந்திரனால் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த ஏரி காலப் போக்கில் ஆக்கிரமிப்புகளால் குறுகிவிட்டது. இப்போது பல மாதங்களுக்கு நீரின்றி வறண்டும் காணப்படுகிறது.


           

இப்போதும் ஏரி, ஒரு கி.மீ அகலத்திற்கு, நான்கைந்து கி.மீ நீளத்திற்கு இருக்கிறது, அப்போதைய தோற்றத்தை நினைத்தால் சிலிர்க்கிறது. இந்த ஏரி பாசனத்தால் சுற்றி இருந்த வயல்கள் பொன் விளையும் பூமியாக மாறியதால் தான் இந்த ஏரி "பொன்னேரி" என்றழைப்படுகிறது.

எங்கள் பகுதியில் சிமெண்ட் ஆலைகளுக்காக, சுண்ணாம்பு கல் சுரங்கங்கள் உண்டு. பெரிய இயந்திரங்களையும், டிப்பர் லாரிகளையும் கொண்டு அமைக்கிறார்கள். அதனோடு ஒப்பிடும் போது, வெறும் மனித சக்தியை கொண்டு இவ்வளவு பெரிய ஏரியை வெட்டியது பிரமிப்பானது.

திருவாலங்காடு செப்பேட்டில் சோழகங்கத்தை "சலமயமான சயத்தம்பம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கங்கை வரை சென்று வென்றதற்காக அமைக்கப்பட்ட, "நீர் மயமான வெற்றித் தூண்" என்று.

அவன் தன் வெற்றியை கொண்டாட இந்த நீராலான வெற்றித் தூணை அமைத்திருக்கலாம். ஆனால் இந்த நீர்நிலை தான் இந்தப் பகுதியின் வளத்தைப் பெருக்கியது. இந்த நீர்நிலையை அமைத்தது தான் பெரு வெற்றி. இது தான் பயனுள்ளது. இந்த வெற்றிக்கான தூண் நீராலனாதல்ல, மக்கள் மனதாலானது.

# மனமயமான சயத்தம்பம் !

வெள்ளி, 25 ஜூலை, 2014

கங்கை கொண்ட சோழபுரம் - ஆலயம் மட்டுமல்ல...

ஆன்மீகவாதிகளுக்கு அது சிறப்பானதொரு ஆலயம். உள்ளே உள்ள பெருவுடையார் என அழைக்கப்படுகிற சிவலிங்கம் தஞ்சாவூர் பெரியகோவிலில் உள்ள பெருவுடையாரை விட அளவில் பெரிது என மகிழ்வோரும் உளர்.

             

ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள ஆலயம் கட்டப்பட்ட போது, மாமன்னன் ராசேந்திரன் மனதில் என்ன எண்ணம் இருந்திருக்கும் என்பது புரியவில்லை.

அரச குடும்பம் தங்குவதற்கு மாளிகைமேடு பகுதியில் அமைக்கப்பட்ட அரண்மனை அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. மைசூர் போன்ற மற்ற அரண்மனைகளை ஒப்பிடும் போது இது சிறிய அளவிலேயே உள்ளது.

அரண்மனையை ஒப்பிடும் போது கோவிலுக்கு ராஜேந்திரசோழன் கொடுத்த முக்கியத்துவம் கூடுதலாகவே தெரிகிறது. பாதுகாப்புக்கு அமைக்கப்பட்ட சுற்று சுவரானது வழக்கமான சோழர் கால ஆலயத்தை போலவே அமைக்கப்பட்டிருந்தாலும் தனித்துவம் தெரிகிறது.

கோவில் உள் நந்தியை தாண்டி நுழைந்தால் பெரிய மண்டபம். நூற்றுக்கும் மேல் தூண்களை கொண்ட மண்டபம் உள்ளது. இது மகாமண்டபம் என அழைக்கப்பட்டுள்ளது. மற்ற கோவில்களில் மண்டபம் தனியாக இருக்கும் அல்லது கர்ப்பகிரகத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும்.

மற்றக் கோவில்களில் இந்த மண்டபங்கள் ஆயிரங்கால் மண்டபம், மணிமண்டபம் என அழைக்கப்படும். இது நடன நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக கூட்டங்களுக்காக அமைக்கப்பட்டிருந்தாலும், இங்குள்ள அமைப்பு சமயங்களில் அரசவை கூடுவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் மகாமண்டபமோ.


            

கர்ப்பகிரகத்திற்கு முன்புறமுள்ள படிக்கட்டுகளில் ஏறினால், கர்ப்பகிரகத்திற்கு மேலுள்ள அறைகளுக்கு செல்ல முடியும். இது கோபுரத்திற்கு கீழுள்ள பகுதி. இந்தப் பகுதி பொருட்களை சேகரித்து வைக்கக்கூடிய இடமாகவும் பயன்பட்டிருக்கிறது.

போர்காலங்களிலோ அல்லது மற்ற காலங்களிலோ அரசாங்கத்தின் களஞ்சியமாக இருந்திருக்கக்கூடும். ரகசியமாக மற்றோர் பார்வைக்கு படாமல் இருக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதே போல, இந்த மேலே உள்ள அறை சுற்றி மூடப்பட்டிருந்தாலும் காற்று அருமையாக வருகிறது, குளிர்ச்சியாகவும் இருக்கிறது. அவசரகாலங்களில் ஒளிந்து கொள்ளவும் வசதியாக இருக்கும். மேலேயுள்ள கோபுர அடுக்கின் மேல் ஏறினால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பார்க்க முடியும், கண்காணிப்பு கோபுரமாக பயன்பட்டிருக்கிறது.


            

கீழே கர்ப்பகிரகத்திலும் இதே போன்று குளிர்ச்சியாகத் தான் இருக்கும். சிறப்பான கட்டிடக்கலை. கோபுரம் அமைக்கப்பட்டுள்ள முறையும் யோசித்துப் பார்க்க முடியாத கட்டிடக் கலை. அதிலும் தஞ்சை கோவிலிலிருந்து வித்தியாசப்படுத்தி நிறைய அம்சங்கள்.

இவ்வளவு தொழில்நுட்பம் முன்னேறியுள்ள இந்தக் காலத்தில் இந்த கோவிலுக்கு வரைபடம் வரைவதென்றாலும், பொருட்களை சேகரிப்பதென்றாலும், கட்டிமுடிப்பதென்றாலும் நினைத்து பார்க்க முடியாத விஷயம்.

ஆனால் அந்த காலத்தில் போக்குவரத்து வசதியில்லாமல், எந்திரங்கள் இல்லாமல், தொழில் நுட்ப வசதியில்லாமல் இத்தகைய பிரம்மாண்ட கோயிலை கட்டியது அசாத்திய சாதனை.

நுணுக்கமான திட்டமிடல், துல்லியமான ஒருங்கிணைப்பு, பெரும் மனித உழைப்பு என இத்தனையையும் கொண்டு வெறும் ஆலயமாக மாத்திரம் அமைத்திடாமல் அது பல கண்ணோட்டத்தோடே அமைக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.

கண்காணிப்புக் கோபுரம், ரகசிய பாதுகாப்பிடம், களஞ்சியம், கூட்ட அரங்கம் என பலவகையில் பயன்படும் முறையில் ஆட்சியையும் கணக்கில் கொண்டு இக் கோவிலை அமைத்துள்ளான் மாமன்னன் ராஜேந்திரன். அதனால் தான் வித்தியாசப்பட்டு உயர்ந்து நிற்கிறான்.

                        

# அரியணை ஏறி ஆயிரம் ஆண்டு, வரலாறாய் இருப்பாய் கணக்கில்லா ஆண்டு !

செவ்வாய், 22 ஜூலை, 2014

மக்கள் மனம் கொண்ட சோழன் !

                   

எங்கள் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் எந்த கிராமத்திற்கு போனாலும் சில பெயர்கள் அதிகமாக இருக்கும். சில கிராமங்களில் குலதெய்வங்களின் பெயர்களும், சில ஊர்களில் திணிக்கப்பட்ட சாமிகளின் பெயரும், சில கிராமங்களில் நல்ல தமிழ் இலக்கியப் பெயர்களும் இருக்கும்.

ஆனால் எல்லா கிராமங்களிலும் ஒரு பெயர் நீக்கமற நிறைந்திருக்கும். முதலில் இதை நான் விளையாட்டாகத் தான் கவனித்தேன். ஆனால் கூர்ந்து கவனித்தப் போது தான் ஒவ்வொரு ஊருக்கும் பத்து பேருக்காவது இந்தப் பெயர் இருந்ததை கவனித்தேன்.

சில பெயர்கள் சில தலைமுறைகளோடு நின்று விடும். சில பெயர்கள் ஒவ்வொரு சமுதாயத்துக்குள், சாதிக்குள் முடங்கிவிடும். சில பெயர்கள் ஏழை, பணக்காரன் வித்தியாசத்தைக் காட்டிவிடும்.

ஆனால் இந்தப் பெயர் எல்லா வித்தியாசங்களையும் உடைத்து, எல்லைகள் கடந்து பரவி இருக்கிறது. பிறகு மற்ற மாவட்டங்களையும் சற்றே கவனித்துப் பார்த்ததில் அங்கும் இந்தப் பெயர் ஊடுவியிருப்பதை உணர முடிந்தது. அந்தப் பெயர்….

“ராஜேந்திரன்”

இந்தப் பெயர் எங்கள் மண்ணில் பரவியிருப்பதில் அர்த்தம் இருக்கிறது. எங்கள் மண்ணின் பெருமையான கங்கை கொண்ட சோழபுரத்தை அமைத்தவன். அதனையே தலைநகராகக் கொண்டு ஆண்டவன். அங்கே புகழ் பெற்ற “கற்றளி”யை அமைத்தவன்.

இங்கிருந்து போர் நடத்தி, கங்கைகொண்டவன், கடாரம்வென்றவன், ஈழம் ஆணடவன் என்ற பல கீர்த்திகளுக்கு சொந்தக்காரன். இதன் காரணமாக இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தவன் என்ற வகையில் அவன் பெயர் வழங்கப்படலாம்.

ஆனால் வரலாற்றலாளர்களால் அதிகம் கொண்டாடப்படும் ராஜராஜசோழன் பெயரை விட ராஜேந்திரன் பெயரே அதிகம் புழங்குகிறது, அவன் ஆண்ட தஞ்சைப் பகுதியிலும், தமிழகத்திலும்.

தமிழகம் முழுதும் பல்வேறு மன்னர்களால் ஆளப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் பெயர் இந்த அளவிற்கு பெயரிடப்படுவதாகத் தெரியவில்லை. தென்மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் “பாண்டியன்” நிறைந்திருக்கும். ஆனால் அது ஒரு பரம்பரையின் பெயர்.

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் உயரம், தஞ்சை பெரியக் கோவிலின் உயரத்தை தாண்டினால் தந்தையை விஞ்சியதாக ஆகிவிடும் என்று, கட்டுமானத்தில் மாற்றம் செய்து உயரத்தை குறைத்து அமைத்தான்.

கூடுதல் உயரத்தை கணக்கிட்டு அடித்தளம் அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் கர்ப்பகிரகமும் அமைக்கப்பட்டு, மேல் தளம் வந்தவுடன் திடீரென கூரை குறுக்கப்பட்டிருக்கும். மேல் தளம் ஏறிப் பார்த்தால் தெரியும்.

ஆனால் பெயரிடப்படுவதில் தந்தையை விஞ்சும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டான் “இராஜேந்திர சோழன்”

வருகிற 24.07.2014 இராஜேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா.


                        

ராஜேந்திரனுக்கு பல்வேறு சிறப்புப் பெயர்கள் உண்டு. கங்கைகொண்ட சோழன், கடாரம் கொண்ட சோழன், முடிகொண்ட சோழன், மண்ணை கொண்ட சோழன். இனி இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

# மக்கள் மனம் கொண்ட சோழன் !