பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

சுழலும் சூரியன் - நேரடி அனுபவம்

5-ம் தேதி மாலையே தளபதி அவர்கள் சென்னையிலிருந்து கிளம்பி பெரம்பலூர் வந்து தங்கி விடுவதாக திட்டமிடப் பட்டிருந்தது. பெரியார் திடலில் ஒரு நிகழ்வில் பங்கேற்க வேண்டிய நிலையில், அதை முடித்து இரவு 10.30 மலைக்கோட்டை விரைவு ரயிலில் எழும்புரிலிருந்து கிளம்பினார்கள்.

விடியற்காலை 3 மணிக்கு வரவேண்டிய ரயில் வழக்கம் போல் தாமதமாக வந்தது. 

                          DSC08280.JPG

அரியலூர் ரயில் நிலையத்தில் கழகத் தோழர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு 4 மணிக்கு அரியலூரிலிருந்து புறப்பட்டு, பெரம்பலூர் அண்ணன் ராசா அவர்கள் அலுவலகத்தை அடைந்தார்கள். அப்போது 4.45 ஆகியிருக்கும்.

காலை பணிகள் முடித்து, உணவருந்தி, காலை 08.30 மணிக்கு காரில் ஏறிவிட்டார். வழி நெடுக வரவேற்பை ஏற்றுக் கொண்டு மலையாளப்பட்டியை அடையும் போது 09.45.

                         

 அங்கு கழகக் கொடியேற்றி விட்டு மேடைக்கு வந்த போது மணி 10.00. நண்பகல் 12.30 வரை நாற்காலியை விட்டு எழுந்திரிக்காமல் நிகழ்வை கவனித்தார் தளபதி. ( அதற்குள் நான் 4 தடவை எழுந்து மேடையிலேயே உலாத்திவிட்டேன்).

இரண்டு கி.மீ தள்ளியிருந்த தங்கும் இடத்திற்கு சென்று உணவருந்தி விட்டு அங்கு கழக கொடியை ஏற்றி வைத்து விட்டு சரியாக இரண்டு மணிக்கு மேடைக்கு வந்து விட்டார். மாலை 4.30 வரை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கலந்து கொண்ட 750 இளைஞரணி தோழர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார், 50 தொண்டரணி தோழர்களுக்கும் வழங்கினார். 
                                  

மணி 5.45, மலையாளப்பட்டியிலிருந்து கிளம்பினார்.வழிநெடுக சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள் வரவேற்பை கையசைத்து ஏற்றுக் கொண்டு பெரம்பலூர் அண்ணன் ராசா அவர்கள் அலுவலகம் வந்த போது மணி 7.00. 

                               

குளித்து உடைமாற்றி கிளம்பும் போது மணி 07.30. வழியில் வரவேற்புகளை ஏற்று அரியலூர் மேடை ஏறிய போது 08.15. 

                                                                 
                                                               
                                                                             
                              

தளபதி அவர்கள் பேச ஆரம்பித்தப்போது மணி 08.45. ஒரு மணி நேரம் பேசினார்கள். அரியலூரிலிருந்து கிளம்பும் போது மணி 09.55. கார் பயணம். வழியில் உணவருந்தி சென்னை சென்றடைய எப்படியும் நள்ளிரவு 02.30 ஆகியிருக்கும். 

15 நாள் அலைச்சலில் அசந்து நான் தாமதமாக எழுந்து, கூட்டம் குறித்த செய்திக்காக நாளிதழ்களை டீ'யோடு புரட்டியப் போது மணி காலை 9.00. மொபைல் அழைத்தது. 

"என்ன சிவசங்கர், களைப்பு நீங்கி எழுந்தாச்சா ? கூட்டம் சிறப்பு" அழைத்தவர் தளபதி தான், வேறு யார் !

# கூட்டிக் கழிச்சு பாருங்க, கணக்கு சரியா வரும்.... உழைப்புன்னா தளபதி தான்.

செவ்வாய், 15 அக்டோபர், 2013

தூக்கணாங் குருவி கூடுகள், பாடித் திரியும் பறவைகள் - கெடாத இயற்கை....

மலையாளப்பட்டி.

நல்லக் காரணப் பெயர். மலையை ஆள்பவர்கள் அந்தப் பட்டியில் இருக்கிறார்களா அல்லது மலை அந்தப் பட்டியை ஆள்கிறதா தெரியவில்லை. ஆனால் முப்புறமும் மலைகள் சூழ்ந்துள்ள அந்த ஊரை கண்டவுடன், அது நம் மனதை ஆளும் பட்டியாகி விடுகிறது. 

06.10.2013 அன்று இளைஞர் அணி பயிற்சி பாசறை நடைபெற்ற ஊர். பாசறை நடத்த வேண்டும் என்று சொன்ன அடுத்த நிமிடம் அண்ணன் ராசா அவர்கள் மனதில் தோன்றிய ஊர் இது தான்.


                          

பெரம்பலுரிலிருந்து தலைவாசல், ஆத்தூர் செல்லும் சாலையில் பயணித்தால் வேப்பந்தட்டையை தாண்டி கிருஷ்ணாபுரத்தில் இடது புறம் திரும்பி மலையாளப்பட்டி செல்ல வேண்டும். சமதரையில் செல்லும் போதே மலைகள் கண்ணில் பட ஆரம்பிக்கும்.

அந்த ஊருக்கு சென்றவுடன் உடன் வந்தவர்களுக்கு நம் பகுதியில் இப்படி ஒரு இயற்கை வளம் கொஞ்சும் ஊரா என்ற எண்ணம் தான் ஏற்பட்டது. பெரம்பலூர் பகுதியில் இருக்கும் மலைகள் மரங்கள் இல்லாமல் வறண்டு இருக்கும். ஆனால் இங்கு எங்கு திரும்பினாலும் பசுமை. மலை மீது காட்டு மரங்கள். அரசுக்கு சொந்தமான பகுதி.

மலையடிவாரத்தில் தென்னந்தோப்பு, பாக்குத் தோப்பு என விரிகிறது காட்சி. சமீபத்தில் இங்கு தான் அதிக பட்டாம்பூச்சிகளை பார்த்தேன். இயற்கை சூழல் கெடாமல் இருக்கிறது. மக்கள் வாழ்க்கை முறையும் கெடாமல் இருக்கிறது. வயல்களுக்கு நடுவே வீடு கட்டி வசிக்கிறார்கள்.

வயலில் திரியும் நாட்டுக் கோழிகள் கால்கள் நீண்டு இயற்கையாக இருக்கின்றன. அவை வசிப்பதற்கு நான்கு தூண்கள் நட்டு அவை மேல் கோழி வீடு. இது சிறு வயதில் கிராமங்களில் பார்த்தது. இங்கு தான் மிச்சம் இருக்கின்றன.

மின்சார கம்பிகளில் தூக்கணாங் குருவி கூடுகள். பாடித் திரியும் பறவைகள். மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, சோளம் என விவசாயம் உயிரோடு இருக்கிறது. மலையடி வாரத்தில் முயல்கள், காட்டுப் பன்றிகள் தொந்தரவும் விவசாயிகளுக்கு உண்டு.

                             

ஆழமான கிணறுகள் வெட்டி, அதில் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்து தான் விவசாயம். ஆனாலும் உழைப்பால் விளைவிக்கிறார்கள். நல்ல உழைப்பாளிகள் இந்த மக்கள்.

பாசறைக் கூட்டம் நடைபெற்ற இடம் மூன்று புறம் மலைகள் சூழ்ந்து இயறகை எழில் பொங்கி வழியும் இடம். கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் என்றும் இந்த ஊர் நினைவில் இருக்கும். இடம் நல்ல தேர்வு.


                             

# என்றும் மலையாளப்பட்டி மலை மனதை ஆளும்...

திங்கள், 14 அக்டோபர், 2013

கண்ணுக்கு தெரியாத சரஸ்வதிக்கு பூஜை செய்வதை விட.....

அமெரிக்க அதிபர் ஒபாமா தான் உலகின் உச்சபட்ச விருந்தினராக இருக்க முடியும். அதிகாரத்தில் இல்லாமல் அதிகாரத்தின் பிரதிநிதியாக இன்றும் பார்க்கப்படுபவர் இங்கிலாந்து ராணி எலிசபெத். உலகின் பெரும்பான்மையோரால் அறியப்பட்ட தொழிலதிபர் மைக்ரோசாப்ட் பில்கேட்ஸாக இருப்பார். உலகின் அதிக புகழ் வாய்ந்த நடிகராக டாம் க்ரூய்ஸ் இருப்பார்.

இந்த வரிசை அதிகாரம் வாய்ந்தவர்கள், ராஜ குடும்பம், தொழிலதிபர்கள், நடிகர்கள், தர்மம் செய்பவர்களுக்கு என இருக்கும். இது எதுவும் இல்லாமல் ஒருவர் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஒபாமாவாலேயே விருந்தினராக அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்.

                           Malala Yousafzai: President Barack Obama, First Lady Michelle Obama, and their daughter Malia meet with Malala Yousafzai, the young Pakistani schoolgirl who was shot in the head by the Taliban a year ago, in the Oval Office: Malala Yousafzai meets the Obamas at the White House


                      

"டைம்ஸ்" பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற்றார். இங்கிலாந்து ராணியால் உபசரிக்கப்பட்டார். அய். நா.சபையில் உரையாற்றினார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு கடைசி நிமிடத்தில் கிடைக்கவில்லை.


                         


இத்தனையும் 16 வயதில். ஆனால் அதற்கான விலை பெரிது. 

அவர் மலாலா. பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் மாநிலத்தை சேர்ந்தவர். ஸ்வாட் ஒரு கால கட்டத்தில் இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளான தலிபான்கள் கையில் இருந்தது. அப்போது பெண்கள் படிக்கக்கூடாது என அவர்கள் கட்டளைப் பிறப்பித்தனர். அது மலாலாவின் மனதை பாதித்தது. மலாலா பி.பி.சிக்கு ஒரு கட்டுரை எழுதினார், தலிபான் ஆதிக்கம் தம் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் பெண் கல்வி குறித்தும். அது 2009, மலாலாவுக்கு 11 வயது.

நியுயார்க் டைம்ஸ் மலாலா குறித்து ஒரு குறும்படம் எடுத்தது. பாகிஸ்தானில் மெல்ல பிரபலமானார் மலாலா. இது தலிபான்களை எரிச்சலூட்டியது. ஆனால் இந்தக் காலக் கட்டத்தில் ராணுவம் ஸ்வாட் பகுதியை தன் கைக்கு கொண்டு வந்திருந்தது. மலாலாவின் பேட்டிகள் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் இடம் பெற்று வந்தது.

பதினைந்தாவது பிறந்தநாள் கொண்டாடி மூன்று மாதம் ஆகியிருந்தது. அப்போதெல்லாம் அவருக்கும் அவர் தந்தைக்கும் தலிபான்களிடமிருந்து எச்சரிக்கை வந்துக் கொண்டிருந்த நேரம். எப்போது வேண்டுமானாலும் சுடப்படலாம் என உடன் இருந்தோரே எச்சரித்து வந்தனர். ஆனால் தலிபான்கள் அது வரை பெண்களை தாக்கியதில்லை, தந்தை தாக்கப்படலாம் என்பது எண்ணம்.

2012 அக்டோபர் 9. மலாலா தேர்வு முடித்து நண்பகல் பள்ளியில் இருந்து வேன் ஏறுகிறார். வேன் ராணுவ செக் போஸ்டை தாண்டுகிறது. தாடி வைத்த ஒரு இளைஞன் ரோட்டின் குறுக்கே வந்து வேனை கைநீட்டி நிறுத்த சொல்கிறான். நிற்கிறது. டிரைவர் அருகில் அவன் வந்து பேசும் போது இன்னொரு இளைஞன் வேனின் பின்புறம் வருகிறான்.

"யார் மலாலா ?". சக மாணவிகள் யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால் அனைவரும் பயத்துடன் மலாலா முகத்தை பார்க்கின்றனர். வேனில் முகத்தை மூடாமல் இருக்கும் ஒரே பெண் மலாலா. உணர்ந்து கொள்கிறான், கேள்வி கேட்டவன். கைத்துப்பாக்கி உயர்கிறது. இடது கண்ணில் குண்டு பாய்கிறது. அடுத்து இடது தோள்பட்டை. உடன் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் மீதும் குண்டுகள் பாய்கின்றன.

                           

பெஷாவார் ராணுவ மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு இங்கிலாந்து பர்மிங்காம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தலை எலும்பு முறிந்து மூளையில் ஏற்பட்ட அதிவால் வீங்கிவிட்டது. ஒரு முக நரம்பில் ஏற்பட்ட பாதிப்பில் இனி கண்களை திறந்து மூட முடியுமா, மூக்கை அசைக்க முடியுமா, புருவத்தை ஏற்ற முடியுமா, புன்னகைக்க முடியுமா என்ற நிலை எழுந்தது.

எல்லாவற்றையும் தாண்டி வந்தார் மலாலா. லண்டனிலேயே படிக்கிறார். பெண் கல்விக்கான குரலை ஓங்கி ஒலிக்கிறார். தலிபான்களின் அச்சுறுத்தலும் தொடர்கிறது.

இன்னொருபுறம் பாகிஸ்தானில் மலாலா சி.அய்.ஏ-வின் ஏஜெண்ட் என்ற பிரச்சாரமும் நடக்கிறது. துப்பாக்கிச் சூடு சம்பவம் சித்தரிக்கப்பட்டது, பாகிஸ்தானுக்கு எதிராகாவும், இஸ்லாமிய பழமைவாதத்திற்கு எதிராகவும் ஊடகங்கள் கட்டமைக்கும் பிம்பம் என்ற குரலும் எழுகிறது.

மலாலாவின் சமீப குரல் "நான் பாகிஸ்தானின் பிரதமராவேன். அதிக நிதியை கல்விக்கு ஒதுக்குவேன். என் மொத்த தேசத்திற்கும் பணிபுரியும் டாக்டராவேன். எல்லா குழந்தைகளும் கல்வி பெற, பள்ளி செல்ல, கல்விதரத்தை உயர்த்த உதவுவேன்".

எதுவாக இருந்தாலும் கல்வியின் தேவையை சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்கும் குரல் மலாலா, உயிருக்கான அச்சுறுத்தல்களை மீறி. அந்தக் குரல் எல்லா தேசத்திற்கும் தேவையானது. இந்தியாவிற்கும்....

# கண்ணுக்கு தெரியாத சரஸ்வதிக்கு பூஜை கொண்டாடும் வேளையில், வாழும் கல்வியின் அடையாளம் மலாலாவின் முழக்கத்தை நடைமுறைப்படுத்த முனைவோம் !



வெள்ளி, 11 அக்டோபர், 2013

பொதுக் கூட்டம் போட்டுப் பார்....

மிகுந்த மகிழ்ச்சி.

வீட்டக் கட்டிப் பார், கல்யாணத்தப் பண்ணிப் பார். இது தெரிஞ்ச சேதி தான். அதிலும் இரண்டையும் சேர்த்து ஒரே நேரத்தில் மேற்கொள்வது எவ்வளவு டென்ஷன்னு அனுபவிச்சா தான் தெரியும்.

அது போல ஒரே நேரத்தில் தளபதி அவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம், இளைஞர் அணி பயிற்சிப் பாசறை. பொதுக் கூட்டம் அரியலூரில், பாசறை பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில்.

                                                                                                                                                                                                        இடைப்பட்ட தூரம் 70 கி.மீ. ஒரு பயணம் போய் வந்தாலே 140 கி.மீ. அரைநாள் போய் விடும். 16-ந் தேதி முதல் விசிட் துவங்கியது. இது வரை ஏழு முறை பயணம். மற்ற நாட்களில் நிதி திரட்டும் பயணம்.

ஒரு நாள் அரியலூர் மாவட்டக் கழக கூட்டம், ஒரு நாள் இளைஞர் அணி கூட்டம், மாணவர் அணி கூட்டம். அடுத்து இதே போல பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டங்கள்.


                                                                                                                                                                                                                                      20 நாட்களுக்கு முன்பு தளபதி அவர்கள் தேதி உறுதி செய்யப்பட்டது. அன்று ரன்னிங் ரேஸ் ஆரம்பித்தது, ரிலே ரேஸும் கூட. இன்று தான் வெற்றிகரமாக முடிந்தது. அது தான் மிகுந்த மகிழ்ச்சி.

16-ந் தேதி சென்ற போது, மலையாளப்பட்டியில் 3 இடங்களை பார்வையிட்டோம். அதில் ஒரு இடம் அனைவரும் விரும்பும் வகையில் அமைந்தது. அது முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிளைக் கழக செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் இடம்.

பச்சை மலையின் அடிவாரம். மூன்று புறம் மலைகள் சூழ வயல் வெளி. அந்த இடத்தை தேர்வு செய்தவுடன் அவர் வயல்வெளியை சுத்தம் செய்து ரோலர் ஓட்டி சமன் செய்தார்.

பந்தல் போடும் பணி துவங்கியது. அன்பகம் கலை அவர்கள் வந்து பார்வையிட்டு சென்றார். அண்ணன் ஆ.ராசா அவர்கள் மூன்று நாள் தங்கி பணியை செம்மைப் படுத்தினார்.

அவர் மூன்று நாள் பெரம்பலூரில் தங்கிப் பணியாற்றியது நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியது. அதே போல நிகழ்ச்சியும் மெருகேறியது. 

 பயிற்சி பாசறைக் கூட்டம் கட்டுக்கோப்புடனும், எழுச்சியோடும் நடைபெற்றது. அரியலூரில் நிதியளிப்பு பொதுக் கூட்டம் பெருத்த வெற்றியாக அமைந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ் நாளில் மறவாது. தளபதி அவர்களுக்கும்.

 

# மிகுந்த மகிழ்ச்சி....

வெள்ளி, 4 அக்டோபர், 2013

அவர் நடக்கறதையே ஒரு பி.எச்.டி செய்யலாம்....

என்ன தான் ரஜினி ரசிகனாக இருந்தாலும் கமல் நடிப்பை ரசிப்பது போல், எம்.ஜி.ஆரின் துள்ளல் நடிப்பின் ரசிகனான நான் சிவாஜியை ஒதுக்க முடியவில்லை. சற்றே மிகை நடிப்பு என்ற திரை விமர்சகர்களின் வாதத்தை ஒப்புக் கொண்டாலும், அதிலும் ஒரு சுவை இருக்கத் தான் செய்கிறது.

அதிலும் சிவாஜியின் நடிப்பு, உடல் மொழி, முகபாவம், கண்ணசைவு, புருவ சுளிப்பு எல்லாமே வேறொருவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இதை எல்லாம் தாண்டி சிவாஜியின் நடை இருக்கிறதே.....

வசனம் பேசும் போது நடப்பது சரி. சில பாடல்களில் அவர் நடப்பதை வைத்தே முடித்திருப்பார்கள். அதில் அவர் காட்டும் வித்தியாசங்கள், அடடா. அதில் இன்பமான பாடலுக்கு ஒரு நடை, சோகப்பாடலுக்கு ஒரு நடை.

“வசந்தமாளிகை” திரைப்படத்தில், தன் காதலிக்காக தான் வடிவமைத்த வசந்தமாளிகையை சுற்றி தன் காதலியிடம் சுற்றிக் காட்டுவார். அப்போது ஒரு நடை நடப்பார், அதை பார்க்க வேண்டும்.

                   

நடக்கும் போது படி ஏறி ஒரு இடைவெளி விட்டு நிற்பார். அப்போது உடலில் ஒரு அசைவும் இல்லாமல் வலது கை மட்டும் ஆடிக் கொண்டிருக்கும். அப்படியே வலது காலில் ஒரு ஜெர்க் கொடுத்து விட்டு திரும்ப நடக்க ஆரம்பிப்பார்.

இந்தக் காட்சிகள் புதுமுக நடிகர்களுக்கு ஒரு பாடத்திட்டமாகவே வைக்கலாம். தொடர்ந்து பேசிக் கொண்டே நடப்பார். நடக்கும் போதே ஒரு மெல்லிய “யூ டர்ன்” அடிப்பார். கைகளை மேலும் கீழுமாக கொண்டு சென்று பேசியவாறே இரண்டு கைகளையும் தட்டுவார். நாட்டியம் தான். மியூட் போட்டு விட்டு ரசிக்கலாம்.

கண்ணாடி மாளிகையை சுற்றிப் பார்த்து விட்டு வாணீஸ்ரீ திரும்ப ஓடி வருவார். அப்போது கேமரா சைடில் இருக்க சிவாஜி காத்திருப்பார். பின்புறம் கையை கட்டிக் கொண்டு இடது காலை லேசாக மடக்கி நிற்பார். சிம்ப்ளி சூப்பர். அப்புறம் தான் “மயக்கம் என்ன” பாடல் துவங்கும்.

இந்தப் பாடலில் நடன அசைவுகளே இருக்காது. நடையிலும், அசைவிலுமே அசத்துவார். பாடல் முடியும் தருவாயில் சிறு நடன அசைவு காட்டுவார். அப்படியே “இரண்டு மனம் வேண்டும்” பாடலில் தளர்ந்த நடை போட்டு சோக ரசம் பிழிவார்.

அவரது நடை காட்சிகளை மாத்திரம் எடுத்துக் கொண்டு ஒரு பி.எச்.டி செய்யலாம். சிவாஜிக்கு பிறந்தநாள்.

# பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார், அவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் !

என்னாச்சி.....

“டொம்” ஹாலில் இருந்து சத்தம் கேட்டது....

“என்னப்பா சத்தம் ?”

“வரேன்பா”

பெரிய மகன் தன் தம்பியுடன் வந்தார்.

“என்னப்பா சத்தம் ?”

“என்னாச்சி

நாம புட்பால் விளையாண்டோமா...

ம். நீ பால அடிச்சல்ல...

ஓ, நான் திருப்பி ஓங்கி அடிச்சனா ?

மேல போச்சில்ல...

அப்ப டியூப் லைட்ல பட்டு சத்தம் வந்துச்சா ?

அங்க அடிபட்டுருக்கும்

டியூப் நகர்ந்திருக்கும்

அது ஒன்னும் பிரச்சின இருக்காது...

கொஞ்சம் திருகினா எரியும்...”

# நடுவுல கொஞ்சம் என்னக் காணோம்.....


                                               

செவ்வாய், 1 அக்டோபர், 2013

சட்டசபையில் உட்கார்ந்து பெஞ்ச தட்டிகிட்டு ...

சைதை இடைத் தேர்தலில் பொய்வழக்கில் கைதாகி ( விபரத்திற்கு முந்தைய ஸ்டேடஸ்), நீதிபதி முன் நிறுத்தப்பட்ட போது, அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் காவல் துறையினர் திணறினர். பொய் வழக்கு என உணர்ந்தாலும், 15 நாட்கள் ரிமாண்ட் அறிவிக்கப்பட்டது.

வெளியில் வந்த போது, அருகே வந்த இன்ஸ்பெக்டர் “இந்த கேஸ் நிக்காது. கவலைப்படாதீங்க” என்றார். சென்னை மத்திய சிறையில் 3 நாட்கள், வேலூர் சிறையில் 4 நாட்கள் இருந்து, ஜாமீன் கிடைத்து சென்னையில் ஒரு மாதம் கண்டிஷன் பெயிலில் கையெழுத்துப் போட்டது தனிக் கதை.

வழக்கு விசரணைக்கு வந்தது. சைதாப்பேட்டை கோர்ட். குற்றம்சாட்டப்பட்ட நாங்கள் அய்ந்து பேரும் ஒழுங்காக ஆஜராகிக் கொண்டிருந்தோம். புகார் கொடுத்த இன்பத்தமிழன் அமைச்சராகி பிஸியான காரணத்தினால், நீதிமன்றத்திற்கு வராமல் தொடர்ந்து வாய்தா கேட்க, ஒரு கட்டத்தில் நீதிபதி கோபமாகிவிட்டார்.


                     


“ ஏன் புகார்தாரர் வரவில்லை ?” எனக் கேட்க, காவலர் “அவர் அமைச்சராகி தொகுதிக்கும் சென்னைக்கும் பிஸியாக பயணிக்கிறார், பார்க்க முடியவில்லை” என சொல்ல. “டி.வீ பார்ப்பீங்களா ?, செய்தி பாருங்க. சட்டசபையில் உட்கார்ந்து பெஞ்ச தட்டிகிட்டு இருப்பாரு. போய் சொல்லிடுங்க. அடுத்த முறை வரலன்னா வாரண்ட் போடப்படும்” அப்படின்னார்.

அடுத்த வாய்தாவிற்கு ஆஜரானார் இன்பத்தமிழன். போலீசார் கைது செய்த போது அவர் சம்பவ இட்த்தில் இல்லாததால், அவரால் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. புகாருக்கும் அவரது சாட்சியத்திற்கும் ஏக வித்தியாசம். விட்டத்தை பார்ப்பதும், தரையை பார்ப்பதுமாக நின்று ஒப்பேற்றிவிட்டு கிளம்பினார்.

வழக்கில் நிருபித்து தண்டனை வாங்கித் தர முடியாத என்ற எண்ணம் வந்ததால், வழக்கில் திருத்தம் மேற்கொண்டு புதிதாக ஒரு செக்சன் சேர்த்தனர். கைது செய்த போது, இன்ஸ்பெக்டரை நாங்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு.

எங்களை கைது செய்து அழைத்து வந்தவர்கள் போலீசார். இன்ஸ்பெக்டர் கட்டிடத்திற்கு வெளியே நின்றிருந்தார். மீடியாவை சேர்ந்தவர்கள் கேமராவோடு நின்றிருந்தனர். அப்படி இன்ஸ்பெக்டரை தாக்கியிருந்தால் கேமரா கண்களுக்கு மாட்டியிருக்கும்.

அதற்கு பிறகு அரசு தரப்பில் கொடுத்த புதிய திருத்தத்தை நீதிபதி ஏற்றுக் கொள்ளாததால், உயர் நீதிமன்றத்திற்கு அரசே ஒரு அப்பீல் சென்றுள்ளது. இப்போதும் வழக்கை சந்திக்க நாங்கள் ரெடி. ஆனால் அரசு முட்டுக்கட்டை போட்டு வைத்துள்ளது. வழக்கமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் இந்த வேலையை செய்வார்கள்.

வழக்கு முடியாததால், இரண்டு தேர்தலாக அபிடவிட்டில் இந்த வழக்கின் விவரம் இடம் பெற்று வருகிறது. நம்மாளுங்க இத வச்சி என்னை கிரிமினலா பட்டியலிடுவாங்க.

அதனால் அம்மா அவர்களுக்கு ஒரு கோரிக்கை. இந்த வழக்கை சீக்கிரம் முடிக்க நீங்க தான் உதவனும். நீங்க சொத்துக் குவிப்பு வழக்கில் கேட்பது போல், நான் கேட்கும் நபர்களை நீதிபதியாகவும், அரசு வழக்கறிஞராகவும் நியமித்தால் இந்த வழக்கை முடித்துக் கொள்வேன்.

# கருணை மிகு....