பிரபலமான இடுகைகள்

திங்கள், 18 ஜனவரி, 2016

மீண்டும் பராசக்தி

நீதிமன்றம் தலைவர் கலைஞருக்கு புதிதல்ல. வழக்குகளை சந்திப்பதும் புதிதல்ல. அவர் சந்தித்த வழக்குகள் ஏராளம். ஆனால் அவை எதுவும் சொத்துக் குவிப்பு வழக்கல்ல. ஊழல் வழக்குகளும் புனையப்பட்டவை என நிரூபணமாயின.

ஜெயலலிதா போல், ஊழல் வழக்குகளில் தீர்ப்பு வரப்பெற்று சிறை சென்ற தலைவர் அல்ல அவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர் அவர். கல்லக்குடியில் தமிழுக்காக போராடி சிறை சென்றவர் அவர்.

இந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழக மக்களுக்காக போராடிய போராட்டங்கள், ஈழத் தமிழருக்கான போராட்டம் என பல வழக்கிற்காக அவர் நீதிமன்றம் சென்றிருக்கிறார். ஜெயலலிதா இப்போது தொடுத்திருக்கிற அவதூறு வழக்கு அவருக்கு தூசு.

இந்த அவதூறு வழக்குகள் மூலம் அவரை முடக்கலாம் என ஜெயலலிதா நினைத்தால், அதை விட முட்டாள்தனமான எண்ணம் இருக்க முடியாது. இது போன்றவை தான் அவரை புத்துணர்வோடு வீறு கொண்டு எழ வைக்கும்.

அவர் அடிக்க, அடிக்க எழுகிற பந்து என்பதை பல முறை நிரூபித்திருக்கிறார் கலைஞர். இது ஜெயலலிதாவிற்கும் தெரியும். நள்ளிரவு கைதின் போது, புனைந்த வழக்கை , தொடர்ந்து நடத்த ஜெயலலிதாவிற்கே வெட்கமாகிப் போனது. வழக்கு காணாமல் போனது.

ராஜீவ் கொலை வழக்கில் அபாண்டமாக திமுக மீது குற்றம் சுமத்தி, ஒரு தேர்தலை வென்றார்கள். பிறகு ஜெயின் கமிஷன் வைத்த போது, அதையும் எதிர் கொண்டவர் தான் கலைஞர் அவர்கள். கொலைப் பழியை சுமத்திய போதே, கலங்காமல் நீதியை நிலை நாட்டியவர்.

அவரா இந்த அவதூறு வழக்குக்கு அஞ்சப் போகிறார். இன்று நீதிமன்றம் சென்று, எதற்கும் தயார் என காட்டி விட்டார். 92 வயதிலும் சிங்கம் என்பதை நிலை நாட்டி விட்டார். அரசியல் தலைவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு அவரே உதாரணம்.

1952ல் "பராசக்தி" திரைப்படத்திற்கு, தலைவர் கலைஞர் எழுதிய வசனம், 64 ஆண்டுகள் கழித்தும் இந்தக் காட்சிக்கு அப்படியே பொருந்துகிறதே....

"நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருகின்றது.
புதுமையான பல மனிதர்களை கண்டிருகின்றது.
ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல.
வழக்காடும் நானும் புதுமையான மனிதன் அல்ல.

வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக தென்படும் ஜீவன்தான் நான்.
குழப்பம் விளைவித்தேன்.
அவதூறு செய்தேன்.
குற்றம் சாட்ட பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
நீங்கள் எதிர்பார்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்க போகிறேன் என்று.
இல்லை. நிச்சயமாக இல்லை."

# இதுவும் மெகா ஹிட் தான். மீண்டும் பராசக்திடா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக